மே 26,
ஒவ்வொருவருடமும் சாதாரனமாய் இருந்த இந்த நாள்,
2004 முதல் முக்கியமானதாய் மாறியது.
நட்பை காதலித்தேன், காதலியாய் வந்தாள்.
காதலை மணந்தேன், மனைவியாய் மாறினாள்.
நண்பன்னாய் அவள் பிறந்தநாளில்,
உலகத்தில் ஒருவனாய் வாழ்த்தினேன்.
காதலனாய் அவள் பிறந்தநாளில்,
நாங்களே உலகமாய் வாழ்ந்தோம்.
கணவனாய் அவள் பிறந்தநாளில்......
ஒரு முறையும் உடன் இருக்கவில்லை.....
பணத்தை தேடி, பிரதேசங்கள் சென்றேன்....
மனதையும் மழலையையும் மறந்தேன், மறுத்தேன்...
இன்று,
மனம், மனைவி, மழலை - மூன்றும் என்னுடன்....
மணமாகி இரண்டு வருடங்களில்.....
மனைவியுடன் கொண்டாடும்....
அவளின் முதல் பிறந்தநாள்....
என்ன பரிசு கொடுக்க?
எப்படி அவளை பரவசபடுத்த?
கொடுக்கும் பரிசு ....
அவளை சுனாமியாய் சுழற்றிபோடவேண்டும்...
பரவசத்தில் அவள்...
பதில் சொலமுடியாமல் பாடாய் பட வேண்டும்....
யோசித்து... யோசித்து....
ஏதும் புலபடாமல்...
கவிதை எழுதவா? காவியம் பாடவா?
ஓவியம் வரையவா? பூக்கள் கொடுக்கவா?
ஏது செய்தாலும்....
அது நீ என்மேல் காட்டும் காதலுக்கு ஈடு ஆகாதடி...
ஏன் அடி என்னை உன் காதலுக்கு கூட ஈடுகொடுக்க முடியாதவனாய் காதலித்தாய்...
பார்! என்னையே கொடுத்தாலும், எல்லாம் அற்பமே...
ஏதும் கிடைக்காமல், ஒற்றை ரோஜாவுடன்...
அவள் முன் நின்றேன்...
என்னிடம் வேறு பரிசு இல்லை என்றேன்...
" இந்த நொடி போதுமடா, என்ன பரிசு உண்டு உலகில் இதை ஈடுசெய்ய" என்றாள்.
அன்பு மனைவி காயத்ரிகாக இந்த பதிவு....