Cricket Countdown....

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, December 28, 2011

டெரர் கும்மி விருதுகள் - 2011


பாராட்டும் அங்கிகாரமும் ஒரு மனிதனை எந்த அளவு சந்தோஷப்பட வைக்கும் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. உலக அளவில் நோபல் பரிசு, ஆஸ்கார் விருது, கிராமி விருது, புக்கர் விருது என வழங்கி திறமையானவர்களை வருடா வருடம் கெளரவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எழுத்துகளுக்கு என பல விருதுகள் இந்தியா அளவிலும் உலக அளவிலும் வழங்கப்பட்டுகொண்டுதான் இருக்கிறது. அதே போல், பதிவுலகில் எழுது பவர்களும் யாருக்கும் குறந்தவர்கள் அல்ல, அவர்களுடைய எழுத்துக்களும் அங்கீகரிக்க பட வேண்டும் என்ற எண்ணத்தில் டெரர்கும்மி விருதுகள் - 2011 அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஒவ்வொரு பதிவருக்கும் அவருடைய எழுத்துக்கள் மேல் காதலும் ஏன் கர்வமும் இருக்கிறது, இருக்க வேண்டும். அதை பிறருக்கு எடுத்து சொல்லவும் உங்கள் எழுத்துக்களுக்கு அங்கீரம் தரவும் ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்தி உங்கள் பதிவுகளை இணையுங்கள்.

வெற்றியாளர் நீங்களாக கூட இருக்கலாம்......

பதிவுகளை இணைக்கவும், விதிமுறைகள் மற்றும் பரிசு விவரங்களை அறியவும் இங்கே செல்லுங்கள்.....


Tuesday, September 6, 2011

Trou Aux Cerf - உறங்கும் எரிமலை

மொரீசியஸ் நாடு எரிமலை வெடிப்பால் உருவான தீவுனு ஏற்கனவே சில பதிவுகள்ல சொல்லி இருக்கேன். இந்திய பெருங்கடல்ல ஆப்பிரிக்க கண்டத்துக்கு பக்கத்துல இருக்கற சின்ன புள்ளிதான் இந்த தீவு. தீவில் ஆங்காங்க சில உறங்கும் எரிமலைகள் இருந்தாலும், மிக முக்கியமானது "TROU AUX CERF" என்னும் எரிமலைதான்.

மொரீசியசின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த உறங்கும் எரிமலை சரியான கூம்புவடிவையும், அழகான மைய பள்ளத்தையும் கொண்டு இருக்கிறது. சுமார் 1,985 அடி உயரம் உள்ள இந்த எரிமலையின் மைய பள்ளம் மட்டும் 350 மீட்டர் விட்டமும், 80 மீட்டர் ஆழமும் கொண்டது. 

இப்போது உறங்கி கொண்டு இருந்தாலும் அடுத்து வரும் 1000 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வளவு ஏங்க அந்த மைய பள்ளத்துல இறங்க முடியாத அளவு அடர்த்தியான மரங்களும், நடுவுல பல அடி ஆழ சிறிய ஏரியும் அமைஞ்சி இருக்கு.

கீழ இருக்குற கூகுள் மேப்பை பாருங்க. கூகுள் மேப்பில் காணப்படும் சில அழகான இடங்களில் இந்த எரிமலையும் ஒன்று.


இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இந்த எரிமலைல இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்துல தான் என் ஆபிசும் வீடும் இருக்கு.இந்த மேப்ல மவுஸ் வெச்சி right side drag செய்தால் “+” வடிவில் ஒரு கட்டிடம் தெரியும் அதுதான் என் ஆபிஸ். இப்போ எதுக்கு இந்த விளம்பரம்னு கேக்கறீங்களா? நாங்க எல்லாம் எரிமலைல உட்கார்ந்து டீ சாப்பிடுறவங்க அப்படினு நான் சொல்லுறதை நீங்க நம்பனும்ல.....



Wednesday, July 6, 2011

Tamil பாட்டுங்கோ....

பிப்ரவரி மாசம் நான் இந்தியால சுற்றுபயணம் செஞ்சிட்டு இருந்தப்போ, (வெளிநாட்டுத் தலைவருங்க இந்தியா வந்து போறதுக்கு பேரு சுற்றுபயணம்னு தானேப்பா சொல்லுவாங்க) சென்னைல இருந்து எங்க ஊருக்கு நம்ம அரசு பேருந்துல போனேன். நம்ம ஊரு வண்டி என்னை ஏமாத்தலை, வழக்கம் போல எல்லாமே ஓட்ட உடைச்சலாதான் இருந்துச்சு. இதுல வீடியோ போடறேன் பேர் விழினு பழைய சிவாஜி பாட்டுகளை போட்டானுங்க. என்ன பிரச்சனையோ தெரியல ஆடியோ மட்டும் விட்டு விட்டு வந்துச்சு, ஆனா படம் தெளிவா போச்சு ஆங்கில சப் டைட்டில்லோட. 


அநியாயத்துக்கும் தமிழை அப்படியே டிரான்ஸ்லேட் (அவ்வ்வ்வ்.... நானும் ஆங்கிலத்தை அப்படியே மொழி பெயர்கறேன்னா?) பண்ணி வெச்சி இருக்காங்க..... சில பாடல்களின் முதல் வரி இதோ..... என்ன பாட்டுனு கண்டுபிடிங்க பார்க்கலாம்...


1) What i told? why you feel giddy?


2) Good man, I am a goodman for Myself

3) I am neither a poet nor I am a great fan

4) Is it somebody that i've seen young in a frock

5) What ever I want to say, You must say

6) Let the One let us, go

7) She has just flown away, she has forgetten me completely

8) can all the stones turn into diamonds

டிஸ்கி: இதை விட கொடுமையா நான் ஒரு பாட்டை டிரான்ஸ்லேட் பண்ணி இருக்கேன் இங்க போய் பாருங்க.



Wednesday, March 9, 2011

பதிவர் சந்திப்பும் கோல்மாலும்

அப்பாடி ஒரு வழியா ஊரை எல்லாம் சுத்தி முடிச்சிட்டு திரும்ப மொரீசியஸ் வந்து சேர்ந்தாச்சு. சரி ரொம்ப நாளா பதிவுலகம் பக்கமே வரலையேனு ஒவ்வொரு பிளாக்கா போய் பார்த்தா...... நம்ம சிரிப்பு போலீஸை சென்னைல சந்திச்சப்போ என்னமோ அவர் தான் சாப்பாட்டுக்கு பில் பே பண்ணதா பதிவுலாம் போட்டு இருக்காரு.

இந்த உலகம் இதையும் நம்பிடுச்சோனு ஒரு சந்தேகம்.... அதனால, அந்த பதிவர் சந்திப்பின் Behind the Scenes இதோ....

அவரோட இந்த பதிவுல சொன்னது 90% உண்மைதான். நான், பட்டிக்காட்டன் ஜெய், ஆயிரத்தில் ஒருவன் மணி, பனங்காட்டு நரி, தான் பிரபல பதிவருனு சொல்லிக்கற சிரிப்பு போலீஸ் ரமேஷ் - எல்லோரும் சந்திச்சி, எல்லோரையும் கலாய்ச்சி, போதாத குறைக்கு போன் பண்ணி கோகுலத்தில் சூரியன் வெங்கட்டையும் டெரர் பாண்டியனையும் கலாய்ச்ச பிறகு அந்த களைப்பு போக நல்லா சாப்பிட்டோம்.....


நானும் ஜெய்யும் ஏற்கனவே பேசி ரமேஷைதான் பில் கட்ட வைக்கறதுனு ஒரு பிளானே பண்ணி இருந்தோம். ஆனா அசருவாரா நம்ம போலீஸ், ஒத்த பைசா வெளில எடுக்கலையே.



என்னா பேசியும் பிரியோஜனம் இல்லைனு சொல்லி நம்ம ஜெய்யும் நானும் பிளான் B யை ஆரம்பிச்சோம். ரமேஷை நல்லா சாப்பிட சொன்னோம். ஓசி சோறச்சே விடுவாரா போலீஸ். செம கட்டு கட்டினாரு.


வெக்கற ஆப்பு தெரியாம இப்படி வேடிக்கை பார்க்குதே போலீசு

மெதுவா பேச்சு கொடுத்தோம் அவர்கிட்ட. ரமேஷ் நீங்க எந்த கிரெடிட் கார்டு உபயோகிக்கறீங்கனு கேட்டப்போ, உண்ட மயக்கத்துல இருந்த சிங்கம் (அதாங்க ரமேஷ்) தன்னோட கிரெடிட்கார்ட்டை கொடுத்துடுச்சு. உடனே ஜெய் அந்த கிரெடிட்கார்டு வெச்சி பே பண்ணிட்டாரு. எப்பூடி.....

இந்த டெக்னிக் வெச்சி இனி யாரும் ரமேஷை ஏமாற்றக்கூடாது. All Rights Reserved Only to Arun and Jey

டிஸ்கி 1: என்னை பார்க்க ஏர்போர்ட்டு வந்த ஆயிரத்தில் ஒருவன் மணிக்கும், என்னை வீட்டிற்கே வந்து பார்த்த காணாமல் போன கனவுகள் ராஜிக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.

டிஸ்கி 2: முக்கியமான விஷயம், அந்த ஓசி சோறுக்கு டிப்ஸ் (சுளையா 20 ரூபாய்)  நான் தான் கொடுத்தேன் யுவர் ஆனர்.


இந்த படத்தை பார்த்து ரமேஷ்தான், தானே விரும்பி பில் பே பண்ணாரு சொன்னா யாராவது இனியும் நம்புவீங்க?



Wednesday, January 19, 2011

மொரீசியஸ் தைப்பூசக்காவடி...

முஸ்கி: நாளைக்கு தைப்பூசம்

மலைக்கோவில்
தேர்
மொரீசியஸ்ல தமிழ் ஆட்சிமொழினு ஒரு பதிவுல சொல்லி இருந்தேன். தமிழர்களும் அதிகம். தமிழ் கடவுள் முருகன் மேல அளவுகடந்த பக்தி உள்ளவர்கள். பெரும்பாலானவர்களுக்கு சிவனும், முருகனும் குலதெய்வமாக இருக்கிறார்கள். தைப்பூச காவடியும், மகாசிவராத்திரியும் இங்கு தமிழ் நாட்டை விட வெகு விமரிசையாக கொண்டாடுறாங்க. இந்த இரண்டு விழாவுக்கும் அரசு விடுமுறை இருக்குதுனா பார்த்துக்கோங்க.



வரும் நாளைக்கு (ஜன்வரி 20) இங்க தைபூச காவடி. சென்ற வருடம் நான் இங்க வந்த புதுசுல பார்த்து அசந்து போயிட்டேன். இங்க பல தமிழர் கோவில்கள் இருக்குது. முருகன், துர்கை, சிவன் தான் பிரதானம். கோவிலுக்கு தமிழ் பேசும் குருக்கள்களை இந்தியா, இலங்கை பகுதில இருந்து வர வைக்கறாங்க.

காவடி ஊர்வலம்

கட்டர்போன்ஸ் (Quatre Bornes) என்ற இடத்துல இருக்கற முருகன் மலை கோவில் கொஞ்சம் பிரசித்தி பெற்றது. போன வருஷம் காவடிக்கு அங்க போயிருந்தேன். நம்ம தமிழ் நாட்டு கோவில மாதிரியே கட்டிட அமைப்பு, மலை மேல முருகன், தமிழ் குருக்கள், பாலாபிஷேகம் என தமிழ் நாட்டுல இருந்த உணர்வு.
ஆணி செருப்பு


காவடியும் நம்ம ஊர் மாதிரியே பால் காவடி, பழக்காவடி, வேல் காவடி, புஷ்பகாவடினு அமர்களபடுத்தினாங்க. இதுக்காக 10 நாள் விரதம்லாம் இருப்பாங்கலாம். எல்லாரும் காவடி எடுத்துக்கிட்டு ஊர்வலமா ஆட்டம் பாட்டத்துடன் வந்தாங்க. பெண்கள், நம்ம ஊருல இப்போலாம் விஷேசநாட்கள்ல கூட பார்க்க முடியாத டிரெடிஷனல் தாவணி, பாவாடை சட்டைல வந்து இருந்தாங்க.

சுவாமி வீதியுலா


(இதுக்கு தான் ரமெஷ் கூட சேர கூடாதுனு சொல்லுறது.  வெறும் படத்தை வெச்சி பதிவு போடுற வியாதி  தொத்திக்கிச்சே... சே...)

டிஸ்கி: கமெண்ட்ல அரோகரா போட தடை விதிக்கப்படுகிறது.


Wednesday, December 22, 2010

கேப்பிரியல் தீவு....2

சென்ற பதிவின் தொடர்ச்சி.....

நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் தண்ணீரில் விளையாடி கொண்டு இருந்தோம்.... திடீரென படகின் வேகத்தை குறைத்து திசைதிருப்பி நிறுத்தி... அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறி கடலின் ஒரு பகுதியை பார்க்க சொன்னார்கள்.....

அழகான நீல கடலின் அமைதியான நீரை கிழித்துக்கொண்டு “ஜிவ்” என வெளியே துள்ளி குதித்தது ஒரு டால்பின்....

உடனே, சுமார் 20 டால்பின்கள்  ஒன்றன்பின் ஒன்றாய் எங்கள் படகை சுற்றி திரிந்தன. எல்லா டால்பின்களும் “பாட்டில் மூக்கு” டால்பின் வகையை சார்ந்தவை. நாங்கள் சென்றது டால்பின்களின் இனப்பெருக்க சீசனாம், அப்பொழுது மட்டுமே இவை இந்த பகுதிக்கு வருமாம்.அவை துள்ளி விளையாடிய அழகே அழகு.


அவை சிறிது நேரம் விளையாடிவிட்டு சென்றதும், மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. கடல் நடுவில் மிகப்பெரிய மலை ஒன்று இருந்தது. எரிமலை வெடிப்பால் உருவானது என சொன்னார்கள். அதை கடந்தவுடன் கப்பலின் ஆட்டத்தாலும் என்னுடைய ஓவர் ஆட்டத்தலும் எனக்கு தலை சுற்ற... நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)

எரிமலைப்பாறை?!

கேப்பிரியல் தீவை அடைந்தவுடன் எங்களை சிறு ரப்பர் படகு மூலம் தீவில் எங்களை விட்டனர்... மதியம் சாப்பிட வந்து பிக் அப் செய்வதாக சொன்னார்கள். கடலில் குளித்து தீவை சுற்றி பார்த்தோம். திருமணம் செய்வதற்காக பிரத்தியேக திறந்த வெளி சர்ச் ஒன்று இருக்கிறது. எப்படிலாம் யோசிச்சி கல்யாணம் பண்ணுறாங்க?

கேப்பிரியல் தீவு


அங்கு, சில கடல்சார் இடங்களில் மட்டுமே பார்க்க கூடிய கயிறு போல நீண்ட வால் கொண்ட Phaethon lepturus (paille en queue) பறவைகளை காண முடிந்தது. இவை Air Mauritius ன் லோகோ என்பது கூடுதல் செய்தி. மீண்டும் மதியம் படகிற்கு சென்று லஞ்ச் முடித்து கடலில் ஆட்டம் போட்டோம்.

Phaethon lepturus

3 மணிக்கு கிளம்பி, வந்தது போலவே முழு வலையையும் நாங்கள் ஆக்கிரமித்து வந்து சேர்ந்தோம். இப்பொழுதும் கடல் நீரில நன்றாக நனைந்து... சுடும் வெயிலில் காய்ந்தும் வந்து சேர்ந்தோம்.

மறுநாள் தான் அதன் பின்விளைவுகள் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம் போட்ட எங்கள் அனைவரின் தோலும் உறிய ஆரம்பித்தது (skin burn).

நீச்சல் குளம் இல்லைங்க...கடல்தான். குளிப்பது நம்ம நண்பர்

திரும்பி வந்த பிறகு சொல்லுறாங்க... ஏதோ லோஷன்லாம் போட்டுட்டு தான் கடல் தண்ணில ஆடனுமாம்... அதனால தான் வெள்ளைகாரங்க நிழல்ல உட்கார்ந்து இருந்தாங்கலாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

டால்பின் வீடியோ:
கிட்டதட்ட 50 MB கொண்டது. அதை Compress செய்து 3gp யாக Convert செய்ததில் clarity குறைந்துவிட்டது. 50 MB original video தரவேற்றவும் முடியவில்லை. அதனால் அட்ஜெஸ்ட் செய்து பார்த்துக்கோங்க.





Monday, December 20, 2010

கேப்பிரியல் தீவு....

என்னுடைய பயண அனுபவங்கள் வரிசையில் இன்று ஒரு வித்தியாசமான பயணம் போகலாம். பாராசூட்டுக்கு அடுத்து இப்பொழுது கடல் வழி பயணம். டால்பின்களின் வரவேற்புடன்...

கேப்பிரியல் தீவு டாப்ல இருக்கு...
 
மொரீசியஸ் தீவின் வடக்கு முனையில் உள்ள Grandbay கடற்கரையிலிருந்து கடல் வழியாக சுமார் 1.30 மணி நேர பயண தொலைவில அமைந்துள்ளது Gabriel Island.  ரொம்ப நாளா பிளான் செஞ்சி ஒரு ஆளுக்கு மொரீசியன் ரூபாய் 1200 கொடுத்து அட்வான்ஸ் புக் செய்து கிளம்பினோம். படகில் மொத்தம் கிட்டதட்ட 25 பேர். எங்க கோஷ்டிதான் பெரிய கோஷ்டி... மற்றவர்கள் எல்லாம் வெள்ளைகாரர்கள்...
நாங்க போன படகு....

படகு ஒரு ஸ்பீட் போட் மாதிரி இருக்கும். படகின் முன்னால் இரு வலை போல கட்டி அதிலும் அமர்ந்து கொள்ளலாம். வலைக்கு கீழே கடல் தண்ணீர் தெளிக்கும். வலை கட்டி இருக்கு கம்பிகளில் காலை தொங்க விட்டு கடல் தண்ணீரை தொட்டபடியும் பயணம் செய்யலாம். எங்க கோஷ்டி  மொத்த வலையையும் ஆக்கிரமிச்சாச்சு.... வெளிநாட்டினர் டீசண்டாக படகில் நிழலில் அமர்ந்து கொண்டனர். 

ஹீரோ எப்பிடி...

ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே....கொடுத்த காசுக்கு மதியம் சாப்பாடும்... Unlimited Beer and  Fruit juice FREE....
படகில் ஒரு ஓட்டுனரும் 3 உதவியாளர்களும் வழக்கமான ரூல்ஸ் மற்றும் சில safety tips களை விளக்கினர். பெரும்பாலானோருக்கு படகு போடும் ஆட்டத்தில் வாந்தி வருமாம். எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க சொன்னார்கள்.

கிளம்பிய கொஞ்ச நேரத்தில் படகு போட்ட ஆட்டத்தை விட தண்ணீரை காலால் தொட்டு நாங்கள் போட்ட ஆட்டம் தான் அதிகம். தெளிவான வானமும், நீல கடலும், துள்ளும் தண்ணீரும், ஈரக்காற்றும் கண்டிப்பாய் வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள்.

நீலக்கடல்....தொலைவில் தெரியும் மலையை அடுத்து தான் கேப்பிரியல் தீவு

நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் தண்ணீர் விளையாடி கொண்டு இருந்தோம்.... திடீரென படகின் வேகத்தை குறைத்து திசைதிருப்பி நிறுத்தி... அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறி கடலின் ஒரு பகுதியை பார்க்க சொன்னார்கள்.....

அழகான நீல கடலின் அமைதியான நீரை கிழித்துக்கொண்டு “ஜிவ்” என வெளியே துள்ளி குதித்தது ஒரு டால்பின்....

தொடரும்....

டால்பின்களின் வரவேற்பு...




Tuesday, December 7, 2010

வலைச்சர அனுபவம்....

ஒரு வழியா ஒரு வாரம் வலைசரத்துல ஓட்டியாச்சு... சரி, அந்த அனுபவம் எப்படி? அதன் சாதக, பாதகங்கள் என்ன?

உண்மையிலேயே, வலைச்சர ஆசிரியர் என்பது மிகவும் பொறுப்பு மிகுந்த வேலைதான். பல ஜாம்பவான்கள் எழுதி இருக்கும் இடத்தில் நீங்களும் எழுதி உங்கள் முத்திரையை பதிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.  நிறைய படிக்க வேண்டும், புதிய பதிவர்களை தேட வேண்டும் (அடேய்! அதுதாண்டா வலைச்சர கான்செப்ட்டே!)

எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் விளையாட்டாய் தெரிந்தாலும், நேரம் நெருங்க நெருங்க ஒரு சீரியஸ்னேஸ் ஆட்டோமெட்டிக்காக வந்துவிடுகிறது. உங்களின் பதிவுகளை பற்றி எழுத, உங்கள் பழைய பதிவுகளை படிக்கும் போதுதான் நம்முடைய ( + ) மற்றும் ( - ) தெரியவருது. என் சில பதிவுகளை படித்து விட்டு இவ்வளவு நல்லா நானா எழுதினேன்னு ஆச்சரியப்பட்டதும், சில பதிவுகளை பார்த்து தவறுகளை கண்டு கொண்டது இந்த வலைசரத்தால்தான். இப்போ தெரியுது மத்தவங்க எவ்வளோ கஷ்ட்டப்பட்டு இருப்பாங்கனு, என் பதிவை படிச்சி.

சாதகங்கள்:
1. மற்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறீர்களோ இல்லையோ கண்டிப்பாய்  நீங்கள் வெளிச்சத்திற்கு வருகிறீர்கள்
2. உங்கள் எழுத்து நடை, பொது அறிவு, கற்பனைத்திறன் எல்லாம் ஊன்றி கவனிக்கபடுவதால், உங்களுக்கு ஒரு பொறுப்பு வந்து விடுகிறது.
3. உங்கள் followers எண்ணிக்கை கணிசமாக உயரும்.
4. நீங்கள் அறிமுகப்படுத்திய புதிய பதிவர்கள் உளமாற சொல்லும் நன்றியை நீங்கள் உணர முடியும்.
5. உங்களை பாராட்டி அவர்கள் ஒரு நாலு வார்த்தை எழுதுவார்கள் அவர்கள் பதிவில்.
6. முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்க....

பாதங்கள்:
1. நிறைய மெனகெடவேண்டி இருக்கும். நிறைய பதிவுகள் (மொக்கைகள் உட்பட) படிக்கவேண்டி இருக்கும்
2. தினமும் பதிவு எழுதனும், அதுக்கு நிறைய ஹோம் ஒர்க் செய்யனும்.
3. நண்பர்களின் பிளாக்குகளுக்கு போக கொஞ்சம் சிரமமா இருக்கும்.
4. ஒரு வாரம் முடிஞ்சிவந்தா... புது உலகத்துல இருக்கற மாதிரி இருக்கும்.

டிப்ஸ்: (இப்படித்தான் நான் செஞ்சேன்)
1. எழுதப்போறதுக்கு 2 வாரத்துக்கு முன்னாடி இருந்தே பதிவர்கள் / பதிவுகள் லிஸ்ட் ரெடி பண்ண ஆரம்பிச்சுடுங்க
2. உங்களுக்கு கமெண்ட் போடுறவுங்க, நீங்க கமெண்ட் போடுற பதிவர்களுக்கு கமெண்ட் போடுறவுங்களை எல்லாம் பார்த்துட்டே இருங்க.
3. புதுசா யாராவது தெரிஞ்சா அவங்க பிளாக் போய் பாருங்க.
4. அவங்க யாரை எல்லாம் follow பண்ணுறாங்கனும் போய் பார்த்துட்டு வாங்க.
5. வித்தியாசமா ஒரு கான்செப்ட்ல பதிவர்களை அறிமுப்படுத்துங்க. (பூக்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள், வண்ணங்களின் பெயர்கள் - இப்படி)
6. ஓவரா தூய தமிழ்ல எழுதாதீங்க... பேச்சு தமிழ்தான் ஒரு கோர்வையா நல்லா இருக்கும்
7. எதுக்கும் திட்டமிட்டதைவிட அதிக பதிவர்களின் பட்டியலை வெச்சிக்கோங்க. உங்களுக்கு முன் வாரம் எழுதும் ஆசிரியர்கள் உங்கள் பட்டியலில் இருப்பவரை அறிமுகப்படுத்தும் சாத்தியம் அதிகம் (நம்ம ராம்ஸ் இப்போ என்னால அவஸ்தைபடுற மாதிரி... நல்ல வேளை நான் எழுதினதுக்கு முன் வாரம் வலைச்சரத்துக்கு லீவ் விட்டுடாங்க)
8. தயவு செய்து பாரதி, பாரதிதாசன், ள, ல, ற, ர - இதை எல்லாம் கரெக்ட்டா போடுங்க... இல்லைனா எனக்கு கிடைச்ச பல்பு உங்களுக்கும் கண்டிப்பா கிடைச்சிடும். அவ்வ்வ்வ்வ்....

சரி, வலைசரத்துல நான் எழுதிய பதிவுகளின் பட்டியல் இதோ....
1. சீனா சாரின் வரவேற்ப்பு - வருக ! வருக ! அருண் பிரசாத் ! கலக்குக !
2. சுயபுராணம் - ஆட்டம் ஆரம்பம்!
3. முதல் நாள் அறிமுகங்கள் -  கதம்பம் ஒன்று
4. இரண்டாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் இரண்டு...
5. மூன்றாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் மூன்று...
6. நான்காம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் நான்கு....
7. ஐந்தாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஐந்து.....
8. ஆறாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஆறு......
9. வாழ்த்தும் வழியனுப்புதலும் - செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

தயவுசெய்து இதை போய் மறுபடியும் படிச்சி நொந்து போகாதீங்க....
ஆங்... சொல்ல மறந்துட்டனே.... வலைசரத்தில் 7 நாளும் கமெண்ட் சரவெடி கொண்டாட்டம் நடத்திய நம்ம கும்மி குரூப்பு மற்றும் நண்பர்களுக்கும் நன்றி!



Thursday, November 4, 2010

தீபாவளி ஸ்பெஷல் கிப்ட்....

குழந்தைகளுக்கு எந்த பண்டிகை பிடிக்கும் என கேட்டு பாருங்கள்.... கண்டிப்பாய் அவர்கள் தீபாவளி என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால், எனக்கும் அந்த பண்டிகைதான் பிடிக்கும். ஹி ஹி ஹி...

சரி தீபாவளி கிப்ட் கொடுப்பதற்கு முன் ஒரு சின்ன கொசுவத்தி சுத்தலாமா? சிறுவயதில் தீபாவளி சமயங்களில் என் பாட்டி வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்து இருந்தேன். அவர் வேலூர் அருகில் உள்ள ஆரணியில் வசிக்கிறார். ஒவ்வொரு வருடமும் மே மாத விடுமுறைக்கும் அங்குதான் செல்வதால் எனக்கு என ஒரு நண்பர் பட்டாளம் இருந்தது.

தீபாவளி சமயங்களில் எங்கள் தெருவில் ஒரு வழக்கம் உண்டு. சிறுவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீபாவளி அன்று விடியற்காலை நரகாசுரன் வதம் நிகழ்ச்சியை செய்வோம். இது பல காலமாக அங்கு நடந்து வரும் வழக்கம். அந்த வருடமும் அந்த நிகழ்ச்சியை செய்தோம். அந்த தெருவில் ஒரு ஓவியர் இருந்தார். அவர் ஒரு ஆளுயர அட்டையில்  கட்அவுட் வடிவத்தில் கிருஷ்ணர், நரகாசுரன் படங்களை வரைந்து தந்தார். நரகாசுரன் தலை தனியாக கழலும்படி அமைத்து இருந்தார்.


நாங்கள் எல்லாம் முந்தின நாள்  இரவு அவர் அவர்கள் வசதிக்கு தக்கபடி ஆளுக்கு கொஞ்சம் பட்டாசு எடுத்து வந்து ஒரு வீட்டில் கிருஷ்ணர் நரகாசுரன் படங்களுடன் சேர்த்து வைத்தோம். மறுநாள் காலை  மணி அடித்து கொண்டும் பட்டாசு வெடித்துக் கொண்டும் கிருஷ்ணர் படத்தை ஊர்வலமாக மூன்று தெரு சுற்றி வந்து எங்கள் தெருவின் மையத்தில் கிருஷ்ணரையும் நரகாசுரனையும் எதிர் எதிரில் சுமார் 5 மீட்டர் இடைவெளியில் வைத்தோம்.

நரகாசுரன் தலையில் இருந்து ஒரு நூல் கட்டி அதன் மறுமுனையை கிருஷ்ணர் கையில் கட்டினோம். அந்த நூலில், ரயில் வெடியை வைத்தோம். அது கொளுத்தியவுடன் வேகமாக சென்று நரகாசுரன் தலை இடித்து துண்டிக்குமாறு செட் செய்தோம்.

எல்லாம் திட்டமிட்ட படிதான் சென்றது. ஆனால், இந்த பாழாய் போன ரயில் வெடி சொதப்பிவிட்டது. சரியாக நூலில் சென்ற ரயில் வெடி நரகாசுரன் அருகில் சென்றவுடன் என்ன ஆனாததோ தெரியவில்லை உடனே வேகமாக ரிட்டன் ஆனாது. (பிறகுதான் சொன்னார்கள் அந்த வெடி அப்படித்தான் இரண்டு பக்கமும் சென்று வருமாம்) நேராக கிருஷ்ணர் கையை பதம்பார்த்து விரலை துண்டித்தது. சுதர்சணசக்கரத்துடன் கிருஷ்ணர் விரல் சில அடிகள் தள்ளி விழுந்தது. விடு சண்டைனா எதிரிமேல 10 அடி விழும்போது நம்ம மேல 1 அடி விழறது சகஜம்தான்னு கிருஷ்ணரை சமாதானம் செய்து விட்டு அடுத்த பிளான் B ஐ ஆரம்பித்தோம், அடுத்த அடி எங்கள் மீது விழப்போவது தெரியாமல்.

எங்கள் பிளான் B என்ன வென்றால், நரகாசுரன் தலையில் ராக்கெட்டை கட்டி பற்ற வைப்பது. அது தலையுடன் மேல சென்ற பிறகு மீதி நரகாசுரனை கொளுத்திவிடுவது. அந்த பிளான் சரி என தோணவே, அனைத்தையும் செட் செய்தோம். கிருஷ்ணர் தானே வதம் செய்ய வேண்டும்! எனவே, எங்களில் கிருஷ்ணா என பெயர் கொண்டவனை கூப்பிட்டோம் (என்ன ஒரு சிந்தனை, அப்போவே நான் இப்படிதான் ரொம்ப அறிவு) அவனை கன்வின்ஸ் செய்து கொளுத்த சொன்னோம்.

அடுத்த விபரீதம் நடந்தது. கொளுத்தியவுடன் நரகாசுரன் தலை ராக்கெட் பாரம் தாங்காமல் சரிய, ராக்கெட் மட்டும் தலையில் இருந்து பிடுங்கி கொண்டு நேராக அருகில் இருந்த குடிசை ஓலையில் தஞ்சம் அடைந்து வெடித்தது.  சிறியதாக தீப்பற்றவும் ஆரம்பித்தது. நாங்கள் போட்ட கூச்சலில் வீட்டில்  இருந்த அனைத்து பெரியவர்களும் ஒரு வழியாக ஓடிவந்து தீயை அனைத்தனர். 

அடுத்து இன்னொரு நண்பன் பிளான் C செய்யலாம்டா என சொல்ல, நாங்கள் அனைவரும் ஆணியே புடுங்க வேணாம் என்று சொல்லி நரகாசுரன் தலையை நாங்களே தூக்கி போட்டு விட்டு கிளம்பினோம். வீட்டுக்கு போன பின் எங்களுக்கு டமால் டிமீல் சரவெடியுடன் நிஜ தீபாவளி ஆரம்பித்தது....

டிஸ்கி: தயவுசெய்து, குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருங்கள். டீவி நிகழ்ச்சிகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். 

அனைவருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

ஓ! தீபாவளி கிப்ட் தரலைல. இந்த ஆடியோ கிளிப்பை கேளுங்கள்.




என் ஒன்றரை வயது மகள் ஷம்ஹித்தா உங்களுக்கு “Happy Deepavali” சொல்கிறாள்

ஆடியோ கிளிப் ஒர்க் ஆகவில்லை எனில் இங்கு கிளிக் செய்து கேட்கவும்.

Tuesday, October 26, 2010

சில்லுனு ஒரு பாராசூட் பயணம்...

என்னுடைய சுவாரசிய பயணங்களின் வரிசையில் இந்த முறை ஒரு வித்தியாசமான பயணம். இந்த முறை பேருந்திலோ இரயிலிலோ அல்ல. வித்தியாசமாக பாராசூட் பயணம் அதுவும் காமெடி + அபாயத்தில் முடிந்த பயணம். சரி, பயணத்திற்கு கிளம்புவோம்....

சென்னை நண்பர் ஒருவர் ஒரு வார பயணமாக மொரீசியஸ் வந்து இருந்தார். அவருடன் சேர்ந்து நாங்கள் ஒரு 6 பேர் குழுவாக ஊர் சுற்ற கிளம்பினோம். சரி வெகுநாள் ஆசையான பாராசூட் பயணத்தை அனுபவிக்கலாம் என்று  ஒரு உள்ளூர் நண்பரின் ரிசார்ட் ஒன்றிற்கு சென்றோம்.

அங்கு அவர் பாராசூட்டில் பறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தயாராக இருந்தார். அங்கு சென்ற பின் அவ்ர் எங்களை ஒரு SPEED BOAT - ல் கடல் நடுவில் அமைக்கப்பட்ட மிதக்கும் மேடைக்கு அழைத்து சென்றார். அந்த மேடை கடல் நடுவில் தண்ணீரில் இருந்ததால் போதையில் ஆடுவது போல ஆடியது. (மேடைதாங்க தண்ணீல இருந்துச்சு நாங்க தெளிவாத்தான் இருந்தோம்). பின் ஒவ்வொருவராக பேலன்ஸ் செய்து நின்று ஸ்பெஷல் COSTUME மாட்டிகொண்டோம்.

Special Costume ல் நாந்தாங்கோ....

பாராசூட்டில் இரண்டு இரண்டு பேராக பயணம் செய்வதாக முடிவானது. நானும் சென்னை நண்பரும் ஒன்றாக செல்ல முடிவெடுத்தோம். ஏனென்றால் அவர் கொஞ்சம் வெயிட்டான ஆள். நான் முன்பும் அவர் எனக்கு பின்னாலும் அமர, எங்கள் காஸ்டியூமில் இருந்த கொக்கியை பாராசூட்டில் இணைத்தனர். பாராசூட்டை ஒரு நீண்ட கயிற்றில் கட்டி அதன் மறுமுனையை SPEED BOAT-ல் கட்டினர்.

நல்லாதான் கிளம்புச்சி, வலது பக்கம் ஒரு கிமீட்டரும், இடது பாகம் ஒரு கிமீட்டரும் சென்று வந்தோம். இதில் ஒரு மேட்டர் என்னன்னா? மற்றவர்களை அழைத்து போன போது, கடல் நடுவில் BOAT-ஐ நிறுத்தி பாராசூட்டை தண்ணீரில் இறக்கினர் பாராசூட்டில் இருப்பவர் கால் கடல் தண்ணீரை தொட்டவுடன் BOAT -ஐ கிளப்பி, மீண்டும் பாராசூட் பறக்கவைப்பர். இதை எங்களுக்கு மட்டும் செய்யவில்லை. எனக்கு செம கடுப்பு.

Take Off - சாகசம் ஆரம்பம்

மேடைக்கு மேலே வந்தவுடன், பாராசூட் கயிறை இழுத்து இழுத்து விட வேண்டும். அப்பொழுது தான் பாராசூட் சரியாக மேடையில் இறங்கும். எங்களுக்கு இருந்த கடுப்பில் நாங்கள் கயிறை இழுக்கவில்லை. பேலன்ஸ் தவறியதால் மீண்டும் எங்களை ஒரு ரவுண்ட் கொண்டு சென்று மேடைக்கு மேல் நிறுத்தினர். இப்பொழுதும் எங்களை கடலில் இறக்காததால் மீண்டும் நான் கயிறை இழுக்கவில்லை. இப்படியே மூன்று முறை அவரும் எங்களை இறக்கவில்லை, நாங்களும் கயிறை இழுக்கவில்லை.

நாலாவது முறை BOAT ஓட்டியவன் கடுப்பாகி, எங்களை மேடைக்கு பின்னால் நேராக கடலில் இறக்கினான். கால்ல தான் தண்ணிய தொட இறக்குறானோனு நம்பி இறங்கினோம், ங்கொய்யால, அப்படியே கடல்தண்ணில போட்டுடான். இரண்டுபேரும் முழுசா நனைஞ்சாச்சு. சரி மேல தூக்குவான்னு பார்த்தா BOAT ஐ மேடைக்கு அந்த பக்கம் நிறுத்திட்டான்.

தண்ணீரில் Landing

கூட இருக்கற HELPERS கயிறை பிடிச்சி எங்களை இழுக்க ஆரம்பிச்சாங்க. நானும் ஜாலியா “அமைதியான நதியினிலே ஓடம்”ன்னு ஜாலியா பாட ஆரம்பிச்சேன். பாராசூட் எங்களை ஒருபக்கம் மேல இழுக்க, மறுபக்கம்  எங்களை HELPERS மேடைக்கு இழுக்க ஜாலியாதான் இருந்தது.

அப்போ பின்னாடி இருந்த நம்ம நண்பருக்கு திடீருனு ஒரு சந்தேகம், என்னை கேட்டார். “அருண், உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”. அடங்கொக்கமொக்கா, இப்போதான் ஞாபகத்துக்கு வருது அய்யய்யோ! எனக்கு நீச்சல் தெரியாதே “காப்பாதுங்க”னு என மேடையில் இருந்த என் பிரண்ட்ஸை பார்த்து கையகாட்டினா, அவங்க ஏதோ நான் ஏரோபிளேன்ல போக போற மாதிரி டாட்டா காட்டுறாங்க. என்ன வில்லத்தனம்? எனக்கு நீச்சல் தெரியாம மேல போகபோறேன்னு தெரிஞ்சிதான் டாட்டா காட்டுறாங்களோ! நான் கத்த ஆரம்பித்ததை பார்த்த என் நண்பர் என் தலையில் தட்டு, “ங்கொய்யால, அதான் தண்ணீர்ல மிதக்க Special Costume ல Life jacketஉம் போட்டு இருக்கியே என்ன பயம்?” ன்னு கேட்ட பிறகுதான், “ஆமாம்ல” என உயிர் வந்தது

அப்பாடி! ஒரு வழியா கரை ஏறியாச்சு

ஒரு வழியா எங்களை மேடைக்கு இழுத்து விட்டனர். மொத்தமா நனைஞ்சி  உறிச்ச கோழிமாதிரி ரெண்டு பேரும் வந்து நின்றோம். நல்ல வேளை பணம், கேமரா போன்றவற்றை மேடையிலேயே வைத்துவிட்டு போனதால் தப்பிச்சது. 
 
நனைந்த கோழி - நான் தான்

இதுல உச்ச கட்ட சோகம் என்னன்னா, ஆசையா சாப்பிட வாங்கிவெச்ச TIC TAC மிட்டாய் BOX ஐ பாக்கெட்ல வெச்சி இருந்தேன். அது மொத்தமா நனைஞ்சி போய் அந்த BOX முழுசும் வெறும் ஆரஞ்சு கலர் தண்ணீர்தான் இருந்துச்சு. வட போச்சே... சாரி, TICTAC போச்சேஏஏஏஏஏஏஏ.....


Monday, October 18, 2010

மம்மி... நான் ஸ்கூலுக்கு போறேன்....

பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்படும் கஷ்டம் அனைவருக்கும் தெரியும். அவர்களை குளிப்பாட்டி, ரெடி செய்து, சாப்பிட வைத்து, புத்தகங்களை சரிபார்த்து பள்ளி பேருந்துக்கோ அல்லது பள்ளி வாசலிலோ அவர்களை விடும்வரை ஓட வேண்டும்.

ஒருகட்டத்தில் இது சுகமானதாய் மாறி, பலர் விருப்பத்துடன் ஓடுவதும் உண்டு. ஆனால், முதல் முதல் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களின் கவலை வேறு விதம்.....

இத்தனை நாள் தன் பார்வையிலேயே வளர்ந்த பிள்ளை சில மணி நேரங்கள் தன்னை பிரிந்து இருக்குமா?

அங்கு மற்ற குழந்தைகளுடனும் ஆசிரியர்களுடனும் நன்றாக பழகுமா?

தன்னை காணாமல் தவிக்குமா?

அடம் செய்து பிடிவாதம் செய்யுமா?

மற்ற குழந்தைகளிடம் அடிவாங்கி அழாமல் பார்த்துகொள்வார்களா?

அடம் செய்வதால் ஆசிரியர்கள் குழந்தை மேல் கோபப்படுவார்களா?

இப்படி பல கேள்விகள் எழும்....

குழந்தை அழுமா என நினைத்து அழும் பெற்றோர்கள் பலர்... 

ஆனால், அந்த குழந்தை முதுகில் சிறிய பையை மாட்டி கொண்டும், சட்டையில் ஒரு கர்சிப் குத்திக்கொண்டும், ஒரு கையில் தண்ணீர் பாட்டிலை மாட்டி கொண்டும் பெற்றோருக்கு முத்தம் தந்து டாட்டா காட்டி பள்ளிக்கு செல்லும் அழகை பார்க்க, இரு கண்கள் போதாது.

ஆம்,

என் மகள் ஷம்ஹித்தா இன்று முதல் பள்ளிக்கு போகிறாள்! நாங்கள் இன்று முதல் எங்கள் ஓட்டத்தை ஆரம்பிக்கிறோம்.... என்ன தான் 3 மணி நேரமே என்றாலும், PlaySchool தான் என்றாலும் மனதில் ஒரு வித பயமா தயக்கமா சந்தோசமா  என என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு உருண்டு கொண்டு இருக்கிறது. பார்போம்.... எப்படி சமாளிக்கிறாள் என்று

ஆனால், காலம் மிக வேகமாய்தான் ஓடுகிறது! நம்மைவிட....



மம்மி டாட்டா... நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்....


Monday, October 4, 2010

எந்திரன் - படத்துக்கு டிக்கெட் வேணுமா?

தமிழ் படங்களே ரிலீஸ் ஆகாத மொரீசியஸ்-ல் தலைவர் படம் எந்திரன் ரிலீஸ் ஆகிறது, நான் சனிக்கிழமை பார்க்க போகிறேன் என்று சென்ற பதிவில் எழுதி இருந்தேன்.  சொன்னபடியே, சனிக்கிழமை 1 மணி ஷோக்கு கிளம்பியாச்சு. இங்கு அட்வான்ஸ் புக்கிங் கிடையாது என்பதாலும், மொத்த நாட்டிலேயே ஒரே ஒரு தியேட்டரில்தான் படம் ரிலீஸ் என்பதாலும் நண்பர்களை முடிந்தால் சீக்கிரம் சென்று டிக்கெட் எடுக்க சொன்னேன்.

வழக்கம் போல அவர்கள் சொதப்பினர். நான் அவசர அவசரமாக 12.45 க்கு அங்கு போய் சேர்ந்தேன். அங்கு சென்றால்,

தியேட்டருக்கு வெளியே பயங்கர கூட்டம்
டிக்கெட் வாங்க பெரிய கியூ
உள்ளே உட்கார இடம் இல்லாமல் தியேட்டர் Full
வசனம் கேட்க முடியாதபடி விசில் சத்தம்

இதெல்லாம் இருக்கும்னு தாங்க நானும் நினைச்சேன். ப்ச், அப்படி ஒன்னும் இல்லை. தியேட்டர் காலி. நான் வாங்கிய 3 டிக்கெட்டுக்கே எனக்கு ராஜமரியாதை. ஆமாங்க, டிக்கெட் வாங்கினவுடனே என்னை தியேட்டருக்கு உள்ளே உட்கார சொல்லி விட்டனர். (2 நண்பர்களும் இன்னும் வந்து சேரவில்லை). அதனால் கடைசி 15 நிமிடம் படத்தை முதலிலேயே பார்த்துவிட்டேன். ;)
எவ்வளோ கூட்டம்!
நீண்ட வரிசை!
1 மணிக்கு ஷோ அதுவரை நண்பர்கள் வரவில்லை. நான் வெளியில் அவர்களுக்காக காத்து இருக்க, ஆப்பரேட்டரும் எனக்காக 10 நிமிடம் காத்திருந்துவிட்டு படத்தை ஆரம்பித்தார், தியேட்டருக்கு வந்த மொத்தம்  30 பேருக்காக. 5 நிமிடத்தில் நண்பர்கள் வந்து சேர்ந்தனர். 

விசிலும், தலைவா! என அழைக்கும் ரசிகர்களும், காட்சிக்கு காட்சி வரும் கைத்தட்டல்களும் இல்லாத ரஜினி படம் - பார்க்க பிடிக்கவில்லை. ஆனால், தமிழ்நாடே பார்க்க விரும்பும் எந்திரன் படத்தை ரிலிஸ் ஆன மறுநாளே பார்த்தது மட்டும் சந்தோஷம். இந்தியா வரும் போது கண்டிப்பாய் மறுபடி பார்க்கனும், அட்லீஸ்ட், ரசிகர்கள் கைத்தட்டல் கேட்கவும், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சவுண்ட் எபெக்ட்ஸ்காகவும்.
படம் மொரிசியஸ்ல் ரிலிஸ் செய்யபட்டதை சரியாக விளம்பரபடுத்தாதும், தமிழர்களை விட அதிக அளவில்  “ஹிந்தி”யர்கள் இருப்பதும் இந்த மந்தமான ரிலிஸ்க்கு காரணமாக இருக்கலாம். தமிழ் மொழி,  மொரிசியஸ்-ல் ஒரு ஆட்சி மொழி என்பது குறிப்பிடதக்கது.

சரி யாருக்காவது எந்திரன் பட டிக்கெட் வேணுமா? இங்க வாங்க. என்ன படத்தின் டிக்கெட் விலை 150 ரூபாய், ஆனால், விமான டிக்கெட் விலை 30,000 ரூபாய்! வர்றீங்களா? படத்துக்கு டிக்கெட் வேணும்னா நான் ஸ்பான்சர் பண்ணுறேங்க... நோ பிராப்ளம்.

படம் எப்படினு ஒரு வார்த்தை கூட சொல்லலைனா எப்படி? ஒரே வார்த்தைல சொல்லனும்னா - “செம

DOT (இது படம் பார்த்தவங்களுக்கு புரியும்)


Thursday, September 30, 2010

ரஜினி படம் - First Day, First Show

ரஜினி - இந்த வார்த்தைக்கும் இந்த மனிதனுக்கும் மயங்கிகிடக்கும் பல தமிழர்களில் நானும் ஒருவன்.

ஜீன் 14, 2007, மறுநாள் சிவாஜி படம் official ஆக ரிலீஸ். ஆனால், ரசிகர் மன்றத்தை பிடித்து எங்கள் அலுவலம் சார்பாக 10 டிக்கெட் அன்று இரவு பிரிவியூ ஷோவிற்கு வாங்கி விட்டோம். குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் இரவு 9 மணிக்கு ஷோ. நான் புரசைவாக்கம் கிளையிலும், மற்ற நண்பர்கள் நுங்கம்பாக்கம் கிளையிலும் வேலை செய்தனர்.


நான் மாலை 7 மணிக்குதான் புறப்பட முடிந்தது. வழியில் மற்றோரு நண்பரையும் பிக் கப் செய்து கொண்டு தியேட்டருக்கு சென்று சேர 8.45 ஆகிவிட்டது. மற்ற நண்பர்கள் தியேட்டர் உள் சென்று விட்டனர். இதுதான் நான் முதல் முறை ரஜினி படத்தை சென்னையில் முதல் காட்சியில் பார்ப்பது. என்ன ஆராவாரம், எவ்வளவு மகிழ்ச்சி. அந்த GST சாலையில் ரஜினிக்கு தேர் இழுப்பதும், ரஜினி படம் போட்ட டீ சர்ட் மாட்டி கொண்டு பைக்கில் சுற்றுவதும்,  சரம் சரம் ஆக 1000 வாலா பட்டாசுக்கள் வெடிப்பதுமாக அந்த ஏரியாவே களைக்கட்டியது.


கடைசி நேரத்தில் போன எங்களால் உள்ளே சென்று என் பைக்கை பார்க் செய்ய முடியவில்லை. பார்க்கிங் full ஆகி, ரோடு வரையும், பக்கத்து சந்துகளிலும் நிறுத்தி இருந்தனர். நானும் வேறு வழியில்லாமல் என் வண்டியையும் சந்தில் நிறுத்திவிட்டு தியேட்டருக்கு உள்ளே சென்றேன். ஏற்கனவே full, நண்பர்கள் எங்கோ நடுவில் உட்கார்ந்து இருப்பதாக மொபைலில் கூறினர். வேறு வழியின்றி வாசலிலேயே நின்று இடைவேளை வரை பார்த்தோம்.

அன்று தான் சென்னை ரஜினி ரசிகர்களின் ஆர்வத்தையும் ஆராவாரத்தையும் பார்த்தேன்.... இந்த மனிஷன் ரஜினிக்கு இவ்வளவு crazeஆ! இடைவேளைக்கு பிறகு நண்பர்களின் மடியில் அமர்ந்து மீதிப்படம் பார்த்து விட்டு வந்தேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களில் அதுவும் ஒன்று! பார்த்துவிட்டு வந்து 10 நாளைக்கு படம் பார்க்க டிக்கெட் கிடைக்காதவர்களை வெறுப்பேற்றியது தனி கதை.

சரி, இதை எதுக்கு இப்போ சொல்லுறேன்னு பார்கறீங்களா! சனிக்கிழமை நான் “எந்திரன்” பார்க்க போறேனே! தமிழ் படமே ரிலிஸ் ஆகாத மொரீசியஸ்-இல் தலைவர் படம் ரிலீஸ்.... ஜாலீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....


Saturday, September 25, 2010

ஐதராபாத் to சென்னை...2

விநாயக சதூர்த்திக்கு கிளம்ப வேண்டியவன், டேமேஜரால் சிறை பிடிக்கப்பட்டதை சென்ற பதிவில் பார்த்தோம், அதன் தொடர்ச்சி...

சரி என்று வெள்ளிக்கிழமை சென்னை செல்ல வேண்டிய டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டேன். இரவு ஆபிஸ் கெஸ்ட் அவுசுக்கும் திரும்பியாச்சு. மறுநாள் காலை வந்தான்யா அந்த Factory Engineer. அட! நம்ம சென்னை பையன். ஊரெல்லாம் சுத்தி கெஸ்ட் அவுஸ் அட்ரஸ் கண்டு பிடிக்க முடியாம கெஸ்ட் அவுஸ்க்கு போன் பண்ணப்ப என்கிட்ட மாட்டினான். அந்த Factory Engineer கூட பேச்சு கொடுத்தேன். பயபுள பாவம்! விநாயக சதுர்த்திக்கு சென்னைக்கு போக பிளான் பண்ணி இருந்தவனை புடிச்சி ஐதராபாத் அனுப்பிடாங்களாம்.

அவன், நான், எங்க டெமேஜர் மூணு பேரும் போய் கஸ்டமரை பார்த்துட்டு வந்தாச்சு. டெமெஜர் செலவுல Lunch க்கு Buffet போயும் கும்மியாச்சு.  டேமெஜர் இப்ப கேக்குறார், “என்ன அருண், விநாயக சதுர்த்திக்கு ஊருக்கு போகலையா”னு. (ங்கெய்யால, பிளானை டெமேஜ் பண்ணிட்டு 3 மணிக்கு கேக்குற கேள்வியபாரு?) நான் பதிலுக்கு, “அதான் சார் யோசிக்கறேன் போகலாமா, வேணாமானு? நீங்க பண்டிகைக்கு போகலையா சார்?” என நானும் ஒரு பிட்டு போட. அதுக்கு அவர், “எனக்கு நைட் 8 மணிக்கு பிளைட் தம்பி, போய்டுவேன். நீ வேணா இன்னைக்கு போய்ட்டு திங்கள் காலைல ஆபிஸ் வந்துடு போதும்”. (ஞாயிற்றுகிழமை லீவு எடுத்துக்கனு சொல்லாம செல்லுறார்)

(கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கடுப்பு ஏத்துறார், விடாத அருண்! பதிலுக்கு கடுப்பேத்து) “கண்டிப்பா போக போறேன் சார், நேரா ஆபிஸ் போய் டிக்கட் புக் பண்ண வேண்டியதுதான். NGPAY ல டிரெயின் டிக்கெட் chart prepared னு காண்பிக்குது. பஸ் டிக்கெட் புக் பண்ணி கிளம்பிடறேன் சார்”.

அடுத்து ஆபிஸ் போய், டிக்கெட் செக் செய்தப்பதான் பிரச்சனை தெரிஞ்சது. முக்கிய பேருந்துகள் எல்லாம் பண்டிகையால் full. சில சிறு சிறு டிராவல்ஸ் செக் செய்தால் அனைத்திலும் கடைசி சீட் தான் இருந்தது. (பேருந்துகளில் எப்பொழுதும் கடைசி 2 வரிசை மற்றும் வலது புறமும் இருக்கும் சீட்டுகள் அதிக ரிஸ்க் சீட்டுகள். விபத்துகளில் அதிகம் அடிபடுவது இந்த சீட்டுகள்தான்)

பாவம் அந்த Factory Engineer, அப்ப  ஊருக்கு போக முடியாதானு புலம்ப ஆரம்பிச்சுட்டான். ரயிலில் ஒபன் டிக்கெட் எடுத்து டிடிஆர்யிடம் கேட்டு பெர்த் வாங்குவதும் அன்றைய நாளில் கடினம். அப்பதான் என் பிரெண்டு ஒருமுறை USL TRAVELSனு ஒன்று நல்லா இருந்ததா சொன்னது ஞாபகம் வந்தது. அந்த டிராவல்ஸ் Website ல செக் பண்ணா அதுலயும் full காட்டுச்சி ஆனா, ஒரு போன் நம்பர் கொடுத்து அதுல தொடர்பு கொண்டால் சீட் கிடைக்க முயற்சி செய்வோம்னு போட்டு இருந்தது. (கடைசி நேரத்துல கேன்சல் ஆகுறது, Block பண்ணி வெச்சு இருப்பதை தருவாங்க போல)


போன் செய்தேன், 
எதிர் முனையில் “ எத்தனை டிக்கெட் சார் வேணும்”, 
நான் “இரண்டு”. 
எதிர் முனையில் “சரி சார் இருக்குது, கன்பார்ம் பண்ணிக்கவா. சீட்டு நம்பர் L9, L10 ஓகே வா. மொபல் நம்பர் தாங்க சார்” 
நான், “செய்துகோங்க. மொபல் நம்பர் 91771 57007. சரி, எவ்வளவு ரேட்”
எதிர் முனை “அதே 800 ரூ தான் சார்”
நான் “ஓகே, எப்ப, எங்க வந்து டிக்கெட் வாங்கிகனும்”
எதிர்முனை “7.30 மணிக்கு Lakdi ka Pool (ஹைதராபாதின் ஒரு முக்கிய ஏரியா) வந்துடுங்க pick up van வந்துடும், பஸ்ல உட்கார்ந்த பிறகு காசு கொடுத்தா போதும்”
நான் “மிஸ் ஆகாதே! கடைசில சீட் இல்லைனு சொல்ல கூடாது”
எதிர் முனை “உங்க மொபைல் பாருங்க சார். வெச்சிடறேன்”. டொக்....

மொபலை பார்த்தால் ஒரு SMS From USL BUS. "YOUR TICKET HAS BEEN CONFIRMED. SEAT NO IS L9, L10. PICK UP TIME 7.30 PM @ LAKDI-KA-POOL" என வந்திருந்தது. எதிர் பார்க்காத ஆச்சர்யம். ஒரு போன் காலை மதித்து கன்பார்ம் செய்து இருந்தார்கள். 

மாலை சரியாக 7.30 மணிக்கு pick up செய்து பஸ்க்கு சென்றோம். அங்கு ஒரு ஆச்சரியம், ஒவ்வொரு சீட்டுக்கும் சிறிய தலையனை கழுத்தில் வைக்கவும், நன்றாக துவைத்த போர்வையும் இருந்தது. சீட்டின் அளவும் மற்ற பேருந்துகள் போல இல்லாமல் சற்று அகலம். அந்த வண்டி Helper வந்து எங்க பெயர் சொல்லி பணம் வாங்கி கொண்டு சரியான ரசீதையும் தந்து விட்டு சென்றார். 

பேருந்தின் Interiorஉம் அழகாக கண் கூசாத வண்ண விளக்குகளால் செய்திருந்தனர். மேலும், மற்ற பேருந்துகள் போல அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை கொடுத்து வாய்க்கும் வயிற்றுக்கும் பற்றாமல் போவது போல செய்யாமல் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை தந்தனர். (நான் பல தனியார் பேருந்துகளில் பயணம் செய்து உள்ளேன், சில பேருந்துகள் கேவலமாகவும் போர்வை ஒரு வித வாசத்துடனும் இருக்கும்.... பலருக்கு இந்த அனுபவம் வாய்த்து இருக்கலாம்)


பயணிகளை கேட்டு, எப்பொழுதும் போடும் மொக்கை தெலுங்கு படத்தை போடாமல், தலைவர் நடித்த சிவாஜியை போட்டனர். சந்தோஷமாக 25 வது தடவை அந்த படத்தை பார்த்தேன் (தலைவர் படம்னா சும்மாவா) வழியில் நல்ல சுகாதாரமான ஓட்டலிலும் நிறுத்தினர்.

சரியாக காலை 7 மணிக்கு சென்னையை அடைந்தது பேருந்து. சுமார் 800 கிமீ தொலைவை 10 மணி நேரத்தில் வந்து அடைந்தோம். அதில் இருந்து சென்னை-ஐதராபாத் பேருந்தில் செல்ல நேர்ந்தால் USL BUS தான் என் முதல் சாய்ஸ். இவ்வளவு சின்ன சின்ன விஷயங்களால் செய்து கூட பயணிகளை திருப்திபடுத்தி ஆதரவை பெற முடியும் என்பதை கண்கூடாக கண்டேன்.

அப்பாடி, ஒரு வழியாக விநாயக சதுர்த்திக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. சரி நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலைய பார்க்க ஆரம்பிக்கறேன். நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க சாயந்திரம் மறுபடியும் ஹைதராபாத் கிளம்பனும்.

டிஸ்கி: இது நடந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிறது. ஆனால், இந்த கட்டுரை எழுத அந்த பேருந்தின் Website ஐ தேடும்போது அது Delete செய்யப்பட்டு உள்ளது. அந்த டிராவல்ஸ் தற்போதும் கண்டிப்பாய் இயங்கி கொண்டுதான் இருக்கும் என நம்புகிறேன். இந்த டிராவல்ஸின் தற்போதைய நிலையைபற்றி யாருக்காவது தெரிந்தால் தெரியபடுத்துங்கள்.

அடுத்த பயணம் சிறிது நாள் கழித்து செல்வோம்....

Thursday, September 23, 2010

ஐதராபாத் to சென்னை...

ஏற்கனவே விஜயவாடா டூ வைசாக் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம். ஆந்திராவில் செய்த சில மறக்கமுடியாத பயணங்களின் தொடர்ச்சியில், இப்போழுது அடுத்த பயணம் போகலாமா.....

இந்த முறை ஹைதராபாத் டூ சென்னை பயணம்.

2009, சில பல நிதி நெருக்கடியாலும், குழந்தைக்கு 6 மாதமே ஆனதாலும் நான் ஐதராபாத்திலும், என் மனைவி சென்னையிலும் வேலை செய்யவேண்டிய சூழ்நிலை. குழந்தையை பார்த்துக் கொள்ள என் மாமியார், என் மனைவியுடன் சென்னையில் இருந்தார்

அந்த ஞாயிற்றுகிழமை விநாயக சதுர்த்தி, வழக்கம் போல வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்னை போக சென்னை எக்ஸ்பிரஸிலும் ஞாயிறு மாலை ஐதராபாத் திரும்ப சார்மினார் எக்ஸ்பிரஸிலும் டிக்கெட் புக் செய்தாகி விட்டது. வெள்ளிக்கிழமை காலை வரை நல்லாதான் போச்சு, வழக்கம் போல டிரஸ் எல்லாம் pack பண்ணிட்டு ஆபிஸ் வந்தாச்சு.


ஆபிஸ் வந்தா வில்லன் உட்கார்ந்து இருக்கார். என் சேல்ஸ் மேனஜர் ரூபத்துல. பெங்களூர்ல இருந்து இதுக்குனே வந்து இருக்கார் போல, “அருண், நாளைக்கு Factory Engineer இங்க வரார் நாம 3 பேரும் கஸ்டமரை பார்க்க போறோம். பிளான் பண்ணிக்க!”. (ஆப்பு) என்னத்த பிளான் பண்ண, போட்ட பிளானைத்தான் கான்சல் செய்யனும் என முடிவு செய்து என் பிளானை டேமேஜ்   செய்த டேமெஜருக்கு ஓகே சொன்னேன். (வேற வழி)

எனக்கு என் வேலை மேல எப்பவுமே அப்படி ஒரு நம்பிக்கை, இப்படி ஏதாவது எப்பவும் சொதப்பும்னு தெரியும், அதனால எப்பவுமே டிக்கெட்டை வெயிட்டிங் லிஸ்ட் 12 லிருந்து 15 க்குள்ள தான் புக் பண்ணுவேன். அப்பதான், கடைசி 3 மணி நேரம் வரை கன்பார்ம் ஆகாது + பிளான் ஓகே ஆகினால் பெர்த் கண்டிப்பாய் கன்பார்ம் ஆகும். (அட, என்ன ஒரு சிந்தனை) இதுலாம் ரயில்வே டிக்கெட் புக்கிங் சீக்ரெட், நம்ம பிளான் சொதப்பினாலும் பர்ஸ் டேமேஜ் ஆகாம பாத்துக்கலாம்.

டிரெயின் 5 மணிக்கு, 2 மணிக்கு சார்ட் Prepare பண்ணிடுவாங்க. அப்புறம் கேன்சல் பண்ண முடியாது. இப்போ (காலை 9 மணி) கான்செல் பண்ணா வெயிட்டிங் லிஸ்ட் சார்ஜ் போக 50 ரூபாய்க்குள்ள தான் பிடிச்சிட்டு மிச்சம் ரிட்டர்ன் வந்துடும். சேல்ஸ் மேனேஜர் பிளானை மாத்துற மாதிரி தெரியல, சரின்னு அன்னைக்கு டிக்கெட்டை கேன்சல் செய்தாச்சு.

ஆனா, ரிட்டன் டிக்கெட் கேன்சல் செய்யல. பண்டிகைக்கு எப்படியாவது போகனும்னு ஒரு பக்கம் ஆசை, ஒருநாளுக்காக போகனுமானு ஒரு குழப்பம்.

போகனும்னு ஆசைபட காரணம்,

  1. என் குழந்தை பிறந்து அதுதான் அவளுக்கு முதல் பண்டிகை. அதை மிஸ் பண்ண விரும்பல.
  2. அந்த ரிட்டர்ன் டிக்கெட் அதிசயமா RAC ல புக் பண்ணேன். கன்பார்ம் ஆகிடுச்சு கேன்சல் பண்ணா Penalty அதிகம்
  3. தீபாவளிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை விநாயக சதூர்த்தி (சுண்டல், கொழுக்கட்டை எல்லாம் சாப்பிடலாமே - அதை சொல்லு!
  4. முதல் கடவுள் விநாயகர் மேல ஒரு தனி பிரியம். அதை பற்றி ஒரு தனி பதிவே போட்டு இருக்கறேன்.
இந்த குழப்பத்திற்கு நடுவில் மறுநாள் கிளம்பும் போது ஒரு புது பிரச்சனை ஆரம்பமானது.

என்ன பிரச்சனை? சென்னை போனேனா? இல்லையா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...

Tuesday, September 14, 2010

ஒரிஜினல் “பல்பு”

முன்பே ஒரு பதிவில் என் ஒரு வயது மகள் ஷம்ஹித்தா செய்த குறும்புகளை பற்றி சொல்லி இருந்தேன். அடுத்த குறும்பு இதோ!

அவளுடைய பிறந்தநாளுக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிள் வாங்கி வந்து இருந்தேன். அதை வைத்து நன்றாக விளையாடுவாள். அதில் ஏறி அமர்வது, தள்ளி கொண்டு சென்று சுவற்றில் இடிப்பது, அதன் பெட்டியில் விளையாட்டு பொருட்களை போட்டு மூடுவது, அதை கவிழ்த்து போட்டு உருட்டுவது, இப்படி பல சேட்டைகளை செய்து கொண்டிருந்தாள்.


ஒரு நாள் மாலை, வழக்கம் போல சைக்கிள் வைத்து விளையாடி கொண்டு இருந்தாள். நான் அப்பொழுது தான் கவனித்தேன் சைக்கிளில் உள்ள ஒரு இண்டிகேட்டர் லைட் காணாமல் போயிருந்ததை. என் மனைவியிடன்,  “சைக்கிள் வாங்கி வந்து 10 நாள் கூட ஆகலை, அதுக்குள்ள லைட்டை உடைச்சாச்சா?” என கேட்க, அதற்கு அவங்க “என்னை ஏன் கேக்கறீங்க உங்க பொண்னை கேளுங்க”. (எப்ப நாம கேக்குறதுக்கு பதில் சொல்லி இருக்காங்க!)

இவங்க மேல் இருந்த கோபத்துடன் என் மகளிடம், “ ஷமி,  எங்க லைட்டு” என்றதுதான் தாமதம். விளையாடி கொண்டு இருந்தவள் பொம்மையை தூக்கி போட்டு விட்டு கையை தூக்கி “அதோ” இ இ இ இ என சிரித்து கொண்டே சுவற்றில் இருந்த டியூப் லைட்டை காட்டினாள்.

ஒரு நிமிடம் நான் திணற, என் மனைவி விழுந்து விழுந்து சிரிக்க, என் மகள் ஏன் அப்பா முழிக்கிறாரு? ஏன் அம்மா சிரிக்கிறாங்க??  நான் என்ன சொன்னேன்??? என்பது போல ஒரு லுக்கு விட்டாள்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், என் மகள் கையால பல்பு.

சரி விடுடா அருண், உன் வாரிசுனு நிருபிச்சுட்டா.


Monday, August 16, 2010

Pretty boy - நான் தானுங்க....

நாங்க காதலிக்க தொடங்கி ஒரு மாதம் இருக்கும். திடீருனு அவங்க கிட்ட இருந்து போன் “நான் ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் பாத்துட்டு போன் பண்ணுங்க” னு சொல்லிட்டு வெச்சிட்டாங்க. என்னடா இது என்னவா இருக்கும்னு, ஒரே யோசனை.

அன்னிக்கு வேக வேகமா ஆபிஸ் வேலைய முடிச்சிட்டு, சாயந்திரம் ஒரு பிரௌசிங் செண்டர் போய் பாத்தேன். அவங்க மெயில்ல ஒரு விடியோ அனுப்பி இருந்தாங்க. ஓப்பன் பண்ணிப்பாத்தா கிழே சப் டைடில்ஸோட ஒரு அனிமேட்டட் விடியோ ஓடுச்சு. நானும் அவங்களுக்கு போன் பண்ணி, “நல்லா இருந்துச்சு”னு சொல்லிட்டு வெச்சிட்டேன்.

ரெண்டு நாள் கழிச்சி அவங்களை நேரில் பாத்தப்ப அந்த விடியோ பற்றி பேச்சு வந்துச்சு. நான் பெருமையா “அந்த விடியோ சூப்பர், Lines-ம் நல்லா இருந்துச்சு”னு ஒரு பிட்டு போட. உடனே, அவங்க ”மியூசிக்கும் நல்லா இருந்துச்சில்ல”ன்னாங்க. நான் ரொம்ப கூல்லா “மியூசிக்கா? நான் அதில் படம் மட்டும்தானே பாத்தேன், மியூசிக் கேட்கலையே. பிரெளசிங் செண்டர்ல எந்த கம்யூட்டருக்கும் Head Phone கிடையாதே!” அப்படினு சொன்னதுதான் தாமதம், “டொம்”னு ஒரு சத்தம், வேற என்ன? அவங்க குட்டினதுதான். (Tom & Jerry ல மண்டைல அடிச்சி பூனை தலைல பெருசா ஒரு வீக்கம் வருமே! அதை நினைச்சுக்குங்க)

அன்னிக்கு வாங்க ஆரம்பிச்சது, ஒரு தொடர்கதையா ஓடிட்டு இருக்குது. நான் சொதப்புறதும், அவங்க அடிக்கிறதும் தான்..... அவ்வ்வ்வ்வ்வ்....

இதை தெரிஞ்ச எங்க ரெண்டு பேரின் நண்பன் ஒருத்தன் என்னை எங்க பார்த்தாலும் “Preety boy, Pretty boy” ஒரு உரைநடை படிக்கிறமாதிரி தான் இப்பவும் கூப்பிடுறான்.



மறக்கமுடியாத அந்த விடியோவை இணைத்து இருக்கேன், பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். ஆனா தயவு செய்து ஆடியோ கேட்டபடி பாருங்க.


Friday, August 13, 2010

NGPAYயும் இந்திய ரயில்வேயும் - 2

சென்ற பதிவில் விஜயவாடாவிலிருந்து விசாகப்பட்டனம் போக வேண்டியவன், ஓங்கோலில் மாட்டி கொண்டதை சொல்லி இருந்தேன்.


முதல் பகுதிக்கு இங்கு சென்று பார்க்கவும்...

இரவு ரயில் டிக்கெட்டை கான்சல் செய்துவிட்டு காலை 6 மணி ரயிலில் புக் செய்தாகிவிட்டது. ஆனால், டிக்கெட் பிரிண்ட் எடுக்க வழியில்லை. கையில் (பாக்கெட்டில்?) இருக்கும் ஒரே புரூப் மொபைலில் PNR number உடன் வந்த Ticket Confirmation SMS, NGPAY அனுப்பியது.

தொடர்ந்து ரயிலில் பயணம் செய்வதால் ரயில்வேயின் சில விதிமுறைகள் தெரியும், அதில் ஒன்று, E Ticket  எனப்படும் இன்டர்நெட்டில் புக் செய்த டிக்கெட் தொலைந்தாலோ, TTR இடம் காண்பிக்க தவறினாலோ, PNR number ஐயும் உங்கள் போட்டோ ID Proof ஐயும் காண்பித்து, 50 ரூபாய் அபராதம் செலுத்தினால் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்யலாம்.

பலருக்கு இந்த விதிமுறையை பற்றி தெரியபடுத்தவே இந்த பதிவு. இந்த விதி சில TTRகளுக்கே தெரியாது. அன்று வந்த TTR உம் அப்படிபட்ட ஆள்தான். ஒரு வழியாக, காலை ரயில் ஏறியாகியாச்சு. TTR டிக்கெட் செக் செய்ய வந்தார். நான் என் நிலையை விளக்கினேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு நான் என்னிடம் இருந்த முன்னிரவு பயணம் செய்ய வேண்டிய டிக்கெட்டில் இருந்த அந்த ரூல்ஸை காண்பித்தேன். ஆம், எல்லா E Ticket லும் இந்த விதிமுறையை  பிரிண்ட் செய்து இருப்பர். பிறகு அவர் ஒத்துக்கொண்டார்.

உதாரணத்திற்காக, வேறொரு டிக்கெட் ஐ படமாக இணைத்துள்ளேன்.


(படத்தை கிளிக் செய்து பெரியதாக்கி பார்க்கவும்)

அந்த ரயிலில் இருந்த மற்றும் ஒரு சுவாரசியமான விஷயம், GPS System. ஒவ்வொரு பெட்டியிலும் இரு பக்கமும் கதவிற்கு அருகில் ஒரு DISPLAY இருக்கும். அதில் தற்போதய நேரம், அடுத்து வரும் நிலையம், அதற்கு உள்ள தொலைவு ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் ஓடிக்கொண்டிருக்கும். இது என்னை போல கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு தெலுசுன பிள்ளகாலுக்கு (தெலுங்கு தெரிந்த பசங்களுக்கு - தெலுங்கில்) உபயோகமான விஷயம். தமிழ்நாட்டில் இது போல வசதி உண்டா? இல்லையா? என தெரியாது. இருந்தாலும் சில கட்சிகள் அதில் வரும் ஆங்கில எழுத்தில் "தார்" பூசினாலும் பூசுவார்கள்.


எனக்கும் ரயிலுக்கும் இடையேயான நேசமும், ஆந்திராவில் நான் செய்த சுவாரசியமான பயணமும் பல இருக்கிறது. முடிந்தவரை பதிவு செய்கிறேன். உடன் பயணம் செய்ய நீங்கள் தயாரா?

பயணங்கள் முடிவதில்லை ......