Cricket Countdown....

Monday, May 24, 2010

மனைவி.....



மே 26,

ஒவ்வொருவருடமும் சாதாரனமாய் இருந்த இந்த நாள்,
2004 முதல் முக்கியமானதாய் மாறியது.

நட்பை காதலித்தேன், காதலியாய் வந்தாள்.
காதலை மணந்தேன், மனைவியாய் மாறினாள்.

நண்பன்னாய் அவள் பிறந்தநாளில்,
உலகத்தில் ஒருவனாய் வாழ்த்தினேன்.

காதலனாய் அவள் பிறந்தநாளில்,
நாங்களே உலகமாய் வாழ்ந்தோம்.

கணவனாய் அவள் பிறந்தநாளில்......
ஒரு முறையும் உடன் இருக்கவில்லை.....

பணத்தை தேடி, பிரதேசங்கள் சென்றேன்....
மனதையும் மழலையையும் மறந்தேன், மறுத்தேன்...

இன்று,

மனம், மனைவி, மழலை - மூன்றும் என்னுடன்....
மணமாகி இரண்டு வருடங்களில்.....
மனைவியுடன் கொண்டாடும்....
அவளின் முதல் பிறந்தநாள்....

என்ன பரிசு கொடுக்க?
எப்படி அவளை பரவசபடுத்த?

கொடுக்கும் பரிசு ....
அவளை சுனாமியாய் சுழற்றிபோடவேண்டும்...
பரவசத்தில் அவள்...
பதில் சொலமுடியாமல் பாடாய் பட வேண்டும்....

யோசித்து... யோசித்து....
ஏதும் புலபடாமல்...

கவிதை எழுதவா? காவியம் பாடவா?
ஓவியம் வரையவா? பூக்கள் கொடுக்கவா?

ஏது செய்தாலும்....
அது நீ என்மேல் காட்டும் காதலுக்கு ஈடு ஆகாதடி...

ஏன் அடி என்னை உன் காதலுக்கு கூட ஈடுகொடுக்க முடியாதவனாய் காதலித்தாய்...
பார்! என்னையே கொடுத்தாலும், எல்லாம் அற்பமே...

ஏதும் கிடைக்காமல், ஒற்றை ரோஜாவுடன்...
அவள் முன் நின்றேன்...
என்னிடம் வேறு பரிசு இல்லை என்றேன்...


" இந்த நொடி போதுமடா, என்ன பரிசு உண்டு உலகில் இதை ஈடுசெய்ய" என்றாள்.


அன்பு மனைவி காயத்ரிகாக இந்த பதிவு....




Friday, May 21, 2010

பாவம் பாகிஸ்தான் இளைஞ்சர்கள்!

பாகிஸ்தான் இளைஞ்சர்களுக்கு போறாத காலம் போலும்.

நிகழ்வு 1 :
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் 2009 முதல் ஜனவரி 2010 வரை ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் சென்றது . 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு ட்வென்டி ட்வென்டி என அனைத்திலும் தோல்வி. மருந்திற்கு கூட ஒரு வெற்றி இல்லை. டாஸ்மானியா உடன் நடந்த ப்ராக்டிஸ் மேட்ச் கூட டிரா வில் முடிந்தது. இதன் தொடர்ச்சியாக யூனுஸ் மற்றும் யூசுப் க்கு வாழ்நாள் தடையும், ரானா மற்றும் மாலிக் க்கு ஓராண்டு தடையும் விதித்தது.

நிகழ்வு 2 :
T20 உலக கோப்பை அரை இறுதியில், அந்த தொடரிலேயே அதிகபட்ச ஸ்கோர்களில் ஒன்றான 191 ஐ ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பதிவு செய்தது. ஆஸ்திரேலியா வும் பாகிஸ்தானின் சுழல் பந்து வீச்சில் திணறித்தான் போனது. கைக்கு ஏறியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல மைக்கல் ஹுசே கடைசி  ஓவரில் விஸ்வருபம் எடுத்து வெற்றியை பாகிஸ்தான்னிடம் இருந்து  பறித்தார் என்பதைவிட பிடுங்கினார் என்றே சொல்லவேண்டும்

நிகழ்வு 3 :
பாகிஸ்தான் அரசாங்கம் தற்போது FACE BOOK, YOUTUBE ஆகிய தளங்களை தடை செய்து உள்ளது. அவர்கள் சொல்லும் காரணம்:  OBJECTIONAL CONTENT. இன்டர்நெட்டில் பல தேவையிலாத விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. தடை என்பது தீர்வு இல்லை. அந்த தலத்தில் உள்ள URL மட்டும் தடை செய்தால் போதும். மேலும் அந்த இரு தலத்தில் மட்டும் OBJECTIONAL கன்டென்ட் இல்லை இன்டர்நெட் முழுதும் கொட்டி கிடக்கிறது. இண்டர்நேடையே தடை செய்யவேண்டியது தானே.

ஒன்றுமட்டும் நிச்சயம் குரங்குகையில் கிடைத்த பூமாலை போல தேவை இல்லாதவர்கள் கையில் கிரிக்கெட்டும் இண்டர்நெட்டும் சிக்கிஉளது. இன்னும் எனென தடைகள் வரும் மோ பாகிஸ்தான்னுக்கு.

பாகிஸ்தான் னுக்கு அதிர்ஷ்டமும் இல்லை, முளை உள்ள தலைவர்களும் இல்லை.

அணைத்து நாடுகளும் முன்னோக்கி சென்றால் பாகிஸ்தான் பின்னோக்கி கற்காலத்திற்கு செல்கிறது...

பிரேக்கிங் நியூஸ்:

எதிர் பார்த்தது போலவே இந்த பதிவை publish செய்த சில மணி நேரத்தில் TWITTER உம் தடை செய்ய பட்டுவிட்டது பாகிஸ்தானில்.

எல்லாம் சரி எப்போது தீவிரவாதத்தை தடை செய்யும் பாகிஸ்தான்!

டையில் பிட்:

சென்னையை கலந்கடிதாள் லைலா (புயல்) -


 பொது மக்கள் இதை கண்டு கலங்க வேண்டாம்.



Monday, May 17, 2010

தேடி சோறு நிதம் தின்று ......


வார்த்தைகள் தேவை இல்லை, காட்சியே கருத்தை சொல்லும்....




Monday, May 3, 2010

மறக்க முடியாத கிரிக்கெட் மேட்சுகள் - 2

மண்ணின் மைந்தர்கள்!

டைடன் கோப்பை, இந்தியா Vs ஆஸ்திரேலியா, அக்டோபர் 21 , 1996





VS


இன்னும் 8 ஓவர்களில் 52 ரன்கள் தேவை!

ஸ்டீவ் வாக் பந்து வீசுகிறார், சச்சின் அவுட்!

அவளவு தான் முடிந்தது, மேட்ச் காலி என பெங்களூர் ரசிகர்கள் கிளம்ப எத்தனிக்கும் போது "சில்" என பறந்தது ஒரு சிக்ஸர், அடித்தது ஸ்ரீநாத். என்னட இந்த பௌலேர்கள் ஸ்ரீநாத்உம் கும்ப்ளேயும் என்ன செய்ய போகிறார்கள் என நின்று பார்த்தவர்களுக்கு விருந்து காத்திருந்தது....

1996 - ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் கிரிக்கெட்இல் ஆதிக்கம் செலுத்திய காலம். இந்த இரு அணிகளுடன் இந்தியா ஒரு முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் பங்கேற்றது. முதல் சுற்றில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவை வென்று 4 புள்ளிகளுடன் முநிலை பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுகிடையான போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி பெறவேண்டிய கட்டாயம்.


டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி தலைவர் மார்க் டைலர் பட்டிங் செய தீர்மானித்தார். ஒரு முனையில் மார்க் வாக் உம், ஸ்லைட்டர் உம் அடுத்து அடுத்து அவுட் ஆகினர், டைலர் உடன் ஜோடி சேர்த்த ஸ்டீவ் வாக் அணி எண்ணிகையை உயர்த்தி 41 ரன்களில் பேவில்லியன் திரும்பினார், பின் வந்த பேவனும் டைலர் உம் ஸ்கோர் ஐ 215/7 ஆகா நிர்ணயித்தனர். டைலர் அவுட் ஆகாமல் 105 ரன்கள் எடுத்தார். டைலர் அடித்த ஒரே சதம் இது தான். தன் 98 வது மேட்ச் இல் எடுத்தார்.



அடுத்து ஆடவந்த இந்தியா 47 ரன்களுக்குள் சோமசுந்தர், டிராவிட், அசார், கங்குலி என 4 விக்கெட்களை பறிகொடுத்தாலும் சச்சின் பொறுப்புடன் விளையாடினார். மறுமுனையில் ஜடேஜா, மோங்கியா, ஜோஷி அவுட் ஆக சச்சின் இன் போராட்டம் முடிவுக்கு வந்தது. 88 ரன்களில் வாக் கிடம் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 164/8.



ஸ்ரீநாத் - கும்ப்ளே = ரன் விருந்து:

அந்த சிக்ஸர்கு பிறகு பந்து அனைத்து பக்கமும் பறக்க 4, 2 என இருவரும் விளாசினார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களால் கடைசி வரை இருவரையும் அவுட் ஆக்க முடியவில்லை. ஸ்ரீநாத் 23 பந்துகளில் 30 ரன்களையும், கும்ப்ளே 19 பந்துகளில் 16 ரன்களையும் குவித்து இந்தியாவை வெற்றி பெற செய்தனர்











உதிரிகள்:

அசார் LBW அவுட் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் பிரச்னை செய்ததால் ஆட்டம் 20 நிமிடங்கள் நிறுத்தபட்டது.

இந்த ஆட்டத்தில் மொத்தம் ஆறு கர்நாடக வீரர்கள் விளையாடினர். உண்மைலேயே மண்ணின் மைந்தர்கள் தானே?









ஸ்கோர் போர்டு: