Cricket Countdown....

Thursday, December 30, 2010

ஒன்றா ரெண்டா பல்புகள்...

பல்பு 1 :
சென்ற மாத கடைசி, வீட்டுக்கு மளிகை சாமான்லாம் வங்கிட்டு வந்து டயர்டு ஆகிடுச்சு. எல்லா சாமான்களையும் கொண்டு வந்த பெட்டியோட ஹால்ல வெச்சிட்டு நான் ஷோபால உட்கார்ந்துட்டேன். என் பொண்ணு ஒண்ணு ஒண்ணா எடுத்து வெளில போட்டு விளையாட ஆரம்பிச்சா.

நான், “வெளில தூக்கி போட்டாதம்மா, எல்லாத்தையும் அடுக்கனும்”னு  பொறுமையா  சொல்லி பார்த்தேன் கேட்கல. கோபம் வந்து “ஷமி,  ஏன் இப்படி  பண்ணிட்டு இருக்கற? என்னது இது?”னு தாங்க கேட்டேன். உடனே  அவ  கைல இருந்த Cheese டப்பாவை , என்கிட்ட காட்டி “இது Cheese"னு சொல்லுறா.... அவ்வ்வ்வ்... பல்பு...

பல்பு 2:

ஒருநாள் நான் சாப்பிட்டு இருந்தேன். என் பொண்ணு என் கிட்ட வந்து சாப்பிட “ஆ” என காட்டினால் நான் சோறு ஊட்டினேன். மறுபடி வந்து “ஆ” காட்டினாள், சோறு ஊட்டினால் வேண்டாம்னு சொல்லிட்டு காய் வேணும்னு கேட்ட. நான் காய் முன்னாடி வெச்சி கொஞ்சம் சாதத்தையும் சேர்த்து ஊட்டிடேன்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து “ஆ” காட்டினால். நாமதான் அறிவாளிதனமா ஒரு டெக்னிக் கண்டு பிடிச்சி இருக்கோம்ல. அதையே பாலோ பண்ணி காய் முன்னாடி வைத்து சாததுடன் ஊட்ட பார்த்த கொஞ்சமா வாயை திறந்து காயை மட்டும் சாப்பிட்டு விட்டு ஓடிவிட்டால். மறுபடியும்  என்கிட்ட வந்தா “ஆ” காட்டுவானுதான் நானும்  மாதிரி எதிர்பார்த்தேன். ஆனா கிட்ட வந்தவ, “காய்”னு கேட்டு கைய நீட்டி வங்கிட்டு போய்ட்டா.... அவ்வ்வ்வ்வ்....சமாளிக்க முடியல....

பல்பு 3:
எந்த பொருளை யாருக்கிட்ட இருந்து வாங்கினாலும் “தாங்க்ஸ்” சொல்லனும்னு சொல்லி கொடுத்தோம். அவளும் எங்க கிட்ட குடிக்க பால் வாங்கினாலும், பொம்மை வாங்கினாலும் “தாங்க்ஸ்” சொல்ல ஆரம்பிச்சா. ஒருநாள் டீவி பார்த்துட்டு இருந்தேன். ரிமோடை வேற இடத்துல வெச்சிட்டேன். சரினு அங்க விளையாடிட்டு இருந்த என் பொண்ணை கூப்பிட்டு அந்த ரிமோட்டை எடுத்து வர சொன்னேன்.

ரிமோட்டை எடுத்துட்டு வந்து என் கைல கொடுத்துட்டு என்னையே பார்த்துட்டு நின்னா, நான் கண்டுக்கலை. கொஞ்சம் நேரம் என்னையே பார்த்து நின்னவ, என்கிட்ட “தாங்க்ஸ்”னு சொல்லிட்டு ஏதோ திட்டிட்டே போய்ட்டா..... அவ்வ்வ்வ்வ்.... இது பல்பா.... இல்ல பாடமா?....

Monday, December 27, 2010

தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 4

ஆணி அதிகமானதால் சினிமா புதிர் பதிவு ரெடி பண்ண இந்த மாதம் கொஞ்சம் லேட் ஆகிடுச்சி. இருந்தாலும் மக்களை சும்மா விட முடியுமா. இதோ வந்தாச்சு, இந்த மாதத்திற்கான தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 4. இந்த மாசம் புதிர்  கொஞ்சம் சுலபமாதான் எனக்கு தெரியுது. நாளைக்கு க்ளு குடுக்க அவசியம்வராம இன்னைக்கே முடிச்சுடுவீங்கனு நினைக்கிறேன். பார்க்கலாம்....

விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், படத்தை வைத்து அனைத்து ஆங்கிளிலும் யோசித்து பாருங்கள். விடையை கண்டு பிடித்துவிடலாம். 


உதாரணம்:

விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்

விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.


1)

2)

3)

4)

5)


6)


7)


8)
mona lisa



9)

10)



Courtesy Questions:


11)
Courtesy: இம்சை அரசன் பாபு

12)

Courtesy: எஸ் கே

Courtesy Questions வரவேற்கப்படுகின்றன. என் மெயில் ஐடி க்கு (arunprasath.gs@gmail.com) அனுப்புங்க.


விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்

டிஸ்கி: படங்களை டிசைன் செய்து தந்து உதவிய என் மனைவி காயத்திரிக்கு நன்றி.

 

Wednesday, December 22, 2010

கேப்பிரியல் தீவு....2

சென்ற பதிவின் தொடர்ச்சி.....

நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் தண்ணீரில் விளையாடி கொண்டு இருந்தோம்.... திடீரென படகின் வேகத்தை குறைத்து திசைதிருப்பி நிறுத்தி... அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறி கடலின் ஒரு பகுதியை பார்க்க சொன்னார்கள்.....

அழகான நீல கடலின் அமைதியான நீரை கிழித்துக்கொண்டு “ஜிவ்” என வெளியே துள்ளி குதித்தது ஒரு டால்பின்....

உடனே, சுமார் 20 டால்பின்கள்  ஒன்றன்பின் ஒன்றாய் எங்கள் படகை சுற்றி திரிந்தன. எல்லா டால்பின்களும் “பாட்டில் மூக்கு” டால்பின் வகையை சார்ந்தவை. நாங்கள் சென்றது டால்பின்களின் இனப்பெருக்க சீசனாம், அப்பொழுது மட்டுமே இவை இந்த பகுதிக்கு வருமாம்.அவை துள்ளி விளையாடிய அழகே அழகு.


அவை சிறிது நேரம் விளையாடிவிட்டு சென்றதும், மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. கடல் நடுவில் மிகப்பெரிய மலை ஒன்று இருந்தது. எரிமலை வெடிப்பால் உருவானது என சொன்னார்கள். அதை கடந்தவுடன் கப்பலின் ஆட்டத்தாலும் என்னுடைய ஓவர் ஆட்டத்தலும் எனக்கு தலை சுற்ற... நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)

எரிமலைப்பாறை?!

கேப்பிரியல் தீவை அடைந்தவுடன் எங்களை சிறு ரப்பர் படகு மூலம் தீவில் எங்களை விட்டனர்... மதியம் சாப்பிட வந்து பிக் அப் செய்வதாக சொன்னார்கள். கடலில் குளித்து தீவை சுற்றி பார்த்தோம். திருமணம் செய்வதற்காக பிரத்தியேக திறந்த வெளி சர்ச் ஒன்று இருக்கிறது. எப்படிலாம் யோசிச்சி கல்யாணம் பண்ணுறாங்க?

கேப்பிரியல் தீவு


அங்கு, சில கடல்சார் இடங்களில் மட்டுமே பார்க்க கூடிய கயிறு போல நீண்ட வால் கொண்ட Phaethon lepturus (paille en queue) பறவைகளை காண முடிந்தது. இவை Air Mauritius ன் லோகோ என்பது கூடுதல் செய்தி. மீண்டும் மதியம் படகிற்கு சென்று லஞ்ச் முடித்து கடலில் ஆட்டம் போட்டோம்.

Phaethon lepturus

3 மணிக்கு கிளம்பி, வந்தது போலவே முழு வலையையும் நாங்கள் ஆக்கிரமித்து வந்து சேர்ந்தோம். இப்பொழுதும் கடல் நீரில நன்றாக நனைந்து... சுடும் வெயிலில் காய்ந்தும் வந்து சேர்ந்தோம்.

மறுநாள் தான் அதன் பின்விளைவுகள் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம் போட்ட எங்கள் அனைவரின் தோலும் உறிய ஆரம்பித்தது (skin burn).

நீச்சல் குளம் இல்லைங்க...கடல்தான். குளிப்பது நம்ம நண்பர்

திரும்பி வந்த பிறகு சொல்லுறாங்க... ஏதோ லோஷன்லாம் போட்டுட்டு தான் கடல் தண்ணில ஆடனுமாம்... அதனால தான் வெள்ளைகாரங்க நிழல்ல உட்கார்ந்து இருந்தாங்கலாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

டால்பின் வீடியோ:
கிட்டதட்ட 50 MB கொண்டது. அதை Compress செய்து 3gp யாக Convert செய்ததில் clarity குறைந்துவிட்டது. 50 MB original video தரவேற்றவும் முடியவில்லை. அதனால் அட்ஜெஸ்ட் செய்து பார்த்துக்கோங்க.





Monday, December 20, 2010

கேப்பிரியல் தீவு....

என்னுடைய பயண அனுபவங்கள் வரிசையில் இன்று ஒரு வித்தியாசமான பயணம் போகலாம். பாராசூட்டுக்கு அடுத்து இப்பொழுது கடல் வழி பயணம். டால்பின்களின் வரவேற்புடன்...

கேப்பிரியல் தீவு டாப்ல இருக்கு...
 
மொரீசியஸ் தீவின் வடக்கு முனையில் உள்ள Grandbay கடற்கரையிலிருந்து கடல் வழியாக சுமார் 1.30 மணி நேர பயண தொலைவில அமைந்துள்ளது Gabriel Island.  ரொம்ப நாளா பிளான் செஞ்சி ஒரு ஆளுக்கு மொரீசியன் ரூபாய் 1200 கொடுத்து அட்வான்ஸ் புக் செய்து கிளம்பினோம். படகில் மொத்தம் கிட்டதட்ட 25 பேர். எங்க கோஷ்டிதான் பெரிய கோஷ்டி... மற்றவர்கள் எல்லாம் வெள்ளைகாரர்கள்...
நாங்க போன படகு....

படகு ஒரு ஸ்பீட் போட் மாதிரி இருக்கும். படகின் முன்னால் இரு வலை போல கட்டி அதிலும் அமர்ந்து கொள்ளலாம். வலைக்கு கீழே கடல் தண்ணீர் தெளிக்கும். வலை கட்டி இருக்கு கம்பிகளில் காலை தொங்க விட்டு கடல் தண்ணீரை தொட்டபடியும் பயணம் செய்யலாம். எங்க கோஷ்டி  மொத்த வலையையும் ஆக்கிரமிச்சாச்சு.... வெளிநாட்டினர் டீசண்டாக படகில் நிழலில் அமர்ந்து கொண்டனர். 

ஹீரோ எப்பிடி...

ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே....கொடுத்த காசுக்கு மதியம் சாப்பாடும்... Unlimited Beer and  Fruit juice FREE....
படகில் ஒரு ஓட்டுனரும் 3 உதவியாளர்களும் வழக்கமான ரூல்ஸ் மற்றும் சில safety tips களை விளக்கினர். பெரும்பாலானோருக்கு படகு போடும் ஆட்டத்தில் வாந்தி வருமாம். எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க சொன்னார்கள்.

கிளம்பிய கொஞ்ச நேரத்தில் படகு போட்ட ஆட்டத்தை விட தண்ணீரை காலால் தொட்டு நாங்கள் போட்ட ஆட்டம் தான் அதிகம். தெளிவான வானமும், நீல கடலும், துள்ளும் தண்ணீரும், ஈரக்காற்றும் கண்டிப்பாய் வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள்.

நீலக்கடல்....தொலைவில் தெரியும் மலையை அடுத்து தான் கேப்பிரியல் தீவு

நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் தண்ணீர் விளையாடி கொண்டு இருந்தோம்.... திடீரென படகின் வேகத்தை குறைத்து திசைதிருப்பி நிறுத்தி... அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறி கடலின் ஒரு பகுதியை பார்க்க சொன்னார்கள்.....

அழகான நீல கடலின் அமைதியான நீரை கிழித்துக்கொண்டு “ஜிவ்” என வெளியே துள்ளி குதித்தது ஒரு டால்பின்....

தொடரும்....

டால்பின்களின் வரவேற்பு...




Tuesday, December 14, 2010

2010 ன் எனக்கு பிடித்த 10 திரைப்படங்கள்...


நம்ம சிரிப்புபோலிசு 2010 ல வெளிவந்து தனக்கு பிடித்த திரைப்படங்களை வரிசைப்படுத்தி டாப் 10 போட்டு இருந்தாரு... என்னையும் தொடர்பதிவு எழுத கூப்டுட்டாரு. இதோ நான் பார்த்த, எனக்கு பிடித்த 2010 ல் வெளிவந்த படங்கள்....

1.கோவா
2. தமிழ்படம்
3. விண்ணைதாண்டி வருவாயா
4.ரேணுகுண்டா
5.  சிங்கம்
6. இராவணன்
7. களவாணி
8. மதராசபட்டினம்
9. பாஸ் என்கிற பாஸ்கரன்
10. எந்திரன்


எல்லா படங்களும் அவை ரிலீஸ் ஆன வரிசையில் கொடுத்துள்ளேன்....

லிஸ்ட்டை மயிரிழையில் தவறவிட்ட படங்கள்....

11. பையா
12 வம்சம்
13. தில்லாலங்கடி



யாரது,

மைனா, நந்தலாலா, அங்காடிதெரு, சுறா....

இதெல்லாம் மிஸ்சிங்னு சண்டைக்கு வர்றது.... நல்லா பாருங்க “நான் பார்த்த” படங்களின் லிஸ்ட் இது.....எனக்கு மட்டும் மத்த படங்களை பார்க்கனும்னு ஆசை இல்லையா என்ன?.... மொரீசியஸ்ல எந்த தமிழ்படமும் ரிலிஸ் ஆகுறது இல்லைங்க...

ரிலிஸ் ஆனா ஒரே படம் எந்திரன்தான்... அதோட நிலைமைய ஏற்கனவே  ஒரு பதிவுல சொல்லிட்டேன்... தலைவர் படத்துக்குகே இந்த நிலைமைன்னா மத்த படங்கள் எப்படி ரிலீஸ் ஆகும்?  இதுல மொரீசியஸ் நாட்டின் தேசிய மொழிகள்ல தமிழும் ஒன்று... இந்த நாட்டு ரூபாய் நோட்டுல தமிழ்லயும் எழுதி இருக்காங்க..... என்ன கொடுமைங்க இது....


2010ல ரீலிஸ் ஆன படங்கள்ல மொத்தம் 13 படம்தான் பார்த்து இருக்கேன்... அந்த லிஸ்ட்தான் இது... படத்தை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு படத்தையும் டவுண்லோட் பண்ணி பார்க்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

அடுத்து, இந்த தொடர்பதிவுக்கு சிரிப்பு போலிஸ் பிளாகில் கடும் எதிர்ப்பு தெரிவித்த 


3 பேரையும் இந்த தொடர்பதிவு எழுத வருமாறு மிரட்டுகிறேன்....

Friday, December 10, 2010

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...

பெண் மனசை வெளிப்படுத்தும் அல்லது பெண் குரலில் ஒலித்த எனக்கு பிடித்த 10 பாடல்களை பகிரும்படி ஒரு மாசத்துக்கு முன்னாடி நம்ம மேட்டுபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ சகோதரிகள் கூப்பிட்டு இருந்தாங்க. 

கொஞ்சம் (?!) லேட்டாகிடுச்சு. பெண் குரல்கள், பெண் மனசை வெளிப்படுத்தும் பாடல் அதிக அளவில் இருகிறது அதில் 10 தேர்ந்து எடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால்,  என் நினைவில் உடனே வந்த 10 பாடல்களை இங்கே பகிர்கிறேன்.

சின்ன குயில் சித்ராவின் குரலில், இளையராஜா இசை ராஜாங்கம் நடத்திய புன்னகை மன்னனின்  “ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்” என் ஆல் டைம் பேவரைட். வைரமுத்துவின் வைர வரிகள் இவை...

“நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்....

2. சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே....
ஜென்சி குரலில் இளையராஜாவின் மயக்கும் இசையில் கண்ணதாசன் வார்த்தை ஜாலம் காட்டி இருப்பார். ஜானி படத்தில் வரும் “என் வானிலே.. ஒரே வெண்ணிலா” - மனதை மயக்கும் பாடல்

“நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்தைகள் தேவையா...”

3. பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே...
அனுராதா ஸ்ரீராம் குரல் + ஹாரீஸ் ஜெயராஜ் இசை = பர்பெக்ட் காம்பினேஷன். லேசா லேசா படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் என்றாலும் கவிஞர் வாலியின் எழுத்தில் இந்த பாடல், கண்டிப்பாய் THE BEST...

“நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே...”

4. ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்...
ஒரு பெண்ணின் காதல் உணர்வையும் எதிர்பார்ப்பையும் அழகாய் சொல்லி இருப்பார் கவிஞர் தாமரை. பாம்பே ஜெயஸ்ரீ குரலும் ஹாரீஸ் இசையும் மின்னலே படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட்

“அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம...”

5. பிறந்த உடலும் நீ! பிரிந்த உயிரும் நீ!
“ஒரு தெய்வம் தந்த பூவே” இதைவிட அருமையாய் ஒரு குழந்தையை எந்த கவிஞராலும் வர்ணிக்க முடியாது. வைரமுத்து அதில் சளைதவர் இல்லை என்பதை நிருபித்து இருப்பார். சின்மயியின் செல்லக்குரலில் ஏஆர் ரஹ்மான் இசையில் “கன்னத்தில் முத்தமிட்டால்” கண்டிப்பாய் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்?

“எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!...”

6. ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே...
லதா ரஜினிகாந்த், இளையராஜா இசையில் பாடியது. காட்சி அமைப்பும் பாடல் வரிகளும் மனதை உருக்கும். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் பெயரை சொன்னது நினைவுக்கு வருவது இந்த பாடல்தான்..

“கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில்

7. தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர...
இளையராஜாவின் மெல்லிய இசையில் ஜானகி அம்மாவின் குரலில்  - கண்மூடி கேட்டால் நம்மை நம் தாயின் மடிக்கே கொண்டு செல்லும் பாடல். வாலியின் வரிகளில் தளபதி படத்தின் “சின்னத்தாயவள் தந்த” பாடல் எனக்கு பல முறை மனஆறுதல் தந்து இருக்கிறது.

“தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ...”

8. சிங்கார வேலனே தேவா...
இந்த பாடலை எப்படித்தான் ஜானகி அம்மாவால் பாட முடிந்ததோ! வரிகளுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அதில் வரும் ஸ்வரங்கள், அதற்கு இணையான நாதஸ்வர இசை பிரம்மிக்க வைக்கும். சுப்பையா நாயுடுவின் இசையில் கொஞ்சும் சலங்கை படத்தின் “சிங்கார வேலனே தேவா...” மலைக்க வைக்கும் பாடல்...

“செந்தூரில் நின்றாடும் தேவா….
திருச்செந்தூரில் நின்றாடு தேவா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
அழகிய சிங்கார வேலனே தேவா”

9. விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே...
கண்மூடி கேட்டால் கடவுளை கொஞ்சுவது போல இருக்கும் இந்த பாடல். அனுராதா ஸ்ரீராம் குரலில் வைரமுத்து எழுத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் அருமையாக அமைந்த மின்சாரகனவு படப்பாடல்...

“இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே 
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே 
புவிராஜன் தோன்றினானே”

10. அன்பே உந்தன் அழகு முகத்தை... யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது..
சிம்ரனுக்காகவே இந்த பாட்டை பல முறை பார்த்தேன். இந்த பாடலில் வைரமுத்து எடுத்தாண்டு இருக்கும் வார்த்தைகள் நன்றாய் இருக்கும். ஹரினி குரலும் தேவா இசையும் சேர்ந்து வந்த நேருக்கு நேர் படத்தின் பாடல் என் பதின்மத்தை நினைவுபடுத்தும்.
 “புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்”

இந்த பதிவை தொடர நான் அழைப்பது....

மேலும், பெண்பதிவர்கள் பார்வையிலும் என்ன பாடல்கள் வருகிறது என தொடர வருகிறார்கள்...


Tuesday, December 7, 2010

வலைச்சர அனுபவம்....

ஒரு வழியா ஒரு வாரம் வலைசரத்துல ஓட்டியாச்சு... சரி, அந்த அனுபவம் எப்படி? அதன் சாதக, பாதகங்கள் என்ன?

உண்மையிலேயே, வலைச்சர ஆசிரியர் என்பது மிகவும் பொறுப்பு மிகுந்த வேலைதான். பல ஜாம்பவான்கள் எழுதி இருக்கும் இடத்தில் நீங்களும் எழுதி உங்கள் முத்திரையை பதிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.  நிறைய படிக்க வேண்டும், புதிய பதிவர்களை தேட வேண்டும் (அடேய்! அதுதாண்டா வலைச்சர கான்செப்ட்டே!)

எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் விளையாட்டாய் தெரிந்தாலும், நேரம் நெருங்க நெருங்க ஒரு சீரியஸ்னேஸ் ஆட்டோமெட்டிக்காக வந்துவிடுகிறது. உங்களின் பதிவுகளை பற்றி எழுத, உங்கள் பழைய பதிவுகளை படிக்கும் போதுதான் நம்முடைய ( + ) மற்றும் ( - ) தெரியவருது. என் சில பதிவுகளை படித்து விட்டு இவ்வளவு நல்லா நானா எழுதினேன்னு ஆச்சரியப்பட்டதும், சில பதிவுகளை பார்த்து தவறுகளை கண்டு கொண்டது இந்த வலைசரத்தால்தான். இப்போ தெரியுது மத்தவங்க எவ்வளோ கஷ்ட்டப்பட்டு இருப்பாங்கனு, என் பதிவை படிச்சி.

சாதகங்கள்:
1. மற்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறீர்களோ இல்லையோ கண்டிப்பாய்  நீங்கள் வெளிச்சத்திற்கு வருகிறீர்கள்
2. உங்கள் எழுத்து நடை, பொது அறிவு, கற்பனைத்திறன் எல்லாம் ஊன்றி கவனிக்கபடுவதால், உங்களுக்கு ஒரு பொறுப்பு வந்து விடுகிறது.
3. உங்கள் followers எண்ணிக்கை கணிசமாக உயரும்.
4. நீங்கள் அறிமுகப்படுத்திய புதிய பதிவர்கள் உளமாற சொல்லும் நன்றியை நீங்கள் உணர முடியும்.
5. உங்களை பாராட்டி அவர்கள் ஒரு நாலு வார்த்தை எழுதுவார்கள் அவர்கள் பதிவில்.
6. முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்க....

பாதங்கள்:
1. நிறைய மெனகெடவேண்டி இருக்கும். நிறைய பதிவுகள் (மொக்கைகள் உட்பட) படிக்கவேண்டி இருக்கும்
2. தினமும் பதிவு எழுதனும், அதுக்கு நிறைய ஹோம் ஒர்க் செய்யனும்.
3. நண்பர்களின் பிளாக்குகளுக்கு போக கொஞ்சம் சிரமமா இருக்கும்.
4. ஒரு வாரம் முடிஞ்சிவந்தா... புது உலகத்துல இருக்கற மாதிரி இருக்கும்.

டிப்ஸ்: (இப்படித்தான் நான் செஞ்சேன்)
1. எழுதப்போறதுக்கு 2 வாரத்துக்கு முன்னாடி இருந்தே பதிவர்கள் / பதிவுகள் லிஸ்ட் ரெடி பண்ண ஆரம்பிச்சுடுங்க
2. உங்களுக்கு கமெண்ட் போடுறவுங்க, நீங்க கமெண்ட் போடுற பதிவர்களுக்கு கமெண்ட் போடுறவுங்களை எல்லாம் பார்த்துட்டே இருங்க.
3. புதுசா யாராவது தெரிஞ்சா அவங்க பிளாக் போய் பாருங்க.
4. அவங்க யாரை எல்லாம் follow பண்ணுறாங்கனும் போய் பார்த்துட்டு வாங்க.
5. வித்தியாசமா ஒரு கான்செப்ட்ல பதிவர்களை அறிமுப்படுத்துங்க. (பூக்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள், வண்ணங்களின் பெயர்கள் - இப்படி)
6. ஓவரா தூய தமிழ்ல எழுதாதீங்க... பேச்சு தமிழ்தான் ஒரு கோர்வையா நல்லா இருக்கும்
7. எதுக்கும் திட்டமிட்டதைவிட அதிக பதிவர்களின் பட்டியலை வெச்சிக்கோங்க. உங்களுக்கு முன் வாரம் எழுதும் ஆசிரியர்கள் உங்கள் பட்டியலில் இருப்பவரை அறிமுகப்படுத்தும் சாத்தியம் அதிகம் (நம்ம ராம்ஸ் இப்போ என்னால அவஸ்தைபடுற மாதிரி... நல்ல வேளை நான் எழுதினதுக்கு முன் வாரம் வலைச்சரத்துக்கு லீவ் விட்டுடாங்க)
8. தயவு செய்து பாரதி, பாரதிதாசன், ள, ல, ற, ர - இதை எல்லாம் கரெக்ட்டா போடுங்க... இல்லைனா எனக்கு கிடைச்ச பல்பு உங்களுக்கும் கண்டிப்பா கிடைச்சிடும். அவ்வ்வ்வ்வ்....

சரி, வலைசரத்துல நான் எழுதிய பதிவுகளின் பட்டியல் இதோ....
1. சீனா சாரின் வரவேற்ப்பு - வருக ! வருக ! அருண் பிரசாத் ! கலக்குக !
2. சுயபுராணம் - ஆட்டம் ஆரம்பம்!
3. முதல் நாள் அறிமுகங்கள் -  கதம்பம் ஒன்று
4. இரண்டாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் இரண்டு...
5. மூன்றாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் மூன்று...
6. நான்காம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் நான்கு....
7. ஐந்தாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஐந்து.....
8. ஆறாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஆறு......
9. வாழ்த்தும் வழியனுப்புதலும் - செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

தயவுசெய்து இதை போய் மறுபடியும் படிச்சி நொந்து போகாதீங்க....
ஆங்... சொல்ல மறந்துட்டனே.... வலைசரத்தில் 7 நாளும் கமெண்ட் சரவெடி கொண்டாட்டம் நடத்திய நம்ம கும்மி குரூப்பு மற்றும் நண்பர்களுக்கும் நன்றி!



Friday, November 26, 2010

Klueless - அறிவாளிகளுக்கான விளையாட்டு



Klueless - இது ஒரு ஆன்லைன் புதிர் போட்டி. கடந்த 5 வருடமாக IIM, Indore-ஆல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த புதிர் போட்டி எப்படி என்றால் இவர்கள் தரும் வலை முகவரியில் உள்ள க்ளூக்களை வைத்து அடுத்தடுத்த Level ஐ அடைய வேண்டும்.

க்ளூக்கள் வலைபக்கத்தின் தலைப்பிலோ, முகவரியிலோ, படத்திலோ, படத்தின் பெயரிலோ, Page Source -லோ இருக்கும்.... தேவையில்லாத க்ளுக்களை கொடுத்தும் குழப்பி இருப்பர், ஜாக்கிரதை.

விடைகள் ஒரு கிளிக் செய்யும்படியோ, வலை முகவரி மாற்றும்படியோ அல்லது விடை பட்டையில் எழுதும்படியோ இருக்கும்....

என்ன முட்டி மோதியும் சென்ற ஆண்டு என்னால் 25 level ஐ தான் தொட முடிந்தது. இந்த ஆண்டு 20 வரையே வந்துள்ளேன்....

முயற்சி செய்து பாருங்களேன்... நானும் உதவுகிறேன்... கூட்டணி வைத்தாவது இந்த முறை முடிக்க முயற்சிப்போம், வாருங்கள்...

விளையாட்டை தொடங்க இங்கு செல்லவும்...

விதிமுறைகள் இங்கு உள்ளது....

மூளையை தூசு தட்டுவோமா? ஸ்டார்ட் மியூசிக்....

டிஸ்கி 1 : விடைகளை வெளியிடாமலும், சுலபமாக க்ளுதருவதை தவிர்க்கவும் கமெண்டுக்கள் மட்டறுக்கப்படுகிறது

டிஸ்கி 2: என் அடுத்த 75வது இடுகையை வலைசரத்தில் அடுத்த வாரம்  முதல் எழுதுகிறேன்.... தாம்பூலம் வெச்சாச்சி, வந்துடுங்க மக்கா....



Monday, November 22, 2010

(பதிவு) உலக பொது மறை

பிறரைதொடர்பதிவுக்கு முற்பகல் கூப்பிடின் தமக்குதொடர்பதிவு
பிற்பகல் தானே வரும்

புனைவெழுதி திட்டு பிரபலமாவாரே ஆவர்
பதிவெழுதி பிரபலமாக தெரியாதவர்

மொக்கைபதிவு பிரபலம் ஆகிடுமே ஆகாதே
என்றும் நல்ல பதிவு

அனானியாய் கமெண்டுபவர ஒறுத்தல் அவர்நாண
திட்டி புதுபதிவு போட்டுவிடல்

ஓட்டு கமெண்டு கும்மி Follow இந்நான்கும்
பிரபல பதிவர்க்கு அழகு

கும்மி அடித்து 100 க்மெண்ட் வாங்கியபின்
சொல்க நான் “பிரபலபதிவர்”

குழப்ப பதிவு கிலர்க்கு எளிய அரியவாம்
படித்து புரிந்து கொளல்

புதுபதிவு போட சரக்கு இல்லாத் போது
சிலசமயம் மெயிலும் பதிவாகும்

மாத்தியோசித்து பதிவு போடுக அஃதிலார்
பதிவு போடாமை நன்று

கதைபெரிது கவிதைபெரிது என்னும் மக்கள் மொக்கை
எவ்வளவு கஷ்டமென தெரியாதவர்

டிஸ்கி: எந்த எந்த குறள் யார்யாருக்கு பொருந்தும் என்பதை ரசிகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்


Thursday, November 18, 2010

தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 3

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ்படங்களை கண்டிபிடியுங்கள், இதோ உங்களுக்காக... (அய்யோ... வேணாம்... யாரும் எதிர்பார்கலைனு யாராவது சீன் போட்டீங்க, சாரி, கமெண்ட் போட்டீங்க... பிச்சி புடுவேன் பிச்சி)

சென்றமுறை ரொம்பவே கடினமாக இருந்துச்சுனு சொன்னதால் இந்த முறை எல்லாம் சுமார் ரகம். யோசிங்க... யோசிங்க... யோசிங்க....

விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், படத்தை வைத்து அனைத்து ஆங்கிளிலும் யோசித்து பாருங்கள். விடையை கண்டு பிடித்துவிடலாம். 


உதாரணம்:

விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்

விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.



1.


2.



3.


4.


5.


6.


7.


8.


9.


10.


விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்

டிஸ்கி: 10வது படத்தை டிசைன் செய்து தந்து உதவிய நண்பர் எஸ் கே விற்கு நன்றி.


Monday, November 15, 2010

பஸ்ல கிடைச்ச வரம்

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம் “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம
“குப்புமி”
“குப்புமி”
“குப்புமி”ன்னு சொன்னானாம் பாவம்

கடைசிவரை அவனுக்கு ”சாவே” வரலையாம்...

டிஸ்கி: இந்த கதை படிச்சுட்டு கதறிகதறி அழுதா நான் பொறுப்பில்லை. ஏன்னா இது எனக்கு பஸ்ல (Buzz) வந்துச்சு. அனைத்து உரிமைகளும் (அடிவாங்குவது உட்பட) இதை எழுதிய அந்த புண்ணியவானையே சேரும்.


அடுத்த முறை கார்ல வந்த கதைய சொல்லுறேன்.... 

Friday, November 12, 2010

சகியின் சங்கதிகள்

அந்தோ!!

அவள் எனக்கு 
பதில் கடிதம் எழுதாமல் 
இருந்திருந்தால் நான் இறந்திருப்பேன்.
எழுதியதால் இறந்தது தமிழ்!
பொறியை கொண்டு எலியை
ஆளுமை செய்ததது போய்,
எலியை கொண்டு (கணிப்)பொறியை
ஆளுமை செய்கிறோம். 

எல்லாக்கம்பிகளும் 
வீணையின் அங்கமாவதில்லை. 

தினமும் செதுக்கும் ஒரே சிற்பம். 

நிழலைக்காண 
நிஜங்கள் ஏங்கி நிற்கின்றன. 

உடுக்க நல்ல கச்சையின்றி தவிக்கும் 
பிச்சைக்காரர்களைக் காணவோ நான் 
இச்சையுடன் அமர்ந்தேன் ஜன்னலோரத்திலே! 

ஒன்றாகவே இருந்த மூவரில் 
ஏனோ இன்று கடையவன் 
மூத்தவனை அழிக்கத்துவங்கினான்.  


தாய் வீடு 
பிறந்து வளர்ந்த வீட்டிற்கே
விருந்தாளியாய் சென்றாள்.
உரிமையிழந்தவளாய்! 


சகுனம் 
வீட்டில் இருந்து புறப்பட்டேன்.
குறுக்கே செல்லவிருந்த பூனை 
நின்றுவிட்டது.
இடையுறாத பயணத்தை நினைந்து
மகிழ்ந்தேன்.
ஆனால்... பூனை ஏன் நின்றது?
சகுனம் பார்த்திருக்குமோ? 

பரிசு 
ஒவ்வொரு தந்தையும் 
தன் மகனுக்கு தரும் 
முதல் பரிசு - 
முத்தம் 

தாய் 
நான் சாப்பிட்டேன்
நீ சாப்பிடு...

என்று ஊட்டிய தாய்
பாசத்தைக் கற்பித்தாள்

பொய்யையும்தான் 
  
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
இந்த கவிதைலாம் சத்தியமா என்னுடையது இல்லைங்க.... (நான் தான் எழுதினேன்னு சொன்னா மட்டும் நம்பவா போறீங்க!) 

இவை எல்லாம் சகோதரி சங்கீதா ஜெயபிரகாஷ் தன் புதிய வலைப்பூ 


எழுதியவை. சும்மா சொல்ல கூடாது நல்லாவே எழுதி இருக்காங்க. ஒரு எட்டு போய் பார்த்து உற்சாகபடுத்துங்க நண்பர்களே!


Wednesday, November 10, 2010

பூமியை பாதுகாப்போம்....

உங்களிடம் நல்ல முறையில் ஓடும் பழைய வாட்ச்கள் உள்ளதா?

படித்து முடித்த பல புத்தகங்கள் தூக்கிபோட மனமின்றி பரணை நிரப்புகிறதா?

பழைய மிக்ஸி, எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பழுதாகி ஆனால் ரிப்பேர் செய்யும் வழி இருந்து செய்யாமல் விட்டது வீட்டில் சேர்ந்து இருக்கிறதா?


இப்படி பல உபயோகித்த பொருட்கள், தூக்கி எறிய மனது வராத பொருட்கள், பிறருக்கு உதவும் என நீங்கள் நினைக்கும் பொருட்கள் போன்றவற்றை தேவைபடுபவர்களுக்கு கொண்டு சேர்க்க ஒரு தளம் உள்ளது.

http://www.freecycle.org/

இது முழுதும் வியாபார நோக்கிலாமல் செயல்படும் ஒரு அமைப்பு. இவர்கள் நோக்கம் பூமியில் தேவையில்லாமல் தேங்கும் உபயோகமுள்ள பொருட்களை மறுசுழற்சியாக மற்றவர்கள் உபயோகிக்க உதவுவதுதான். 

ஏறக்குறைய உலகம் முழுதும் 7 மில்லியன் மக்கள் இந்த அமைப்பில் இணைந்து உள்ளனர். இவர்கள் செயல்படும் விதம் ரொம்ப சிம்பிள். ஒவ்வொரு நாட்டுக்கும் பெருநகரங்கள் வாரியாக பிரிவுகள் வைத்து இருக்கின்றனர். ஒவ்வொரு பிரிவுக்கு ஒரு குரூப் மெயில் வைத்து உள்ளனர். இதில் அவர்கள் தாங்கள் கொடுக்க விரும்பும் அல்லது பெற விரும்பும் பொருளின் Detailsஐ தங்கள் முகவரிஅனுப்புவர். தேவைபடுவோர்  அவர்களை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம்.


இந்த அமைப்பு தமிழ்நாட்டில் சென்னையிலும் கோவையிலும் உள்ளது.  கோவையில் அவ்வளவு ஆக்டிவ்வாக இல்லை என்றாலும், சென்னையில் 450+ உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. இதில் உறுப்பினர் ஆவதால் அவர்கள் தரும் பொருளை நீங்கள் வாங்கிதான் ஆக வேண்டும் என்றோ, இல்லை, நீங்க குறிப்பிட்டவருக்கு தான் பொருள் தர வேண்டும் என்றோ அவசியம் இல்லை. இது முற்றிலும் உங்கள் சுய விருப்பத்தை பொருத்ததே....

இதில் உறுப்பினராக ஆகித்தான் பார்ப்போமே... யாருக்கு தெரியும் நீங்கள் வெகு நாட்களாக தேடி கொண்டு இருக்கும் ஒரு புத்தகமோ, பொருளோ உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கலாம்...

வீணாக்குவதை தவிர்ப்போம்....
பூமியை பாதுகாப்போம்...


Thursday, November 4, 2010

தீபாவளி ஸ்பெஷல் கிப்ட்....

குழந்தைகளுக்கு எந்த பண்டிகை பிடிக்கும் என கேட்டு பாருங்கள்.... கண்டிப்பாய் அவர்கள் தீபாவளி என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால், எனக்கும் அந்த பண்டிகைதான் பிடிக்கும். ஹி ஹி ஹி...

சரி தீபாவளி கிப்ட் கொடுப்பதற்கு முன் ஒரு சின்ன கொசுவத்தி சுத்தலாமா? சிறுவயதில் தீபாவளி சமயங்களில் என் பாட்டி வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்து இருந்தேன். அவர் வேலூர் அருகில் உள்ள ஆரணியில் வசிக்கிறார். ஒவ்வொரு வருடமும் மே மாத விடுமுறைக்கும் அங்குதான் செல்வதால் எனக்கு என ஒரு நண்பர் பட்டாளம் இருந்தது.

தீபாவளி சமயங்களில் எங்கள் தெருவில் ஒரு வழக்கம் உண்டு. சிறுவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீபாவளி அன்று விடியற்காலை நரகாசுரன் வதம் நிகழ்ச்சியை செய்வோம். இது பல காலமாக அங்கு நடந்து வரும் வழக்கம். அந்த வருடமும் அந்த நிகழ்ச்சியை செய்தோம். அந்த தெருவில் ஒரு ஓவியர் இருந்தார். அவர் ஒரு ஆளுயர அட்டையில்  கட்அவுட் வடிவத்தில் கிருஷ்ணர், நரகாசுரன் படங்களை வரைந்து தந்தார். நரகாசுரன் தலை தனியாக கழலும்படி அமைத்து இருந்தார்.


நாங்கள் எல்லாம் முந்தின நாள்  இரவு அவர் அவர்கள் வசதிக்கு தக்கபடி ஆளுக்கு கொஞ்சம் பட்டாசு எடுத்து வந்து ஒரு வீட்டில் கிருஷ்ணர் நரகாசுரன் படங்களுடன் சேர்த்து வைத்தோம். மறுநாள் காலை  மணி அடித்து கொண்டும் பட்டாசு வெடித்துக் கொண்டும் கிருஷ்ணர் படத்தை ஊர்வலமாக மூன்று தெரு சுற்றி வந்து எங்கள் தெருவின் மையத்தில் கிருஷ்ணரையும் நரகாசுரனையும் எதிர் எதிரில் சுமார் 5 மீட்டர் இடைவெளியில் வைத்தோம்.

நரகாசுரன் தலையில் இருந்து ஒரு நூல் கட்டி அதன் மறுமுனையை கிருஷ்ணர் கையில் கட்டினோம். அந்த நூலில், ரயில் வெடியை வைத்தோம். அது கொளுத்தியவுடன் வேகமாக சென்று நரகாசுரன் தலை இடித்து துண்டிக்குமாறு செட் செய்தோம்.

எல்லாம் திட்டமிட்ட படிதான் சென்றது. ஆனால், இந்த பாழாய் போன ரயில் வெடி சொதப்பிவிட்டது. சரியாக நூலில் சென்ற ரயில் வெடி நரகாசுரன் அருகில் சென்றவுடன் என்ன ஆனாததோ தெரியவில்லை உடனே வேகமாக ரிட்டன் ஆனாது. (பிறகுதான் சொன்னார்கள் அந்த வெடி அப்படித்தான் இரண்டு பக்கமும் சென்று வருமாம்) நேராக கிருஷ்ணர் கையை பதம்பார்த்து விரலை துண்டித்தது. சுதர்சணசக்கரத்துடன் கிருஷ்ணர் விரல் சில அடிகள் தள்ளி விழுந்தது. விடு சண்டைனா எதிரிமேல 10 அடி விழும்போது நம்ம மேல 1 அடி விழறது சகஜம்தான்னு கிருஷ்ணரை சமாதானம் செய்து விட்டு அடுத்த பிளான் B ஐ ஆரம்பித்தோம், அடுத்த அடி எங்கள் மீது விழப்போவது தெரியாமல்.

எங்கள் பிளான் B என்ன வென்றால், நரகாசுரன் தலையில் ராக்கெட்டை கட்டி பற்ற வைப்பது. அது தலையுடன் மேல சென்ற பிறகு மீதி நரகாசுரனை கொளுத்திவிடுவது. அந்த பிளான் சரி என தோணவே, அனைத்தையும் செட் செய்தோம். கிருஷ்ணர் தானே வதம் செய்ய வேண்டும்! எனவே, எங்களில் கிருஷ்ணா என பெயர் கொண்டவனை கூப்பிட்டோம் (என்ன ஒரு சிந்தனை, அப்போவே நான் இப்படிதான் ரொம்ப அறிவு) அவனை கன்வின்ஸ் செய்து கொளுத்த சொன்னோம்.

அடுத்த விபரீதம் நடந்தது. கொளுத்தியவுடன் நரகாசுரன் தலை ராக்கெட் பாரம் தாங்காமல் சரிய, ராக்கெட் மட்டும் தலையில் இருந்து பிடுங்கி கொண்டு நேராக அருகில் இருந்த குடிசை ஓலையில் தஞ்சம் அடைந்து வெடித்தது.  சிறியதாக தீப்பற்றவும் ஆரம்பித்தது. நாங்கள் போட்ட கூச்சலில் வீட்டில்  இருந்த அனைத்து பெரியவர்களும் ஒரு வழியாக ஓடிவந்து தீயை அனைத்தனர். 

அடுத்து இன்னொரு நண்பன் பிளான் C செய்யலாம்டா என சொல்ல, நாங்கள் அனைவரும் ஆணியே புடுங்க வேணாம் என்று சொல்லி நரகாசுரன் தலையை நாங்களே தூக்கி போட்டு விட்டு கிளம்பினோம். வீட்டுக்கு போன பின் எங்களுக்கு டமால் டிமீல் சரவெடியுடன் நிஜ தீபாவளி ஆரம்பித்தது....

டிஸ்கி: தயவுசெய்து, குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருங்கள். டீவி நிகழ்ச்சிகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். 

அனைவருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

ஓ! தீபாவளி கிப்ட் தரலைல. இந்த ஆடியோ கிளிப்பை கேளுங்கள்.




என் ஒன்றரை வயது மகள் ஷம்ஹித்தா உங்களுக்கு “Happy Deepavali” சொல்கிறாள்

ஆடியோ கிளிப் ஒர்க் ஆகவில்லை எனில் இங்கு கிளிக் செய்து கேட்கவும்.

Monday, November 1, 2010

எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்

இன்றுடன் எந்திரன் திரைக்கு வந்து சரியாக ஒரு மாதம் முடிந்துவிட்டது. ரஜினியின் மாஸ்சாலும் சன் டீவியின் அதித விளம்பரத்தாலும் இந்த படத்தை 90% பேர் பார்த்துவிட்டனர். சில ஆகா ஓகோ விமர்சனங்களும், பல எதிர் மறை விமர்சனங்கள் வந்து ஓய்ந்தது.
ஆனால், இந்த படம் ஒரு டிபிக்கல் ரஜினி ரசிகனுக்கு திருப்தி அளித்ததா? மற்ற ரஜினி படங்களின் வரிசையில் இந்த படம் எந்த இடத்தில் உள்ளது என தெரிந்துகொள்ள விருப்பப்பட்டேன்.

இதோ என் பார்வையில் ரஜினி யின் டாப் 10 திரைப்படங்கள்.


10. அருணாசலம்
சாதாரணமாக தொடங்கும் இந்த படம், 30 நாளில் 30 கோடி செலவழிக்க வேண்டும் என்றவுடன் பரபரப்பாக மாறும். என்னை போன்ற ரசிகர்களின் கனவான அரசியல்வாதி ரஜினியைகாட்டிய ஒரே படம்

9. எந்திரன்
மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, கடைசியில் சுட்டி டிவி பார்ப்பதை போல இருந்தது என விமர்சிக்கப்பட்ட படம். சராசரி ரஜினி ரசிகனை திருப்திபடுத்த தவறிய படம். எவ்வளவு பிரம்மாண்டம் இருந்தாலும் ரஜினியை பார்க்க முடியாத ரஜினி படம்

8. சந்திரமுகி
பாபா பட படுதோல்விக்கு பிறகு வந்து ரஜினி இமேஜை தூக்கி நிறுத்தியபடம். ரசிகனின் எதிர்பார்ப்பை எல்லா வகையிலும் நிறைவேற்றி ஒரு வருடம் ஓடிய சாதனை திரைப்படம்

7. அண்ணாமலை
“மல டா, அண்ணாமலைடா”  ஒரே பாடலில் பணக்காரன் ஆகும் டிரெண்டை தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய படம். காமெடி, ஸ்டைல், பஞ்ச் டயலாக் என கலக்கி இருப்பார்

6. முள்ளும் மலரும்
தன்னாலும் குணசித்திர பாத்திரங்களில் நடிக்க முடியும் என ரஜினி நிரூபித்தபடம். மகேந்திரன், இளையராஜா, ரஜினி கூட்டணியில் கலக்கியபடம். ரஜினி படங்களில் ஒரு மகுடம் இது.



5. சிவாஜி
ஷங்கர் டைரக்‌ஷனில் ரஜினி - ரசிகர்களை அதிரவைத்த படம். வயதான ரஜினியை இளைஞராக காட்டிய படம். பஞ்ச் டயலாக், சண்டைகாட்சிகள், வெள்ளைதோல் ரஜினி என படம் முழுக்க பரபர விறுவிறுப்பு படம்.



4. தில்லுமுல்லு
ரஜினியின் முழுநீள நகைச்சுவை திரைப்படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். தேங்காய் சீனிவாசனும் ரஜினியும் போட்டி போட்டு காமெடி செய்து இருப்பர்



3. படையப்பா
நடிகர்திலகத்துடன் ரஜினி நடித்த கடைசிபடம். ரம்யாகிருஷ்ணனா, ரஜினியா என கடைசிவரை போட்டியாகவே செல்லும் படம். “மின்சாரகண்ணா, இந்த வயசுலயும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்னைவிட்டு போகலை” என்ற நீலாம்பரி டயலாக்கை நிருபித்தபடி ரஜினியின் நடிப்பு இருக்கும்



2. தளபதி
நட்புக்கு இலக்கணம் கர்ணனை நினைவு படுத்தும் கதாபாத்திரம். இளையராஜாவின் இசை கூடுதல் பலம். பாசம், நட்பு, காதல், கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்தி ஜெயித்து இருப்பார் ரஜினி. ரஜினி ரசிகர்களின் ஆல் டைம் பெவரைட்டில் கண்டிப்பாய் இந்த படம் இருக்கும்



1. பாட்ஷா
பெரும்பாலான ரஜினி ரசிகர்களின் நெ 1 ரஜினி படம். ஸ்டைல், நடிப்பு, பஞ்ச் டயலாக், சண்டை என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருப்பார். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்.


ஆக, என் பார்வையில் “எந்திரன்” 9வது இடத்தைதான் பெற்று உள்ளது. இதை ஒரு தொடர்பதிவாக மாற்றி மற்றவர் நிலையையும் பார்க்க விருப்பம்.

எனவே, நான் இந்த பதிவை தொடர அழைப்பது.,

1. சிரிப்பு போலிஸ் ரமெஷ்
2. அமீரக அரிமா தேவா
3. ரஜினி ரசிகர் நண்பர்  எல் கே

ரஜினி நடித்த 154 படங்களின் பெயர் பட்டியலும் இங்கு இருக்கிறது.


Thursday, October 28, 2010

கொஞ்சம் தேநீர்... நிறைய கோபம்...

2 நாளுக்கு முன்னாடி
எனக்கும் என் மனைவிக்கும்
பயங்கர சண்டை...
(@ ரமெஷ், அடிவாங்குனது நீதானனு கமெண்ட் போட கூடாது)

நான் வீட்டுல
வேலையே செய்யறது இல்லைனு
ஓவர் கம்ப்ளைண்ட்...

நானும் பதிலுக்கு
அவங்க சமைக்கறது தவிர
எதையும் செய்யலைனு
ஆர்கியூமெண்ட்...
(எதிர்த்து பேசினேங்க, அட நம்புங்க)

உடனே அவங்க
என்னை ஒரு டீயாவது
போடத்தெரியுமானு கேட்டுட்டாங்க...

எனக்கு ரோஷம் வந்துடுச்சு
(அட, இதையும் நம்புங்கப்பா)

போடுறேன் நானும்
டீ போடுறேன்...


உங்களுக்கும் கத்து
தரேன்.....
நீங்களும் பார்த்து
கேட்டு கத்துக்கோங்க

நேரா சமையலறைக்கு
போனேன்....
டீ போட First
சுடுதண்ணி வேணும்...
(என்னா கண்டுபிடிப்பு!)

தண்ணிய Electric Kettleல
பிடிச்சி கெட்டில் “ON”
செய்யுங்க

அடுத்து, அது சூடாகி
“OFF” ஆகிறவரை
“REST”

அடுத்த ஸ்டெப்,
அந்த தண்ணிய ஒரு
CUPல ஊத்துங்க

இப்போ அந்த
CUP சுடுதண்ணீல
சக்கரைய போட்டு
கலக்குங்க....

அடுத்து, நம்ம
SECRET BOXல
இருக்குற அதை
எடுத்து CUP சக்கரை
தண்ணில போட்டுங்க

டீ ரெடி!

ஓ! அது என்னவா?

இதுதான்,


டீ போடதான
சொன்னாங்க
பிளாக் டீ போட கூடாதுனு
சொல்லலையே!

டீ போட்டதோட ரிசல்ட் தெரியனுமா? பதிவு தலைப்பை மறுபடி படிச்சிக்கோங்க...

Tuesday, October 26, 2010

சில்லுனு ஒரு பாராசூட் பயணம்...

என்னுடைய சுவாரசிய பயணங்களின் வரிசையில் இந்த முறை ஒரு வித்தியாசமான பயணம். இந்த முறை பேருந்திலோ இரயிலிலோ அல்ல. வித்தியாசமாக பாராசூட் பயணம் அதுவும் காமெடி + அபாயத்தில் முடிந்த பயணம். சரி, பயணத்திற்கு கிளம்புவோம்....

சென்னை நண்பர் ஒருவர் ஒரு வார பயணமாக மொரீசியஸ் வந்து இருந்தார். அவருடன் சேர்ந்து நாங்கள் ஒரு 6 பேர் குழுவாக ஊர் சுற்ற கிளம்பினோம். சரி வெகுநாள் ஆசையான பாராசூட் பயணத்தை அனுபவிக்கலாம் என்று  ஒரு உள்ளூர் நண்பரின் ரிசார்ட் ஒன்றிற்கு சென்றோம்.

அங்கு அவர் பாராசூட்டில் பறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தயாராக இருந்தார். அங்கு சென்ற பின் அவ்ர் எங்களை ஒரு SPEED BOAT - ல் கடல் நடுவில் அமைக்கப்பட்ட மிதக்கும் மேடைக்கு அழைத்து சென்றார். அந்த மேடை கடல் நடுவில் தண்ணீரில் இருந்ததால் போதையில் ஆடுவது போல ஆடியது. (மேடைதாங்க தண்ணீல இருந்துச்சு நாங்க தெளிவாத்தான் இருந்தோம்). பின் ஒவ்வொருவராக பேலன்ஸ் செய்து நின்று ஸ்பெஷல் COSTUME மாட்டிகொண்டோம்.

Special Costume ல் நாந்தாங்கோ....

பாராசூட்டில் இரண்டு இரண்டு பேராக பயணம் செய்வதாக முடிவானது. நானும் சென்னை நண்பரும் ஒன்றாக செல்ல முடிவெடுத்தோம். ஏனென்றால் அவர் கொஞ்சம் வெயிட்டான ஆள். நான் முன்பும் அவர் எனக்கு பின்னாலும் அமர, எங்கள் காஸ்டியூமில் இருந்த கொக்கியை பாராசூட்டில் இணைத்தனர். பாராசூட்டை ஒரு நீண்ட கயிற்றில் கட்டி அதன் மறுமுனையை SPEED BOAT-ல் கட்டினர்.

நல்லாதான் கிளம்புச்சி, வலது பக்கம் ஒரு கிமீட்டரும், இடது பாகம் ஒரு கிமீட்டரும் சென்று வந்தோம். இதில் ஒரு மேட்டர் என்னன்னா? மற்றவர்களை அழைத்து போன போது, கடல் நடுவில் BOAT-ஐ நிறுத்தி பாராசூட்டை தண்ணீரில் இறக்கினர் பாராசூட்டில் இருப்பவர் கால் கடல் தண்ணீரை தொட்டவுடன் BOAT -ஐ கிளப்பி, மீண்டும் பாராசூட் பறக்கவைப்பர். இதை எங்களுக்கு மட்டும் செய்யவில்லை. எனக்கு செம கடுப்பு.

Take Off - சாகசம் ஆரம்பம்

மேடைக்கு மேலே வந்தவுடன், பாராசூட் கயிறை இழுத்து இழுத்து விட வேண்டும். அப்பொழுது தான் பாராசூட் சரியாக மேடையில் இறங்கும். எங்களுக்கு இருந்த கடுப்பில் நாங்கள் கயிறை இழுக்கவில்லை. பேலன்ஸ் தவறியதால் மீண்டும் எங்களை ஒரு ரவுண்ட் கொண்டு சென்று மேடைக்கு மேல் நிறுத்தினர். இப்பொழுதும் எங்களை கடலில் இறக்காததால் மீண்டும் நான் கயிறை இழுக்கவில்லை. இப்படியே மூன்று முறை அவரும் எங்களை இறக்கவில்லை, நாங்களும் கயிறை இழுக்கவில்லை.

நாலாவது முறை BOAT ஓட்டியவன் கடுப்பாகி, எங்களை மேடைக்கு பின்னால் நேராக கடலில் இறக்கினான். கால்ல தான் தண்ணிய தொட இறக்குறானோனு நம்பி இறங்கினோம், ங்கொய்யால, அப்படியே கடல்தண்ணில போட்டுடான். இரண்டுபேரும் முழுசா நனைஞ்சாச்சு. சரி மேல தூக்குவான்னு பார்த்தா BOAT ஐ மேடைக்கு அந்த பக்கம் நிறுத்திட்டான்.

தண்ணீரில் Landing

கூட இருக்கற HELPERS கயிறை பிடிச்சி எங்களை இழுக்க ஆரம்பிச்சாங்க. நானும் ஜாலியா “அமைதியான நதியினிலே ஓடம்”ன்னு ஜாலியா பாட ஆரம்பிச்சேன். பாராசூட் எங்களை ஒருபக்கம் மேல இழுக்க, மறுபக்கம்  எங்களை HELPERS மேடைக்கு இழுக்க ஜாலியாதான் இருந்தது.

அப்போ பின்னாடி இருந்த நம்ம நண்பருக்கு திடீருனு ஒரு சந்தேகம், என்னை கேட்டார். “அருண், உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”. அடங்கொக்கமொக்கா, இப்போதான் ஞாபகத்துக்கு வருது அய்யய்யோ! எனக்கு நீச்சல் தெரியாதே “காப்பாதுங்க”னு என மேடையில் இருந்த என் பிரண்ட்ஸை பார்த்து கையகாட்டினா, அவங்க ஏதோ நான் ஏரோபிளேன்ல போக போற மாதிரி டாட்டா காட்டுறாங்க. என்ன வில்லத்தனம்? எனக்கு நீச்சல் தெரியாம மேல போகபோறேன்னு தெரிஞ்சிதான் டாட்டா காட்டுறாங்களோ! நான் கத்த ஆரம்பித்ததை பார்த்த என் நண்பர் என் தலையில் தட்டு, “ங்கொய்யால, அதான் தண்ணீர்ல மிதக்க Special Costume ல Life jacketஉம் போட்டு இருக்கியே என்ன பயம்?” ன்னு கேட்ட பிறகுதான், “ஆமாம்ல” என உயிர் வந்தது

அப்பாடி! ஒரு வழியா கரை ஏறியாச்சு

ஒரு வழியா எங்களை மேடைக்கு இழுத்து விட்டனர். மொத்தமா நனைஞ்சி  உறிச்ச கோழிமாதிரி ரெண்டு பேரும் வந்து நின்றோம். நல்ல வேளை பணம், கேமரா போன்றவற்றை மேடையிலேயே வைத்துவிட்டு போனதால் தப்பிச்சது. 
 
நனைந்த கோழி - நான் தான்

இதுல உச்ச கட்ட சோகம் என்னன்னா, ஆசையா சாப்பிட வாங்கிவெச்ச TIC TAC மிட்டாய் BOX ஐ பாக்கெட்ல வெச்சி இருந்தேன். அது மொத்தமா நனைஞ்சி போய் அந்த BOX முழுசும் வெறும் ஆரஞ்சு கலர் தண்ணீர்தான் இருந்துச்சு. வட போச்சே... சாரி, TICTAC போச்சேஏஏஏஏஏஏஏ.....