Cricket Countdown....

Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

Tuesday, August 2, 2011

பன்னிக்குட்டி ராம்சாமியை காப்பாத்துங்க....

டிஸ்கி: இந்த பதிவில் வரும் அனைத்து கற்பனைகளும் எழுதியவரையே சாரும்.... சத்தியமா எனக்கு இவ்வளோ காமெடி வராதுங்க. அட பதிவு எழுதவே வராதுங்க. எங்கேயோ எப்பவோ கேட்டதை வச்சிகொஞ்சம் உல்ட்டா பண்ணி எழுதின பதிவு இது.


நம்ம பன்னிகுட்டி ராம்சாமி அவரோட பன்னீஸ் டிவிக்காக ஒரு வீ ஜே வை தேடிட்டு இருக்காரு. அவருக்காக நம்ம செல்வா, அவரை மாதிரியே ஒல்லியா இருக்கற ஒரு ஆளை இன்ட்ரவியூக்கு கூட்டி வராரு. இருங்க என்ன நடக்குதுனு பார்ப்போம்....



செல்வா:                             அண்ணே, அண்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி:   வாடா கோபுரதலையா, என்ன இந்த பக்கம்

செல்வா:                             அண்ணே நீங்க ஒரு பெரிய டிவி கம்பனி ஓனர் இல்லையா?

ப.ரா:                                    ஆமா, அதுகென்ன இப்போ

செல்வா:                             உங்க டீவி ஒரு வீ ஜே வேணும்னு சொன்னீங்க இல்லையா

ப.ரா:                                    ஆமா, ஏன் நீயே வரேன்னு சொல்லுறீய்யா.

செல்வா:                            அட இல்லைண்ணே, (உங்க கம்பனில எவன் வேலை செய்வான்) ஒரு
                                            தம்பிய கூட்டி வந்து இருக்கேன்.ஆனா தம்பிக்கு ஒரு சின்ன பிரச்சனை

ப.ரா:                                    என்ன? பேச வராதா?

செல்வா:                            அது நல்லாவே வரும் ஆனா ஒரு எழுத்துதான் வராது “வ”னாக்கு பதில்
                                           “த”னா தான் வரும்

ப.ரா:                                   தமிழ்ல இருக்கற 247 எழுத்துல ஒரு எழுத்துவறலைனா என்ன? வர
                                           சொல்லு நான் சமாளிச்சிக்கறேன்

செல்வா:                           தம்பி வாப்பா....

தம்பி:                                சார் தணக்கம் சார்

ப.ரா:                                  யார்றா இந்த பன்னிய உள்ள விட்டது

செல்வா:                          அண்ணே, இவர் தான்னே நான் சொன்ன அந்த தம்பி

தம்பி:                                சார் தணக்கம் சார்

செல்வா:                          வணக்கம்னு சொல்றான்னே

ப.ரா:                                 ஓ, வணக்கம்பா, உன் பேரு என்ன?

தம்பி:                               தடிதேலு சார்

ப.ரா:                                 என்னது தடிதேலா, உனக்கு ஊரல வேற பேரே கிடைக்கலையா? இப்படி
                                          ஒரு பேரை நான் இதுவரைக்கும் கேட்டதே இல்லையே ராசா

செல்வா:                         வடிவேலுன்னே

ப.ரா:                                 ஓ, வடிவேலா. சரி, தம்பி குரலை டெஸ்ட் பண்ணுவோம்.
                                          தம்பி ஏதாவது பேசு பார்ப்போம்

தம்பி:                               சார், நான் சிதாஜி மாதிரி நல்லா தசனம் பேசுதேன் சார்

ப.ரா:                                 என்னது சிதாஜி மாதிரி தசனமா?

செல்வா:                         சிவாஜி மாதிரி வசனம் பேசுவேன்னு சொல்றான்னே... டேய், பேசி
                                         காட்டுறா

தம்பி:        தரி, தட்டி, திரை , கிஸ்தி.
                   யாரை கேட்கிறாய் தட்டி.
                   தானம் பொழிகிறது ,பூமி திளைகிறது,
                   உனக்கேன் கொடுக்க தேண்டும் கிஸ்தி.

ப.ரா:          அய்யோ, அய்யோ, அய்யோ... தரி, தட்டியா....நிறுத்துடா நிறுத்துடா
செல்வா:   டேய் வேற பேசுடா
தம்பி:        அண்ணே ஒரு பாட்டு பாடதா
ப.ரா:          பாது...சே...பாடு
தம்பி:        தாடியம்மா, தாடி. தண்டாட்டம் தாடி....

ப.ரா:          டேஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....செல்வா...நிறுத்த சொல்லுடா.... முடியல....

செல்வா:   அவன் வாடியம்மா வாடி, வண்டாட்டம் வாடின்ற பாட்டை பாடுறான்னே....
                    டேய் வேற பாடு

தம்பி:         சரிண்ணே.... தாங்கய்யா, தாதியாரைய்யா, தரதேற்க்க தந்தோம் அய்யா...

ப.ரா:           அய்யோ சாமி யாராவது காப்பதுங்களேன்...
                    டேய் செல்வா முதல்ல இவனை கூட்டிட்டு வெளில போடா

செல்வா:    சரிண்ணே, டேய் தம்பி அண்ணனுக்கு மூட் சரியில்லை அப்புறம் வரலாம்.
                   அண்ணன்கிட்ட சொல்லிட்டு கிளம்பு

தம்பி:        சரிண்ணே அப்போ போயிட்டு தரேன்னே.....

ப.ரா:          போயிட்டு தர்றிய்யா..... அய்யோ.... யாராவது என்னை காப்பாத்துங்களேன்.......

செல்வா:   அண்ணே நாளைக்கு வேற ஒருத்தனை கூட்டிட்டு வரேன்னே....அவன் இவனை மாதிரி
                   இல்லைனே நல்லா பேசுவான்...என்ன “ச”னா வராது அதுக்கு பதில் “ரா”னா தான் வரும்.

ப.ரா:             இன்னொருத்தனா.................

Breaking News: பன்னீஸ் டீவியின் அவசர செய்தி. எங்கள் தொலைக்காட்சியின் ஓனர், முதலாளி பன்னிகுட்டி ராம்சாமியை காணவில்லை. சென்னை கீழ்பாக்கம் பக்கமோ, ஏர்வாடி பக்கமோ தென்பட்டால் தகவல் தெரிவிக்கவும்.....

டிவி பன்னி.... எங்க போனே நீ....








Wednesday, July 6, 2011

Tamil பாட்டுங்கோ....

பிப்ரவரி மாசம் நான் இந்தியால சுற்றுபயணம் செஞ்சிட்டு இருந்தப்போ, (வெளிநாட்டுத் தலைவருங்க இந்தியா வந்து போறதுக்கு பேரு சுற்றுபயணம்னு தானேப்பா சொல்லுவாங்க) சென்னைல இருந்து எங்க ஊருக்கு நம்ம அரசு பேருந்துல போனேன். நம்ம ஊரு வண்டி என்னை ஏமாத்தலை, வழக்கம் போல எல்லாமே ஓட்ட உடைச்சலாதான் இருந்துச்சு. இதுல வீடியோ போடறேன் பேர் விழினு பழைய சிவாஜி பாட்டுகளை போட்டானுங்க. என்ன பிரச்சனையோ தெரியல ஆடியோ மட்டும் விட்டு விட்டு வந்துச்சு, ஆனா படம் தெளிவா போச்சு ஆங்கில சப் டைட்டில்லோட. 


அநியாயத்துக்கும் தமிழை அப்படியே டிரான்ஸ்லேட் (அவ்வ்வ்வ்.... நானும் ஆங்கிலத்தை அப்படியே மொழி பெயர்கறேன்னா?) பண்ணி வெச்சி இருக்காங்க..... சில பாடல்களின் முதல் வரி இதோ..... என்ன பாட்டுனு கண்டுபிடிங்க பார்க்கலாம்...


1) What i told? why you feel giddy?


2) Good man, I am a goodman for Myself

3) I am neither a poet nor I am a great fan

4) Is it somebody that i've seen young in a frock

5) What ever I want to say, You must say

6) Let the One let us, go

7) She has just flown away, she has forgetten me completely

8) can all the stones turn into diamonds

டிஸ்கி: இதை விட கொடுமையா நான் ஒரு பாட்டை டிரான்ஸ்லேட் பண்ணி இருக்கேன் இங்க போய் பாருங்க.



Friday, April 1, 2011

ஸ்பெஷல் மீள் பதிவு


டிஸ்கி 1: இது ஒரு ஸ்பெஷல் மீள்பதிவு.
டிஸ்கி 2 :
இந்த பதிவுக்கும், இதற்கு முன் நான் எழுதிய பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

1. கீழே உள்ள 3டி படத்தை கவனமாக பாருங்கள்.

2. அதில் உள்ள நீல நிறமலரை கண் இமை மூடாமல், 30 நொடிகள் பார்க்கவும்.


3. அந்த படத்தில் ஒளிந்துள்ள மனிதனை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?

4. இல்லையா, Ctrl + A அழுத்தி பாருங்கள். (தைரியமா அழுத்துங்க, தொப்பி வாங்க மாட்டீங்க. இது கொஞ்சம் வேற மாதிரி)

5. இன்னும் கண்டுபிடிக்க முடியலையா?

6. சரி, Refresh செய்துட்டு விடையை பின்னுட்டத்தில ( Comment Section) பாருங்கள்.



Wednesday, March 9, 2011

பதிவர் சந்திப்பும் கோல்மாலும்

அப்பாடி ஒரு வழியா ஊரை எல்லாம் சுத்தி முடிச்சிட்டு திரும்ப மொரீசியஸ் வந்து சேர்ந்தாச்சு. சரி ரொம்ப நாளா பதிவுலகம் பக்கமே வரலையேனு ஒவ்வொரு பிளாக்கா போய் பார்த்தா...... நம்ம சிரிப்பு போலீஸை சென்னைல சந்திச்சப்போ என்னமோ அவர் தான் சாப்பாட்டுக்கு பில் பே பண்ணதா பதிவுலாம் போட்டு இருக்காரு.

இந்த உலகம் இதையும் நம்பிடுச்சோனு ஒரு சந்தேகம்.... அதனால, அந்த பதிவர் சந்திப்பின் Behind the Scenes இதோ....

அவரோட இந்த பதிவுல சொன்னது 90% உண்மைதான். நான், பட்டிக்காட்டன் ஜெய், ஆயிரத்தில் ஒருவன் மணி, பனங்காட்டு நரி, தான் பிரபல பதிவருனு சொல்லிக்கற சிரிப்பு போலீஸ் ரமேஷ் - எல்லோரும் சந்திச்சி, எல்லோரையும் கலாய்ச்சி, போதாத குறைக்கு போன் பண்ணி கோகுலத்தில் சூரியன் வெங்கட்டையும் டெரர் பாண்டியனையும் கலாய்ச்ச பிறகு அந்த களைப்பு போக நல்லா சாப்பிட்டோம்.....


நானும் ஜெய்யும் ஏற்கனவே பேசி ரமேஷைதான் பில் கட்ட வைக்கறதுனு ஒரு பிளானே பண்ணி இருந்தோம். ஆனா அசருவாரா நம்ம போலீஸ், ஒத்த பைசா வெளில எடுக்கலையே.



என்னா பேசியும் பிரியோஜனம் இல்லைனு சொல்லி நம்ம ஜெய்யும் நானும் பிளான் B யை ஆரம்பிச்சோம். ரமேஷை நல்லா சாப்பிட சொன்னோம். ஓசி சோறச்சே விடுவாரா போலீஸ். செம கட்டு கட்டினாரு.


வெக்கற ஆப்பு தெரியாம இப்படி வேடிக்கை பார்க்குதே போலீசு

மெதுவா பேச்சு கொடுத்தோம் அவர்கிட்ட. ரமேஷ் நீங்க எந்த கிரெடிட் கார்டு உபயோகிக்கறீங்கனு கேட்டப்போ, உண்ட மயக்கத்துல இருந்த சிங்கம் (அதாங்க ரமேஷ்) தன்னோட கிரெடிட்கார்ட்டை கொடுத்துடுச்சு. உடனே ஜெய் அந்த கிரெடிட்கார்டு வெச்சி பே பண்ணிட்டாரு. எப்பூடி.....

இந்த டெக்னிக் வெச்சி இனி யாரும் ரமேஷை ஏமாற்றக்கூடாது. All Rights Reserved Only to Arun and Jey

டிஸ்கி 1: என்னை பார்க்க ஏர்போர்ட்டு வந்த ஆயிரத்தில் ஒருவன் மணிக்கும், என்னை வீட்டிற்கே வந்து பார்த்த காணாமல் போன கனவுகள் ராஜிக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.

டிஸ்கி 2: முக்கியமான விஷயம், அந்த ஓசி சோறுக்கு டிப்ஸ் (சுளையா 20 ரூபாய்)  நான் தான் கொடுத்தேன் யுவர் ஆனர்.


இந்த படத்தை பார்த்து ரமேஷ்தான், தானே விரும்பி பில் பே பண்ணாரு சொன்னா யாராவது இனியும் நம்புவீங்க?



Monday, January 31, 2011

எச்சரிக்கை - உங்களுக்குதான்...

அனைவருக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கை

இத்தனை நாட்களாக மொரீசியஸ்ல் மையம் கொண்டு இருந்த புயல் சற்றே தீவிரமாகி, வடமேற்கே நகர்ந்து, நாளை இந்திய நேரம் காலை 6.30 மணி அளவில் சென்னையை தாக்கப்போகிறது. இதனால் சென்னை மக்களுக்கு பெரிய அளவில் நன்மையே நடக்க இருக்கிறது. பிறகு அந்த புயல் கோவையில் கொஞ்ச நாளும், வந்தவாசியில் கொஞ்ச நாளும் அருள் மழை பொழிந்து அவ்வப்பொழுது சென்னையையும் தாக்கும் என அறிவிக்கப்பபடுகிறது. அந்த புயலுக்கு அருண்பிரசாத் என பல வருடங்களுக்கு முன்பே பெயரிடப்பட்டுவிட்டது.

@ ஆல்,

கூல் டவுன்...
கூல் டவுன்...
கூல் டவுன்...

ஊருக்கு வரேன்னு ஒரு இன்பர்மேஷன் குடுகறேங்க உங்களுக்கு. அதுக்கா இந்த வெறியோட அடிக்க வரீங்க! 


அட, நான் ஒன்னும் உங்க கிட்ட பெருசா எதிர் பார்க்கலைங்க, நான் வந்து இறங்கறப்போ ஒரு சிவப்பு கம்பளி வரவேற்பு, ஒரு பூரண கும்பம் மரியாதை, எனக்கு மாலைபோட ஒரு யானை, அப்புறம் பேண்டு வாத்தியம்..... இது போதும், இது மட்டும் போதும், என்னை வரவேற்க. இதை எல்லாம் நான் தான் ஏற்பாடு பண்ணுவேன்னு தம்பி சிரிப்பு போலீசு ஒரே அடம். நான் தான் பரவாயில்லப்பா மத்தவங்களுக்கு வாய்ப்பு தரணும், நீ அண்ணனுக்கு (அட என்ன சிரிப்பு நாந்தாங்க அண்ணண்) மத்தியம் ராயல்-லீ-மெரிடியன்ல லஞ்ச் அரேஞ்ச் பண்ணா போதும்னு சொன்ன பிறகுதான் அழுகாச்சிய நிறுத்திச்சி... என்னா பாசம் புள்ளைக்கு! (எத்தனை நாள் தான் ஓசி சோறு சாப்பிடுவாரு அவரு, வரோம்ல ஆப்பு வைக்க)

என்ன ஒரே பிரச்சனைனா..... நான் ஊருக்கு போயிட்டேன்னு தெரிஞ்சா மொரீசியஸ்ல, எனக்கு பயந்து அடங்கி இருக்கற எரிமலைங்க எல்லாம் ஆட்டம் போட ஆரம்பிக்கும், அதை சமாளிக்க மொரீசியஸ் மக்கள் இப்போவே என் காலடி மண்ணை கொண்டு போய் எரிமலைய சுத்தி போட ஆரம்பிச்சிட்டாங்க. அப்போதான் எரிமலைங்க பயந்து உள்ளவே இருக்குமாம். சே... இன்னுமா இந்த உலகம் என்னை நம்பிட்டு இருக்கு!  சாரி.....சாரி..... தப்பா டைப் பண்ணிட்டேன்.... (என்ன கெட்ட பழக்கம் அது, அடிச்சி வெச்சதை படிக்கறது...ராஸ்கல்ஸ்) சே.... எவ்வளவு மரியாதை நம்ம மேல!  ஒரு மாசத்துல திரும்பி வந்துடறேன்னு சொல்லிட்டேன். வந்தவுடனே பெரிய விழா எடுக்க போறாங்களாம். அதை தனி பதிவா மார்ச் 1, 2011 அன்னைக்கு சொல்லுறேன். (மகாசிவராத்திரி திருவிழாவை நமக்கான விழா தான்னு சொன்னா யாராவது வந்து பார்க்கவா போறாங்க...அருண், அப்படியே மெயிண்டெயின் பண்ணுடா)

சரி, அண்ணண் தரிசனம் வேண்டுறவங்க, அண்ணண் ஆட்டோகிராப் தேவைபடுறவங்க, அண்ணணுக்கு ஊர்காசு தர விருப்பபடுறவங்க (எத்தனை முறை சொல்லுறது அண்ணண்னு சொன்னா அது நான் தான், திரும்ப திரும்ப கேட்டுகிட்டு)  எல்லோரும் நாளைக்கு காலைல சென்னை பன்னாட்டு விமான முனையத்துக்கு வந்துடுங்க. முக்கியமான விஷயம் , டிராபிக் ஜாம் ஆக கூடாதுனு சொல்லி ரஜினிகாந்து, டாக்குடரு தம்பி, கலிஞ்சருனு யாரையும் வரவேணாம்னு சொல்லிட்டேன். பார்த்து சூதனாம நடந்துக்கோங்க இன்னொரு மகர ஜோதி டராஜடி சென்னைல வேணாம்.

இருங்க, இருங்க, ஒரு நிமிஷம் அங்க ஏதோ சத்தமா இருக்கு என்னானு பார்த்துட்டு வரேன்.

எலேய்ய்ய்ய்ய்ய்ய்...... யார்ரா அது என் பிளாக்கை இப்போவே ஏலம் போட ஆரம்பிச்சிட்டது? நடக்காது மகனே, நடக்காது. பிளாக்கை மூடி யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டேன், பதிவுகள் வழக்கம் போல வரும். 10 பதிவு டிராப்ட்ல போட்டு ஆட்டோமெடிக் பப்ளீஸ் செட் பண்ணியாச்சி. சிங்கம் தூங்கினாலும் பதிவு சும்மா ஜிவ்வுனு வரும் (மறுபடியும் பாரு, அட சிங்கமும் நான் தாங்க)

சரி, அடுத்த 3 வரிகளை யாரும் படிக்காதீங்க, அது டெரருக்கு மட்டும்தான் (நீங்க பதிவையே படிக்கலைனு தெரியும் இருந்தாலும் லைட்டா ஒரு பிலடப். லைட்டாதான்பா)

@ டெரர்
மச்சி, டாக்சி புக் பண்ணகூட சென்னைல எனக்கு ஆள் இல்ல. ஏதாவது ஏற்பாடு பண்ணமுடியுமானு பாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(அப்பாடி எழுதி அடிச்சிட்டேன், இப்போ யாராலும் படிக்க முடியாதே படிக்க முடியாதே....)

சரி எல்லோரும் கேட்டுக்கோங்க அண்ணன் ஊருக்கு போறேன், ஊருக்கு போறேன், ஊருக்கு போறேன்.... என்னது இது தப்பா? சரி ஊருக்கு வரேன்... ஊருக்கு வரேன்... ஊருக்கு வரேன்... யாருக்கு எது எது ஒத்துவருதோ அதை எடுத்துக்கோங்க.


BYEEEEEEEEEEEEEE.........

Wednesday, January 12, 2011

பதிவுலக பஞ்ச் டயலாக் (Courtesy: ரஜினிகாந்த்)

தலைவர் பாணியில் சில பதிவுலக பஞ்ச் டயலாக்ஸ்:




மத்த பிளாக்ல கமெண்ட் போடாத பதிவரும்
சொந்த பிளாக்ல மொக்கை போடாத பதிவரும்
பிரபலம் ஆனதா சரித்திரமே கிடையாது....

உங்களை பத்தி புனைவு
எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது
ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும்

கண்ணா, கும்மி கமெண்ட்டுதான் கூட்டமா வரும்
ஆனா, டெம்பிளேட் கமெண்ட் சிங்கிளாத்தான் வரும்

மொக்கை போஸ்ட்டுக்கு ஆண்டவன் நிறைய ஹிட்ஸ் கொடுப்பான்
ஆனா மறக்க வெச்சிடுவான்
நல்ல போஸ்ட்டுக்கு ஹிட்ஸ் கொடுக்கமாட்டான்
ஆனா மறக்க வெக்கமாட்டான்

எப்பவாச்சும் பதிவு போடுறது சிலர் பாலிசி
அடிக்கடி பதிவு போடுறது பலர் பாலிசி

---------------------------------------------------------------------------------------
கொஞ்சம் தத்துவங்கள்:

பதிவு எழுதி ஹிட்ஸ் வாங்கலாம்....
ஆனா, ஹிட்ஸ் காக பதிவு எழுத கூடாது

சில அனுபவம் பதிவுகளை தரும்....
சில பதிவுகளும் அனுபவத்தை தரும்

ஆபிஸ்ல வேலை செய்யாம பதிவை படிக்கலாம்
ஆனா பதிவு படிக்காம வேலை செய்யக் போகக்கூடாது

பதிவு படிகறவங்க எல்லோரும் ஓட்டு/கமெண்ட்டு போடமாட்டாங்க
சில சமயம் ஓட்டு/கமெண்ட்டு போடறவங்க பதிவை படிக்கமாட்டாங்க

10 பாஸிடிவ் ஓட்டு வாங்கினா பதிவு பிரபலம் ஆகிடாது
ஆனா, 10 நெகட்டிவ் ஓட்டு வாங்கினா கண்டிப்பா பிரபலம் ஆகிடும்

 ----------------------------------------------------------------------------
பிரபலபடங்களின் பஞ்ச்:


நீ முந்திட்டா நோக்கு, நான் முந்திட்டா நேக்கு

வியட்னாம் வீடு  - சிவாஜி
பதிவுலகம் -  வடை

நீங்க நல்லவரா? கெட்டவரா?
நாயகன் - கமல்
பதிவுலகம் - டெரர் பாண்டியன்


Monday, November 22, 2010

(பதிவு) உலக பொது மறை

பிறரைதொடர்பதிவுக்கு முற்பகல் கூப்பிடின் தமக்குதொடர்பதிவு
பிற்பகல் தானே வரும்

புனைவெழுதி திட்டு பிரபலமாவாரே ஆவர்
பதிவெழுதி பிரபலமாக தெரியாதவர்

மொக்கைபதிவு பிரபலம் ஆகிடுமே ஆகாதே
என்றும் நல்ல பதிவு

அனானியாய் கமெண்டுபவர ஒறுத்தல் அவர்நாண
திட்டி புதுபதிவு போட்டுவிடல்

ஓட்டு கமெண்டு கும்மி Follow இந்நான்கும்
பிரபல பதிவர்க்கு அழகு

கும்மி அடித்து 100 க்மெண்ட் வாங்கியபின்
சொல்க நான் “பிரபலபதிவர்”

குழப்ப பதிவு கிலர்க்கு எளிய அரியவாம்
படித்து புரிந்து கொளல்

புதுபதிவு போட சரக்கு இல்லாத் போது
சிலசமயம் மெயிலும் பதிவாகும்

மாத்தியோசித்து பதிவு போடுக அஃதிலார்
பதிவு போடாமை நன்று

கதைபெரிது கவிதைபெரிது என்னும் மக்கள் மொக்கை
எவ்வளவு கஷ்டமென தெரியாதவர்

டிஸ்கி: எந்த எந்த குறள் யார்யாருக்கு பொருந்தும் என்பதை ரசிகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்


Monday, November 15, 2010

பஸ்ல கிடைச்ச வரம்

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம் “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம
“குப்புமி”
“குப்புமி”
“குப்புமி”ன்னு சொன்னானாம் பாவம்

கடைசிவரை அவனுக்கு ”சாவே” வரலையாம்...

டிஸ்கி: இந்த கதை படிச்சுட்டு கதறிகதறி அழுதா நான் பொறுப்பில்லை. ஏன்னா இது எனக்கு பஸ்ல (Buzz) வந்துச்சு. அனைத்து உரிமைகளும் (அடிவாங்குவது உட்பட) இதை எழுதிய அந்த புண்ணியவானையே சேரும்.


அடுத்த முறை கார்ல வந்த கதைய சொல்லுறேன்.... 

Tuesday, October 26, 2010

சில்லுனு ஒரு பாராசூட் பயணம்...

என்னுடைய சுவாரசிய பயணங்களின் வரிசையில் இந்த முறை ஒரு வித்தியாசமான பயணம். இந்த முறை பேருந்திலோ இரயிலிலோ அல்ல. வித்தியாசமாக பாராசூட் பயணம் அதுவும் காமெடி + அபாயத்தில் முடிந்த பயணம். சரி, பயணத்திற்கு கிளம்புவோம்....

சென்னை நண்பர் ஒருவர் ஒரு வார பயணமாக மொரீசியஸ் வந்து இருந்தார். அவருடன் சேர்ந்து நாங்கள் ஒரு 6 பேர் குழுவாக ஊர் சுற்ற கிளம்பினோம். சரி வெகுநாள் ஆசையான பாராசூட் பயணத்தை அனுபவிக்கலாம் என்று  ஒரு உள்ளூர் நண்பரின் ரிசார்ட் ஒன்றிற்கு சென்றோம்.

அங்கு அவர் பாராசூட்டில் பறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தயாராக இருந்தார். அங்கு சென்ற பின் அவ்ர் எங்களை ஒரு SPEED BOAT - ல் கடல் நடுவில் அமைக்கப்பட்ட மிதக்கும் மேடைக்கு அழைத்து சென்றார். அந்த மேடை கடல் நடுவில் தண்ணீரில் இருந்ததால் போதையில் ஆடுவது போல ஆடியது. (மேடைதாங்க தண்ணீல இருந்துச்சு நாங்க தெளிவாத்தான் இருந்தோம்). பின் ஒவ்வொருவராக பேலன்ஸ் செய்து நின்று ஸ்பெஷல் COSTUME மாட்டிகொண்டோம்.

Special Costume ல் நாந்தாங்கோ....

பாராசூட்டில் இரண்டு இரண்டு பேராக பயணம் செய்வதாக முடிவானது. நானும் சென்னை நண்பரும் ஒன்றாக செல்ல முடிவெடுத்தோம். ஏனென்றால் அவர் கொஞ்சம் வெயிட்டான ஆள். நான் முன்பும் அவர் எனக்கு பின்னாலும் அமர, எங்கள் காஸ்டியூமில் இருந்த கொக்கியை பாராசூட்டில் இணைத்தனர். பாராசூட்டை ஒரு நீண்ட கயிற்றில் கட்டி அதன் மறுமுனையை SPEED BOAT-ல் கட்டினர்.

நல்லாதான் கிளம்புச்சி, வலது பக்கம் ஒரு கிமீட்டரும், இடது பாகம் ஒரு கிமீட்டரும் சென்று வந்தோம். இதில் ஒரு மேட்டர் என்னன்னா? மற்றவர்களை அழைத்து போன போது, கடல் நடுவில் BOAT-ஐ நிறுத்தி பாராசூட்டை தண்ணீரில் இறக்கினர் பாராசூட்டில் இருப்பவர் கால் கடல் தண்ணீரை தொட்டவுடன் BOAT -ஐ கிளப்பி, மீண்டும் பாராசூட் பறக்கவைப்பர். இதை எங்களுக்கு மட்டும் செய்யவில்லை. எனக்கு செம கடுப்பு.

Take Off - சாகசம் ஆரம்பம்

மேடைக்கு மேலே வந்தவுடன், பாராசூட் கயிறை இழுத்து இழுத்து விட வேண்டும். அப்பொழுது தான் பாராசூட் சரியாக மேடையில் இறங்கும். எங்களுக்கு இருந்த கடுப்பில் நாங்கள் கயிறை இழுக்கவில்லை. பேலன்ஸ் தவறியதால் மீண்டும் எங்களை ஒரு ரவுண்ட் கொண்டு சென்று மேடைக்கு மேல் நிறுத்தினர். இப்பொழுதும் எங்களை கடலில் இறக்காததால் மீண்டும் நான் கயிறை இழுக்கவில்லை. இப்படியே மூன்று முறை அவரும் எங்களை இறக்கவில்லை, நாங்களும் கயிறை இழுக்கவில்லை.

நாலாவது முறை BOAT ஓட்டியவன் கடுப்பாகி, எங்களை மேடைக்கு பின்னால் நேராக கடலில் இறக்கினான். கால்ல தான் தண்ணிய தொட இறக்குறானோனு நம்பி இறங்கினோம், ங்கொய்யால, அப்படியே கடல்தண்ணில போட்டுடான். இரண்டுபேரும் முழுசா நனைஞ்சாச்சு. சரி மேல தூக்குவான்னு பார்த்தா BOAT ஐ மேடைக்கு அந்த பக்கம் நிறுத்திட்டான்.

தண்ணீரில் Landing

கூட இருக்கற HELPERS கயிறை பிடிச்சி எங்களை இழுக்க ஆரம்பிச்சாங்க. நானும் ஜாலியா “அமைதியான நதியினிலே ஓடம்”ன்னு ஜாலியா பாட ஆரம்பிச்சேன். பாராசூட் எங்களை ஒருபக்கம் மேல இழுக்க, மறுபக்கம்  எங்களை HELPERS மேடைக்கு இழுக்க ஜாலியாதான் இருந்தது.

அப்போ பின்னாடி இருந்த நம்ம நண்பருக்கு திடீருனு ஒரு சந்தேகம், என்னை கேட்டார். “அருண், உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”. அடங்கொக்கமொக்கா, இப்போதான் ஞாபகத்துக்கு வருது அய்யய்யோ! எனக்கு நீச்சல் தெரியாதே “காப்பாதுங்க”னு என மேடையில் இருந்த என் பிரண்ட்ஸை பார்த்து கையகாட்டினா, அவங்க ஏதோ நான் ஏரோபிளேன்ல போக போற மாதிரி டாட்டா காட்டுறாங்க. என்ன வில்லத்தனம்? எனக்கு நீச்சல் தெரியாம மேல போகபோறேன்னு தெரிஞ்சிதான் டாட்டா காட்டுறாங்களோ! நான் கத்த ஆரம்பித்ததை பார்த்த என் நண்பர் என் தலையில் தட்டு, “ங்கொய்யால, அதான் தண்ணீர்ல மிதக்க Special Costume ல Life jacketஉம் போட்டு இருக்கியே என்ன பயம்?” ன்னு கேட்ட பிறகுதான், “ஆமாம்ல” என உயிர் வந்தது

அப்பாடி! ஒரு வழியா கரை ஏறியாச்சு

ஒரு வழியா எங்களை மேடைக்கு இழுத்து விட்டனர். மொத்தமா நனைஞ்சி  உறிச்ச கோழிமாதிரி ரெண்டு பேரும் வந்து நின்றோம். நல்ல வேளை பணம், கேமரா போன்றவற்றை மேடையிலேயே வைத்துவிட்டு போனதால் தப்பிச்சது. 
 
நனைந்த கோழி - நான் தான்

இதுல உச்ச கட்ட சோகம் என்னன்னா, ஆசையா சாப்பிட வாங்கிவெச்ச TIC TAC மிட்டாய் BOX ஐ பாக்கெட்ல வெச்சி இருந்தேன். அது மொத்தமா நனைஞ்சி போய் அந்த BOX முழுசும் வெறும் ஆரஞ்சு கலர் தண்ணீர்தான் இருந்துச்சு. வட போச்சே... சாரி, TICTAC போச்சேஏஏஏஏஏஏஏ.....


Friday, August 20, 2010

பதிவு போடுவது எப்படி?

முஸ்கி: இந்த பதிவில் வரும் அனைத்து யோசனைகளும் கற்பனையே, ஏதேனும் தொடர்பு இருப்பது போல இருந்தால் அது தற்செயலானது.... (இப்படி ஒரு வரி போட்டாலே விபரீதம் இருக்குனு அர்த்தம்)


பிரபல பதிவர்(?!?!) ஆகிட்டாலே இந்த பிரச்சினைதான் (ஆகுறோமோ இல்லையோ நாமலே போட்டுக்க வேண்டியதுதான். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு ஒளவையார்(?!?!) சும்மாவா சொன்னாங்க) . வாரத்திற்கு 3 பதிவு வரணும், நமக்கு கமெண்ட் போடுற எல்லோருடைய பதிவிலும் கமெண்ட் போடனும். நமக்கு போடுற கமெண்ட்க்கு பதில் கொடுக்கணும். ரொம்ப குஷ்டம்பா, சே... கஷ்டம்பா....

சரி, பதிவு போடலாம்னு பார்த்தா, வெரைட்டியா வேற கேக்குறாங்க. வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணுரோம். வந்தா தானே எழுத முடியும். இந்த மாதிரி சமயத்துலயும், பதிவு போட மேட்டர் கிடைக்காமல் திணறும் போதும் எப்படி பதிவு போடுறதுக்கான ரகசியத்தை சொல்லவா?

1. ஏதாவது பழைய மெயில் பார்த்து அதை அப்படியே உல்ட்டா பண்ணி போடுங்க.

2. இருக்கவே இருக்கு, புதுசா எதாவது படம் வந்திருக்கும் அதை விமர்சனம் பண்ணுறேன்னு படத்தை தவிர தியேட்டர்ல பார்த்த மத்த எல்லா விஷயத்தையும் போடுங்க.

3. புதுசா வந்த சாப்ட்வேர், ரூபாய் சிம்பிள், ஆக்டோபஸ் ஜோசியம்னு மொக்கை போடுங்க

4. இது என்னோட 27 வது பதிவு, 83 வது பதிவு, 111 வது Followerனு ஒரு பில்டப் குடுத்து பதிவு போடலாம்

5. இந்த ஊருக்கு போனேன், அந்த ஊருக்கு போனேன், எங்க ஊர் பூக்குழி , கீரி புள்ள, எருமைமாடு இப்படினு போடலாம்

6. மாத்தி யோசிக்கிறேன்னு ஒரு தொடர்பதிவு ஆரம்பிச்சி மத்தவங்களை மாட்டிவிடலாம்

7. பதிவு திலகம், நட்பு திலகம்னு அவார்டு கொடுக்கலாம்

8. பழைய குப்பைல, பரணை மேல இருந்து தேஞ்சி போன ஆடியோ கேசட் பொட்டி பார்த்து சினிமா புதிர் வைக்கலாம்

9. கவிதை எழுதுறேன் பேர்விழினு மத்தவங்களை டார்ச்சர் பண்ணலாம்

10. உங்களுக்கும் புரியாம, மத்தவங்களுக்கும் புரியாத மாதிரி கடவுள், ஜாதி, மதம், நாடு இப்படி பக்கம் பக்கமா எழுதி பதிவு போடலாம். அப்பதான் புரியும் ஆனா புரியாது

11. சமைக்கிறேன் பாருனு வீட்டுகாரை கொல்றது இல்லாம, படிக்கறவங்களையும் கொல்லலாம்

12. சும்மா இருக்குறது எப்படினு சும்மா ஒரு பதிவு போடலாம்

13. இந்த ஊருக்கு போன போது இப்படி இருந்துச்சு, அந்த ஊரு இப்படினு ஒரு பயண கட்டுரை எழுதலாம்

14. தமிழ் தப்பு தப்பா எழுதி பாதி புரிஞ்சி பாதி புரியாம ஒரு பதிவும், தொடர் பதிவே எழுத முடியாத அளவுக்கு காண்டாமிருகம் பேபி சோப்பு எப்படி வாங்கும்னும் ஒரு பதிவு போடலாம்

15. ஸ்கூல் படிக்கிறப்போ எப்படி டார்சர் கொடுத்தேன், இட்லி மாவு செய்யுறது எப்படி, பசங்க ஏன் இப்படி மாறாங்கனு யாருக்குமே தெரியாத விஷயத்தை பத்தி பதிவு போடலாம்

16. எதுவும், தேறலையா என்னை மாதிரி பதிவு போடுவது எப்படினு ஒரு பதிவு போடலாம்.

அடுத்து கமெண்ட் போடுறது எப்படினு விரிவாக நம்ம டெரர் பாண்டி எழுதுவார்.(ஏன்னா, அவர் தான் அதிகமா கமெண்ட் போடுறதா கூகுள் கம்பனில சொல்லி இருக்காங்க)

(@ Terror,

எலேய் மக்கா, பதிவுக்கு கிழே Post Comments, கருத்துரையிடுக என்ற இடத்தை கிளிக் செய்தா ஒரு பொட்டி வரும், அங்க போய் கமெண்ட் போடனும்னு மொக்கை போட்ட பிச்சி பூடுவேன் பிச்சி.

பதிலுக்கு நீங்க வேணும்னா நம்ம ஜெய், ரமெஷ் இவங்களை “ஓட்டு போடுறது எப்படி”னு பதிவு போட சொல்லி கூப்பிடுங்க. (இவங்க தான் அதிகமா ஓட்டு வாங்கறதா இண்ட்லி கம்பனில சொல்லி இருக்காங்க) வர்ட்டா)

டிஸ்கி: சக பதிவர் தேசாந்திரி, தன் பதிவில் இதேபோல ஒரு பதிவை போட்டிருப்பதாய் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு பதிவின் கருவும் ஒன்றேயானாலும், இருவரும் அவர் அவர் நடையில் எழுதி இருக்கிறோம்.


Sunday, August 8, 2010

பொங்கல்....


டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு, 2 வயதில் நான் செய்த குறும்பு இது. ஒரு சுவாரசியத்திற்காக, தற்பொழுது நடந்தது போல எழுதியுள்ளேன்.

அன்றில் இருந்து பொங்கலுக்கு
இன்னும் பத்தே நாட்கள்...  
யாருக்கும் இன்னும்  
புத்தாடைகள் எடுக்கவில்லை....  

இந்த ஞாயிற்றுகிழமையை விட்டால்  
அடுத்த வாரம் தி நகரில் கூட்டம் அலை மோதும்....  

சரி இன்றே போத்திஸ் 
அல்லது சரவணா ஸ்டோர்ஸ் 
சென்றுவிடலாம் என முடிவாயிற்று...  

யார் யாருக்கு...  
என்ன என்ன வேண்டும்... 
லிஸ்ட் போடுங்கள் என்றேன்...  

மனைவி - எனக்கு பேன்சி சாரி....  
அம்மா - எனக்கு பட்டு சாரி.... 
அப்பா - எனக்கு வேட்டி சட்டை... 
தங்கை - எனக்கு சல்வார் காமிஸ்... 
தம்பி - எனக்கு ஜீன்ஸ் டீ ஷர்ட்...  

விளையாடிகொண்டிருந்த 
என் இரண்டு வயது மகளிடம்...  
" குட்டிமா, பொங்கலுக்கு பாப்பாக்கு என்ன வேண்டும்?" என்றேன்...

 மழலை மாறாமல் சொன்னாள் 
"பொங்கலுக்கு எனக்கு... சட்னி வேணும்..."






Monday, August 2, 2010

இதனால அறிவிப்பது என்னனா...


டிஸ்கி 1 : இந்த பதிவில் பல Linkகளை கொடுத்து இருப்பதால், லிங்க் வழியே எஸ்கேப் ஆகி வெளியே சென்றுவிடாதீர்கள், மறக்காமல் திரும்பி வந்து ஓட்டு போடுங்க.



பதிவுலக அன்பர்களே! நண்பர்களே!! இதுனால சகலமானவர் அறிவிக்கறது என்னனா, நம்ம 'பெயர் சொல்ல விருப்பமில்லை' அவர்களை நான் ஏற்கனவே ஒரு பதிவில் மாட்டிவிட்டதால், பதிலுக்கு ஒரு தொடர்பதிவில் என்னை மாட்டிவிட்டுருக்கிறார், அதற்கு அவருக்கு முதலில் நன்றி. அடுத்து, நான் எவ்வளவு மொக்கை போட்டலும் பொறுமையுடன் படித்து வலிக்காத மாதிரியே நடிக்கும் உங்களுக்கு வணக்கங்கள். சே... என்ன பேட்டின்னு சொன்னவுடனே அரசியல்வாதி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டேன். சரி, நேரா தம்பட்டத்திற்கு போவோம். அதாங்க பேட்டிக்கு,

1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அருண்பிரசாத்

2) அந்த பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்க காரணம் என்ன?

இல்லை, உண்மையான பெயர் அருண் பிரசாத். என்ன? மறுபடியும் முன் கேள்வி பதிலை பார்கிறீங்களா? வித்தியாசம் இருக்கு, 6 கிடையாது. ஒன்றே ஒன்றுதான், அது அருணுக்கும் பிரசாத்துக்கும் நடுவில் ஒரு Space. என்ன பண்ண? நம்ம கவர்ண்மெண்ட் என் பத்தாவது சர்டிபிகேட்ல சேர்த்து போட்டுடாங்க, அப்படியே Continue ஆகிடுச்சு.(ஒழுங்கா பெயர் எழுதி கொடுக்காததுக்கு என்னா பில்டப் பாரு) அதை பத்தி தனி பதிவு போட்டு (இன்னொரு பதிவா?????) உங்களை ஏற்கனவே A for அவஸ்தைனு மொக்கை போட்டமாதிரி போட விரும்பலை. ( ஒரு வழியா எல்லாரையும் இங்கயே மொக்கை போட்டாச்சு, இன்னிக்கி நிம்மதியா தூங்கலாம்)

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

கண்டிப்பாக அது ஒரு வெளிநாட்டு சதிதான். ஆமாங்க, இங்க மொரிசியஸ் வந்து கொஞ்ச நாள்ல தமிழ்நாட்டு பத்தி எந்த நியூஸிம் தெரியல. இங்க தமிழ் சேனலோ, படமோ எதுவும் வராது. அதனால் ஒரு நாள் 'தமிழ்' அப்படினு டைப்பண்ணி கூகுள்ல தேடினா தமிழ்10 அப்படினு ஒரு சைட் வந்தது, அதுல நம்ம கோகுலத்தில் சூரியன் முதல்ல வந்துச்சு அப்படியே பிக்கப் பண்ணிட்டேன். அதனால, இதுக்கெல்லாம் காரணம் மொரீசியஸ் அரசாங்கம்தான்

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

(என்னாது என் வலைபதிவு பிரபலம் ஆகிடுச்சா!) இதுக்கெல்லாம் பூக்குழியா இறங்க முடியும். சும்மா இஷ்டத்துக்கு கிறுக்கி தமிழ்10, தமிலிஷ், உலவு, தலைவன் ல சப்மிட் பண்ணேன். அப்படியே, பிச்சுக்கிட்டு போச்சு, இன்டர்னெட் டிராபிக் ஜாம் ஆகிடுச்சு. அப்படினு சொன்னா நம்பவா போறீங்க. ஆனா இதை சொல்லியே ஆகனும் வெங்கட் மூலம் தேவா அண்ணன் அறிமுகம் ஆனார், அவர் என்னை வலைசரதில் அறிமுகபடுத்தியும், வெங்கட், ரமெஷ், அனு போன்றவர்கள் சரியான நேரங்களில் கொடுத்த வழிகாட்டுதலாலும் கொஞ்சம் பிரபலம் ஆகிருக்கு. (நல்லவேளை பிரபலம், இதுவரை Problem ஆகலை). யூத்புல் விகடன் பரிந்துரைத்த 'பிளாக்குக்கு சூனியம்' பலரை அழைத்து வந்தது

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் மொத்த பதிவு 31 ல் 14 பதிவுகள் சொந்த (சில நொந்த) அனுபவம் தான். ஆனால் மனைவி என்ற கவிதை பாருங்கள், அதன் விளைவை கமெண்டில் கொடுத்திருப்பேன். 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஆமாங்க, ஒரு பதிவுல பில் கேட்ஸ் பத்தி சொன்னதால Microsoft பங்குகள் அடிமாட்டு விலைக்கு இறங்கிடுச்சு, இன்னொரு பதிவுல ஆக்டோபஸ் பத்தி சொன்னதால அது உலக பேமஸ் ஆகிடுச்சு. அதனால அவங்க நம்மளை நல்லா கவனிச்சுகிறாங்க. நீங்க வேற, திருவிளையாடல் படத்தில் வரும் முருகன் சொல்லும் டயலாக் போல, என் பிலாக், என் Followers அப்படினு வாழ்ந்துகிட்டு இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா

7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இருக்குற ஒன்னை பாத்துக்கவே நேரம் இல்லை, இதுல இன்னும் 2, 3 வெச்சிக்கிட்டா அப்புறம் யார் உதை  வாங்குறது. (சத்தியமா நான் பிலாக்கைதான் சொன்னேன்) 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை உண்டு எல்லா பதிவர் எழுத்துக்கள் மீதும். என்னமா எழுதுறாங்க. ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைல், நாமக்குதான் எந்த ஸ்டைல்  ஒத்துவருதுனு  இன்னும் கண்டுபிடிக்க முடியல

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

உண்மையை சொல்ல வேண்டுமானால், என் முதல் ரசிகை என் மனைவிதான். எந்த பதிவையும் முதலில் படித்து விட்டு விமர்சிப்பது அவர்தான். தமிழை மெதுவாகதான் படிப்பார், ஆனால் அவர் சொல்லும் கருத்து உண்மையிலேயே யோசிக்கவைக்கும். அதன் பிறகு மாற்றியே பப்ளிஷ் செய்வேன் (மாத்தலைனா என்ன ஆகும்னுதான் எல்லாருக்கும் தெரியுமே)

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நாம பிலாக்கு எழுதுறதுக்கே ஆப்பு வெச்சிடுவீங்க போல இருக்கு, அதை எல்லாம்  இங்க சொல்லிட்டா, அப்புறம் இதுக்கு மேல போடப்போற பதிவுல என்னத்தை போடுறதாம். தொடர்ந்து வந்து படிச்சு தெரிஞ்சுக்குங்க.

சரி, கடைசியா யாருக்கு மஞ்சதண்ணி தெளிச்சி மாலை போட்டு வெட்ட கூப்பிடலாம், Sorry, தொடர்பதிவு எழுத கூப்பிடுலாம்னா,



First, லீவுல இருந்து திரும்பி வந்திருக்குற நம்ம சிரிப்பு போலீசு ரமெசு

அடுத்து, பட்டிகாட்டான்னு சொல்லிட்டு நாட்டு வைத்தியமா சொல்லுற நம்ம ஜெய்

அப்புறம்,நம்ம சின்ன தம்பி செளந்தர்.

கண்ணுகளா மேடைக்கு வாங்க.....

டிஸ்கி 2: எதுக்கு கிடா வெட்டு படம் குடுக்குறோம்னு தெரியாமல், ஆடு படம் கொடுத்து உதவிய நண்பர் ஜெய்க்கு நன்றி!

Monday, July 26, 2010

A for அவஸ்த்தை



அருண்பிரசாத் னு எனக்கு பேரை வெச்சாலும் வெச்சாங்க, நான் படுற அவஸ்த்தை இருக்குதே, சொல்லி மாளாது. இந்த அவஸ்த்தை சின்ன வயசுலயே ஆரம்பிச்சிடுச்சி, 

ஸ்கூல்ல Attendanceல முதல் 4 பேருக்குள்ள வந்திடும், அதனால எடுத்தவுடனே வாத்தியாருங்க நம்மளதான் கும்முவாங்க. இதுல எங்க Class teacher மாத்தி யோசிக்கிறன்னு எல்லோரும் Alphabetical Orderல உட்காருங்கனார். கடைசி பெஞ்சுல சுகமா தூங்குன என்னை தாக்கி, சாரி, தூக்கி மொத பெஞ்சுல போட்டுடாங்க. 

அடுத்து, பரிட்சை ஹால்ல முதல் பெஞ்சுல உட்காரனும். பாத்துக்க வர்ற வாத்தி நமக்கு முன்னாடி நந்தி மாதிரி பெஞ்சு போட்டு உட்கார்ந்துடுவார். அந்த பக்கம் இந்தபக்கம் திரும்பமுடியாது. (அட, எல்லாரும் நல்லா பரிட்சை எழுதறாங்களானு பாக்கதாங்க)

உட்கார ஆளு சும்மா இருப்பாரா, நாம தீவிரமா ?! யோசிச்சிகிட்டு இருக்கும்போது (யாரது முழிக்கும்போதுனு படிக்கிறது, சின்னபுள்ளதனமா) இவரு “என்ன தம்பி பேப்பர் ரொம்ப கஷ்டமா?” ம்பார். (ஆமானு சொன்னா ஆன்சர் சொல்ல போறாரா? இல்லை Question மாத்த போறாரா). நாமளும் இளிச்சிட்டே ”பார்முலா யோசிக்கிறேன் சார்” னு (தமிழ் பரிட்சைல கூடதான்) புழுகனும்

அப்புறம், ஒருமுறை தமிழ் வாத்தியார் Class Teacherஆ வந்தார். வந்தவர் அதிரடியா எல்லோரும் நான் சொல்லுற வரிசைல தான் உட்காரனும்னு சொல்ல, யப்பா முதல் பெஞ்சுல இருந்து எஸ்கெப்னு நினைச்சா, தலைவர் “எல்லோரும் அகர வரிசைல உட்காருங்க”னிட்டார். மறுபடியும் வட போச்சு. பக்கத்துல இருந்த பாரதி பையன் எஸ்கேப். சரி போறான், நம்ம இலக்கியா  பொண்ணு பக்கதுல உட்காரும்னு சந்தோஷபட்டா, புள்ளைங்கள தனியா உட்கார வெச்சிட்டார்.

ஒரு வழியா, கஷ்டப்பட்டு சொந்த முயற்சியில் (படிச்சிதான்னு சொன்னா நம்பவா போறீங்க) காலெஜ் வந்தாச்சு. ஆனாலும் இந்த பெயர் பிரச்சினை விடல. Practical கிளாஸ்னு சொல்லி Attendance படி காலங்காத்தால 6.30 மணிக்கெல்லாம் வந்து attend பண்ணுங்கனு சொல்லிட்டாங்க. ராத்திரி பூரா குரூப் ஸ்டடிஸ் செஞ்சிட்டு (எதை படிச்சோம்னு கேட்க கூடாது) விடியற்காலை 6 மணிக்கு எழுந்துக்கறது எவ்வளவு கஷ்டம்னு பசங்களுக்குதான் தெரியும்.


போகுதுனு பொருத்துக்கிட்டா, இந்த Viva-Voce கேட்குறேனு வர்ற External வாத்தி தனக்கு எல்லாம் தெரியும்னு எங்க Mam முன்னாடி சீன் போட முதல் ஆளா வர்ற நம்மல போட்டு தாக்கு தாக்குனு தாக்கு வாங்க. மார்க்கு சராமாரியா அடிவாங்கும். இதை பார்த்து பயந்து மேனேஜ்மெண்ட் External ஐ convince (கொடுக்க வேண்டியத கொடுத்துதான்) பண்ணி பின்னாடி வர்றவங்களுக்கு மார்க் போடவெப்பாங்க.

இப்படி பல சா(சோ)தனைகள் இருக்கு, இந்த A வால. அதுக்கு இன்னும் 2 பதிவு  போடலாம் (இன்னும் ரெண்டா? Me பாவம்னு நீங்க சொல்லுறது கேக்குது) இதுக்கு மேல நாம பெயரை மாத்தி என்ன பிரியோஜனம். நாம என்ன டி.ராஜேந்தரா? ஏதோ, நாம பட்ட அவஸ்தைய என் பொண்ணு பட கூடாதுனு அவள் பெயரை "S" ல வெச்சிட்டேன். ங்கொய்யால, எவன் alphabetla உட்காரவெச்சாலும், அகர வரிசைல உட்காரவெச்சாலும் கவலையில்லை.



Monday, July 12, 2010

ஒலக கோப்பய செயிச்சது ஆறு?

ஒரு வழியாக கால்பந்து உலகக்கோப்பையை ஸ்பெயின் ஜெயிச்சிட்டாங்கப்பா. ஆனா இதுக்கு எல்லாரும் பண்ணாங்க பாருங்க ஒரு அழிச்சாட்டியம், யப்பா தாங்க முடியலை.

ஸ்பெயினும், ஹாலந்தும் ரொம்ப கஷ்டப்பட்டு, பெரிய பெரிய அணிகளான பிரெசில், அர்ஜண்டினா, ஜெர்மனி எல்லாரையும் ஜெயிச்சி இறுதி போட்டிக்கு வந்தா? ஏதோ ஆக்டோபஸ் ஜோசியமாம் அதை பார்த்து ஸ்பெயின் தான் ஜெயிக்கும்னு சொல்லிட்டாங்க.



நம்ம டவுட் என்னாநா:

1. ஆக்டோபஸ் ஜோசியம் உண்மைனா, எல்லா போட்டியையும் இப்படியே நடத்தி இருக்கலாம்ல (கோடி கோடியா செலவு மிச்சம்)
2. அப்ப ஆக்டோபஸையும் சேர்த்து மொத்தம் 12 பேர் ஸ்பெயினுக்காக விளையாடி இருக்காங்க (கள்ள ஆட்டம்?)
3. ஆக்டோபஸ் தன் உணவுக்காக ஏதோ ஒரு பெட்டியை திறக்க, அதுல ஸ்பெயின் கொடி இருந்ததால, ஸ்பெயின் ஜெயிக்கும்னு சொல்லிட்டாங்க. யாராவது இந்தியா கொடி அதுல வெச்சிருந்தா, இந்தியா ஜெயிச்சிருக்கும்ல!
4. சரி, கொடிக்கு பதிலா, ஒரு ஸ்பெயின் வீரரையும், ஒரு ஹாலந்து வீரரையும் தொட்டில இறக்கிவிட்டு இருந்தா, ஆக்டோபஸ்க்கும் நல்ல சோறு கிடைச்சிருக்கும், அந்த நாட்டுக்கும் புதுசா நல்ல Players கிடைச்சிருப்பாங்க
5. கடைசியா என் டவுடுக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க, உலககோப்பையை ஜெயிச்சது ஸ்பெயினா? ஆக்டோபஸா?


ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், இந்த உலக கோப்பை இறுதி போட்டில ஸ்பெயின் Famous ஆச்சோ இல்லையோ, இந்த ஆக்டோபஸ் உலக Famous ஆகிடுச்சு.

சரியாருக்காவது உங்க பிளாக் Famous ஆகுமானு தெரிஞ்சுகனுமா? என்கிட்ட முதலை ஜோசியம் இருக்கு, ஆனா நீங்க அது வாயில கைவிட்டு பார்க்கனும். கடிச்சா நீங்க கண்டிப்பா Famous.

Friday, July 9, 2010

பிளாக்குக்கு சூனியம்

போன வாரம், நம்ம சிரிப்பு போலீசிடம் இருந்து அவசர அழைப்பு.

”தல, உன் பிளாக்குல யாரோ சூனியம் வச்சிட்டாங்க. இந்தியாவுல எந்த ஆபிஸ்லயும் உன் பிளாக் ஓப்பன் ஆக மாட்டேன்குது.


இந்த Error மெசேஜ் வருது” 

சொன்னது போலீஸ் ஆச்சே,  சினிமா படத்தை மிஸ் பண்ணாலும் பண்ணுவாரு  இந்த மாதிரி விஷயத்தை கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டாரு.




















இந்த படத்தை வேற அனுப்பி வெச்சாரு. என்ன பிரச்சனைனா, நம்ம பிளாக் Firewall இருக்குற, IE உபயோகிக்கிற எந்த ஆபிஸ்லயும் ஓப்பன் ஆகலை. நம்ம ஆளுங்க ஆபிஸ்ல வேலை செய்யுறதவிட பிளாக் படிக்கிற நேரம்தான் அதிகம். ( உன் ஆபிஸ்ல நீ செய்யுற வேலை அது, நாங்க ரொம்ப பிஸி னு யாரும் கமெண்ட் போட கூடாது). இப்படி இருந்தா நம்ம பிளாக்குக்கு யாரும் வரமாட்டாங்களே! (ஏற்கனவே, யாரும் வர்றது இல்லை)

"எடுக்கறேன், செய்வினைய எடுக்கறேன்"

போலீசும் நானும் பல விதங்களில் துப்பறிஞ்சோம். Template மாத்தினேன், எல்லா Widgets ஐயும் தூக்கியும் ஓப்பன் ஆகலை. ரொம்ப பெரிய சூனியம் போல இருக்குனு அப்படியே ஷாக் ஆகிடேன். எல்லாம் போச்சா! வேற பிளாக் ஓப்பன் பண்ண வேண்டியதுதான்னு முடிவு பண்ணி பழைய பதிவுகளை Back up எடுக்க ஆரம்பிச்சாச்சு (அதுக்காக, பிளாக் எழுதுறத நிறுத்தி உங்களை நிம்மதியா இருக்க விட முடியுமா?). எதுக்கும் ஒருமுறை நம்ம கூகிள் ஆண்டவரை உதவிக்கு கூப்பிட்டு பார்த்தேன். 10 நிமிஷத்துல பிரச்சினை தீர்ந்தது.

அவர் இதைதான் செய்ய சொன்னார்:

1. உங்கள் Dashboard லிருந்து, Design ஐ சொடுக்கவும்
2. அதில் உள்ள Edit HTML ஐ Click செய்து அங்கு வரும் "Expand Widget Templates" ஐ டிக் செய்யவும்
3. கிழே உள்ள கோடிங்குகளில்  script type='text/javascript' ஐ தேடி கண்டுபிடிக்கவும்
4. அதில்  defer='defer' என்பதை script defer='defer' type='text/javascript' இவ்வாறு சேர்க்கவும்
5. "Save Template" ஐ சொடுக்கிவிட்டு, வெளியேறவும்

பிரச்சினை முடிந்தது.

என்ன பிரச்சினைனா, இது உலகளவில் Microsoft IE ல இருக்குற பூச்சியாம் (அதாங்க Bug ஆம்). பழைய IE version ல இந்த பிராப்ளம் இருக்காம். அதை சரிப்பண்ணத்தான் இந்த கோடிங்.

நாம எழுத கூடாதுனு சர்வதேச அளவுல பிரச்சினை பண்ணுறாங்கப்பா. இந்த பயபுள்ள பில் கேட்ஸ் நம்மகூட சின்னபுள்ளதனமா விளையாடுறான்யா....

இப்படி சர்வதேச அளவுல நாம எழுதுறத தடுக்கறாங்களே, ஒருவேளை நானும் பிரபல பதிவர் ஆகிட்டனோ?

தல, நீ சொல்லேன்.......

Thursday, June 10, 2010

கோழி முட்டையில் இருந்து குதிரை வருமா?



கோழி முட்டை யில் இருந்து குதிரை வருமா?

என்னடா இவன் கேனத்தனமா கேட்கிறான் என பார்கிறீர்களா?

மறுபடியும் கேட்கிறேன் - கோழி முட்டை யில் இருந்து குதிரை வருமா?

வராது என்று சொன்னா அவன் மனுஷன்,
வரும்னு சொன்ன அவன் பெரிய மனுஷன்.

நான் பெரியமனுஷன்.
கோழி முட்டை யில் இருந்து குதிரை வருதுங்க.

நீங்க FARMVILLE  விளையாடிநீங்கனா குதிரை மட்டும் இல்ல, 
பசு பன்றி ஆடு மரம் வீடு  இன்னும் என்னென்னமோ வருதுங்க.
என்ன லாஜிக் கோ தெரியல!
ஒரு வேலை இதை தான் கூமுட்டை (குதிரை முட்டை) னு சொல்றாங்களோ! 


சரி விஷயத்துக்கு வருவோம்,
இது என்ன விளையாட்டுனா, அவங்க ஒரு எடாத கொடுபாங்களாம் நாம அத கம்ப்யூட்டர் லயே உழுது, பயிர் செஞ்சி, அறுவடை செய்யணுமாம் .நீங்க விதைக்கும் பயிறுக்கு ஏற்ப அது விளையற நேரமும் தொகையும் மாறுமாம்.
ஊர்ல விவசாயம் பண்ண மாட்டேனு சொல்லிட்டு  நகரத்துக்கு ஓடி வந்து ராத்திரி BPO ல வேல செய்யற முக்கால் வாசி பேர் இத விளையாடுறாங்க. என்னத்த சொல்ல?


அதுமட்டும் இல்லங்க அடுத்தவங்க FARM முக்கு போய் உரம் போட்டா இவங்களுக்கு XP என்கிற EXPERIENCE அதிகம் ஆகி அடுத்த LEVEL லுக்கு போலாமாம்.
அடுத்த வீட்ல கொலையே நடந்தாலும் என்னனு எட்டி பாக்க மாடோம் ஆனா இதுல மட்டும் தினமும் அடுத்தவன் FARM முக்கு போய் வேலை செய்வானாம்.


இன்னும் இருக்கு, FARMVILLE காரங்க கிட்ட சேத்து வெச்ச காசை (FARMVILLE CASH தாங்க, சொந்த காசு இல்ல) கொடுத்து நாய் குட்டி வாங்கி அதுக்கு தினமும் சோறு ( அதாங்க DOG TREAT ) போடணுமாம் இல்லாட்டி அது உங்களைவிட்டு ஓடி போயிடுமாம்.
பெத்த அப்பனுக்கே சோறு போடா யோசிக்கிற ஜனங்க இந்த நாய் குட்டி சோறுக்கு நாய் மாதிரி அலைஞ்சி பக்கத்துக்கு FARM காரன்கிட்ட சோத்த  அனுப்ப சொல்வான்.


இன்னொன்னு என்னனா இவங்க ஒரு பரிசை நண்பருக்கு அனுப்புவாங்களாம், பதிலுக்கு அவுங்க ஒரு பரிசை திரும்ப அனுப்புவாங்களாம் , இது தினமும் நடக்குமாம். (கவலை படாதிங்க ஒத்த பைசா செலவுஇல்ல, எல்லாம் கம்ப்யூட்டர் லயே தான்)
பிச்சகாரனுக்கு ஒரு ரூபாய் போட யோசிகிறவுங்க, இதுல தினமும், ஏன் ஒரு நாளைக்கு ரெண்டு தடவை பரிசு அனுபறாங்க. கலிகாலம்டா சாமி

இன்னும் நெறயா சொல்லாம் இந்த GAME ஐ பத்தி, கொக்காமோக்க எவன்டா இந்த GAME ஐ கண்டுபுடிச்சவன்? அவன் மட்டும் என் கைல கிடைச்சான்! 

:

:

:

:

:

:

:

என்ன பண்ண முடியும், " எப்படிடா இது? ரூம் போட்டு யோசிச்சியானு கேக்கணும்"


அப்புறம் எல்லாருக்கும் ஒரு சின்ன REQUEST ,


யாராவது FARMVILLE விளையாடுனீங்கனா

ஹி ஹி ஹி 

arunprasath.gs@gmail.com க்கு NEIGHBOUR REQUEST அனுப்பி என்னையும் உங்க NEIGHBOUR ஆ செத்துகொங்கோ ...... GIFT டே வர மாட்டேங்குது.


 ஹி ஹி ஹி


(நண்பர் வெங்கட் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, NEIGHBOUR ஆ செத்துகொங்கோ என்பதை சேர்த்துகொள்ளுங்கள் என திருத்தி வாசிக்கவும். தவறுக்கு மன்னிக்கவும்)





Wednesday, June 2, 2010

என்ன கொடுமை சார் இது?




மோரீஷியஸ்....

90  களில் இந்தியா எப்படி இருந்ததோ
அப்படி இருக்கிறது தற்போதைய மோரீஷியஸ்...

5 மணிக்கு மேல் கடைகள் கிடையாது...

6 மணிக்கு மேல் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிவிடுவர்...

8 மணிக்கு மேல் பேருந்துகள் கிடையாது...

தமிழ் ஆட்சி மொழியாக இருந்தாலும்,
தமிழ் திரைப்படங்கள் வராது....

நம்முடைய தூர்தர்ஷன் போல 
இங்கும் 3 சேனல் கள் உண்டு....
உருப்படி இல்லை....

சரி DTH கொடுக்கலாம் என்றால்
தமிழ் சேனல்களே கிடையாது....

மருந்திற்கு கூட இவர்களுக்கு
கிரிக்கெட் என்றால் என்னவென தெரியாது....

IPL தொடங்குகிறது எங்க 
அலசி ஆராய்ந்து சவுத் ஆப்ரிக்கா வில் இருந்து
கிரிக்கெட் ஒளிபரப்பும் DSTV DTH -ஐ வாங்கினேன்...
Package மாதம் 2000 ரூபாய்..... 

வந்தான்யா அந்த சேல்ஸ் ரெப்பு...
" சார் 4 ஹிந்தி சேனல், செட் மக்ஸ், அணைத்து ஸ்போர்ட்ஸ்
மற்றும் ஒரு புதிய சேனல் 1500 ரூபாய்க்கு ஜூன் இல் வருது" என்றான் 

நானும் ஆர்வ கோளாரில் 
"எந்த சேனல், SUN டிவி யா?" 

அவன்: இல்ல சார், வேற

நான்: ஸ்டார் விஜய் யா?

அவன்: இல்ல சார், எதோ நீளமா பேர் வரும் சார்? ஹிந்தி சேனல்

நான்:  ஹ்ம்ம், சஹாரா, கலர்ஸ், ஸ்டார் பிளஸ்....

அவன்: இல்ல சார், எதோ "ஷா, ஓர்" லாம் வரும்.

நான்: தூர்தர்ஷன்?

அவன்: ஆமாம் சார், அதே தான்.

கொய்யால... அத நாங்க இந்தியாலயே கிரிக்கெட் தவிர வேற எதுக்கும் பாக்க மாடோம், இங்க வந்து அந்த கொடுமைய அனுபவிக்கணுமா?

ஒன்றும் இல்ல சனி உச்சத்துல இருந்தா இப்படிதான். 

விடு விடு உலக தொலைக்காட்சிகளை  பார்த்து அறிவை வளர்த்துக்கலாம்! ( வேற வழி?)

கொடுமை கொடுமை னு கோவிலுக்கு போன அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்.....

உட்காருகிற இடம் எல்லாம் ஆப்பு வெச்சிடுறாங்கையா....

இ. வா. பேசும் படம்:
சல்யூட்....