Cricket Countdown....

Showing posts with label பிறந்தநாள். Show all posts
Showing posts with label பிறந்தநாள். Show all posts

Thursday, October 7, 2010

தேவா பிறந்தநாள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேவா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்


அவர் பிறந்த நாளை முன்னிட்டு கழக கண்மணிகளுக்கு அவர் கவிதை மற்றும் கட்டுரைகளை படித்து புரிந்து கொல்ல சிறப்பு பரிசு இதோ....

எல்லோரும் சண்டை போடாமல் எடுத்துக்கோங்க.....



அவருக்காக ஒரு சிறப்பு பாடல்....

எந்திரன்: அரிமா அரிமா-நானோ
ஆயிரம் அரிமா-உன்போல்
பொன்மான் கிடைத்தால்- யம்மா
சும்மா விடுமா?

ராஜாத்தி என் நெஞ்சில் ஆசைத்தீ
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்
அக்கினி அணையலையே!

 உன்-
பச்சைத்தேனை ஊற்று
என்-
இச்சை தீயை ஆற்று

என் செல்லச் சிலையே பந்தி நடத்து
சேலை இலை போட்டு

Wednesday, September 8, 2010

என்னது இவர் யாரா?

வருடம் 1980,
செப்டம்பர் 8....


நல்ல இடியுடன் கூடிய மழை,
திடீரென வெட்டிச்சென்றது ஒரு வெளிச்சம்,
இதை அனைத்தையும் தாண்டி ஒரு குழந்தையும் அழுகுரல்.

 “ஆண்பிள்ளை பிறந்து இருக்குங்க” என செவிலியர் சொல்ல, குடும்பமே மகிழ்ச்சியடைந்தது. பிற்காலத்தில் வரப்போகும் பிரச்சினை தெரியாமல்.

பள்ளி செல்லும் காலம் வந்தது. பள்ளியில் இவருடைய குறும்புதனம் ஆரம்பமானது.யாராவது அடித்தால் பூத்தொட்டி கொண்டு அடிப்பது, ஆசிரியர் கேள்வி கேட்டால் பதிலுக்கு பழைய சினிமா பற்றி கேள்வி கேட்பது, ஓவராக மொக்கை போடுவது என இவருடன் அவையும் வளர ஆரம்பித்தது

சரி, காலேஜ் சென்றால் சரியா போகும் என்று பார்த்தனர். ஆனால் அங்கே சென்று, ஸ்ட்ரைக் செய்கிறேன் பேர் விழி என்று போலிஸ் வந்தவுடன் இடத்தை விட்டு ஓடுவது, பஸ் கண்ணாடியை உடைத்து நம்பி உடன் வந்த நண்பனை தர்மஅடிவாங்க வைப்பது என ஓவர் அலும்பு பண்ண ஆரம்பித்தார். ஒரு சினிமா விடாமல் பார்த்து டயலாக்கா விட ஆரம்பித்தார். குறிப்பாக சரத்குமார் படம்னா ரத்தம் சிந்தியாவது பார்த்துட்டு வருவார்.

இவர் தொல்லை தாங்காமல் நாட்டைவிட்டே துரத்தி சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்பினார்கள் அங்கேயும் ஆபிஸில் Farmville விளையாடியும், பிளாக் ஆரம்பிச்சும் இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை கொடுமைப்படுத்தினார்.

சார், பெல்ட் கட்டாம வந்துட்டாரு அதான் இடுப்புல கை

இது ஒத்துவராது என்று சொல்லி ஒரு போலிஸ் வேலை கொடுத்தால் அதையும் காமெடியாக மாற்றி அங்க அங்க போய் அடிவாங்குகிறார். ஏன் தனக்கு கிடைத்த அவார்டை கூட பத்திரமா வைத்துக்கொள்ள தெரியாமல் ஒரு களவாணியிடம் குடுத்துவிட்டு முழித்தவர் இவர்.

அப்படிப்பட்ட இவர் இன்றைக்கு பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த வருஷம் இவருக்கு திருமணம் ஆகி நாங்கள் பெறும் (?!?!) இன்பம் அனைத்தையும் பெற இறைவனை வேண்டுவோம்.

டிஸ்கி: என்னது இவர் யாரா? சத்தியமா, இது யாரை பற்றிய பதிவும் இல்லை, அதே போல இங்க கொடுத்து இருக்குற லிங்க் வேற ஒருவர் பிளாக்குக்கு டைவர்ட் ஆச்சுனாலும் அவருக்கும் இந்த பதிவுல சொல்லபட்டவருக்கும்  அந்த படத்தில் இருப்பருக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ!.


பதிவுலக வரலாற்றில் முதன் முதலாக ஒருவருக்கு என் பதிவையும் சேர்த்து 4 வாழ்த்து(?!?!) பதிவுகள்.  மற்ற 3க்கும் இங்க போய் பாருங்க

ஒன்று
இரண்டு
மூன்று

அங்க போறதுக்கு முன்னாடி ஓட்டு போட்டுட்டு போங்க.


Sunday, September 5, 2010

TERROR PANDIAN - னுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பதிவுலகின் பிரபல தாதா,
அவார்டு கொடுப்பதை தடுக்க சாரி திருடவந்த அன்னியன்,
கமெண்டு போடுபவர்களை கண்டிக்க வந்த சாத்தான்,

சிரிப்பு போலீசை தூக்கி போட வந்த சிங்கம்,
MLM Businessஐ தாக்கிய தங்கம்,
தானே மத்த பிளாக் போய் அடிவாங்கும் தானை தலைவன்,
தானும் பதிவுலகில் இருக்கிறேன் என்று காட்டி கொ(ல்)ள்ளும் வீரன்,
பிரபல பதிவர்களை ஓட்டும் டுபாகூர் பதிவர்

அஞ்சா நெஞ்சன் “TERROR- PANDIAN"

நம் உயிரை வாங்க மண்ணில் அவதரித்த இந்த மகத்தான நாளில் அவர் மேலும் மேலும் வளர்ந்து, அனைத்து பிளாக்கிலும் சென்று அடிவாங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன். ( @ அனானி, யோவ்... இது கடவுள் பற்றின பதிவு இல்லை, களவானி பற்றியது. வந்துடாத)


அவரை பற்றிய சின்ன ப(ய)யோடேட்டா.... (@ கே.ஆர்.பி அண்ணா, இதை நீங்க படிச்சி நொந்து போறதைவிட படிக்காம நேரா ஓட்டு பொட்டிக்கு போய்டுங்க)

பெயர் :                               டெரர் பாண்டியன்

இயற்பெயர்:                    அடிமை பாண்டியன்

தலைவர்:                          அடிவாங்கிற சங்கத்துக்கு இவரே தலைவர், தொண்டன், 
                                               எல்லாம்...

துணை 
                                               வெங்கட், பனங்காட்டு நரி - இவங்கள்லாம் டெரரை 
                                               கரெக்டா மாட்டி விட்டுட்டு கடைசில இருந்து எஸ்கேப் 
                                               ஆகுறவுங்க (நான் இந்த Gang இல்லைப்பா)

மேலும் துணை 
தலைவர்கள்:                   மங்குனி, பட்டாபட்டி, இலுமி, ரெட்டைவால்ஸ்

வயது:                                 வருஷத்தை நான் சொல்ல மாட்டேன் ஆனா ஒரு க்ளூ 
                                               1977 கும் 1979 கும் நடுவுல வர்ற ஏதோ ஒரு வருஷம். 
                                               முடிஞ்சா கண்டு பிடிச்சுகோங்க (@ டெரர், உம்ம மேல
                                                சத்தியம் பண்ணபடி நான் வருஷத்தை சொல்லய்யா...)

தொழில்:                             சொந்த பிளாக் இருந்தும், மத்தவங்க பிளாக்ல தான் 
                                                எழுதுறது (கமெண்ட் தாங்க, சரக்கு இருந்தா தன் 
                                                பிளாக்லயே எழுதி இருப்பாரே)

பலம் :                                   பாராபட்சம் இல்லாமல் எல்லோரையும் ஓட்டுவது

பலவீனம்:                          ஓட்டி ஏடாகூடமா மாட்டிகிட்டு அடிவாங்கி வருவது
 
நீண்டகால சாதனை:    வெளியூர்காரன் பிளாக்ல அடிவாங்கியது

சமீபத்திய சாதனை:      வெளியூரையும் ரெட்டையையும் தன் பிளாக்குக்கே 
                                               வரவழைக்க எதிர்பதிவு போட்டு இருப்பது

நீண்டகால எரிச்சல்:     கடவுள், கம்யூனிசம் பற்றி பேசும் அனானிகள்

சமீபத்திய எரிச்சல்:       அவார்டு கொடுப்பவர்கள், காதல் கடிதம் + கவிதை 
                                               எழுதுபவர்கள் மீது

மக்கள்:                                யாரும் இல்லை, எல்லோரும் ஆடுகள் தான்

சொத்து மதிப்பு:               1 பிளாக், 7 பதிவு தான் ஆனால் 33 Followers, 500+ Comments  
                                               பெற்றது (போட்ட comments 1000துக்கு மேல)

நண்பர்கள்:                        கூட நிறைய பேர் இருந்தாலும், எல்லோரும் இவரை 
                                               வெட்ட சமயம் பார்த்து இருப்பவர்கள்

எதிரிகள்:                            அனைத்து பதிவர்கள் 

ஆசை:                                 பாராட்டி கமெண்ட் போட நினைப்பது

நிராசை:                             பாராட்டி கமெண்ட் போட்டலும் அது கலாய்ப்பது போல  
                                             முடிவது

பாராட்டுகுரியது:          எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிப்பது

பயம்:                                  பயமா எனக்கா உனக்கா என கேட்டு நடிப்பது

கோபம்:                            சீரியஸ் பதிவு போடுபவர்கள் மீது

காணாமல் 
போனவை:                     அடிவாங்கிய தழும்புகள்

புதியவை:                       சமீபத்தில் அடிவாங்கி வந்த தழும்புகள்

கருத்து :                           இது உருப்படாது.....

டிஸ்கி: மொத்தத்துல நம்ம TERROR PANDIAN சத்தியமா ரொம்ப நல்லவன்யா... நம்புங்க...


Tuesday, June 29, 2010

சிரிப்பு போலீஸ்: வீரத் திருமகன்

நம்மல பத்தி என்னமா கூவி இருக்காருயா நம்ம போலீசு........


இந்த லிங்க் போய் பாருங்கண்ணா.....






Monday, May 24, 2010

மனைவி.....



மே 26,

ஒவ்வொருவருடமும் சாதாரனமாய் இருந்த இந்த நாள்,
2004 முதல் முக்கியமானதாய் மாறியது.

நட்பை காதலித்தேன், காதலியாய் வந்தாள்.
காதலை மணந்தேன், மனைவியாய் மாறினாள்.

நண்பன்னாய் அவள் பிறந்தநாளில்,
உலகத்தில் ஒருவனாய் வாழ்த்தினேன்.

காதலனாய் அவள் பிறந்தநாளில்,
நாங்களே உலகமாய் வாழ்ந்தோம்.

கணவனாய் அவள் பிறந்தநாளில்......
ஒரு முறையும் உடன் இருக்கவில்லை.....

பணத்தை தேடி, பிரதேசங்கள் சென்றேன்....
மனதையும் மழலையையும் மறந்தேன், மறுத்தேன்...

இன்று,

மனம், மனைவி, மழலை - மூன்றும் என்னுடன்....
மணமாகி இரண்டு வருடங்களில்.....
மனைவியுடன் கொண்டாடும்....
அவளின் முதல் பிறந்தநாள்....

என்ன பரிசு கொடுக்க?
எப்படி அவளை பரவசபடுத்த?

கொடுக்கும் பரிசு ....
அவளை சுனாமியாய் சுழற்றிபோடவேண்டும்...
பரவசத்தில் அவள்...
பதில் சொலமுடியாமல் பாடாய் பட வேண்டும்....

யோசித்து... யோசித்து....
ஏதும் புலபடாமல்...

கவிதை எழுதவா? காவியம் பாடவா?
ஓவியம் வரையவா? பூக்கள் கொடுக்கவா?

ஏது செய்தாலும்....
அது நீ என்மேல் காட்டும் காதலுக்கு ஈடு ஆகாதடி...

ஏன் அடி என்னை உன் காதலுக்கு கூட ஈடுகொடுக்க முடியாதவனாய் காதலித்தாய்...
பார்! என்னையே கொடுத்தாலும், எல்லாம் அற்பமே...

ஏதும் கிடைக்காமல், ஒற்றை ரோஜாவுடன்...
அவள் முன் நின்றேன்...
என்னிடம் வேறு பரிசு இல்லை என்றேன்...


" இந்த நொடி போதுமடா, என்ன பரிசு உண்டு உலகில் இதை ஈடுசெய்ய" என்றாள்.


அன்பு மனைவி காயத்ரிகாக இந்த பதிவு....