Cricket Countdown....

Thursday, December 30, 2010

ஒன்றா ரெண்டா பல்புகள்...

பல்பு 1 :
சென்ற மாத கடைசி, வீட்டுக்கு மளிகை சாமான்லாம் வங்கிட்டு வந்து டயர்டு ஆகிடுச்சு. எல்லா சாமான்களையும் கொண்டு வந்த பெட்டியோட ஹால்ல வெச்சிட்டு நான் ஷோபால உட்கார்ந்துட்டேன். என் பொண்ணு ஒண்ணு ஒண்ணா எடுத்து வெளில போட்டு விளையாட ஆரம்பிச்சா.

நான், “வெளில தூக்கி போட்டாதம்மா, எல்லாத்தையும் அடுக்கனும்”னு  பொறுமையா  சொல்லி பார்த்தேன் கேட்கல. கோபம் வந்து “ஷமி,  ஏன் இப்படி  பண்ணிட்டு இருக்கற? என்னது இது?”னு தாங்க கேட்டேன். உடனே  அவ  கைல இருந்த Cheese டப்பாவை , என்கிட்ட காட்டி “இது Cheese"னு சொல்லுறா.... அவ்வ்வ்வ்... பல்பு...

பல்பு 2:

ஒருநாள் நான் சாப்பிட்டு இருந்தேன். என் பொண்ணு என் கிட்ட வந்து சாப்பிட “ஆ” என காட்டினால் நான் சோறு ஊட்டினேன். மறுபடி வந்து “ஆ” காட்டினாள், சோறு ஊட்டினால் வேண்டாம்னு சொல்லிட்டு காய் வேணும்னு கேட்ட. நான் காய் முன்னாடி வெச்சி கொஞ்சம் சாதத்தையும் சேர்த்து ஊட்டிடேன்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து “ஆ” காட்டினால். நாமதான் அறிவாளிதனமா ஒரு டெக்னிக் கண்டு பிடிச்சி இருக்கோம்ல. அதையே பாலோ பண்ணி காய் முன்னாடி வைத்து சாததுடன் ஊட்ட பார்த்த கொஞ்சமா வாயை திறந்து காயை மட்டும் சாப்பிட்டு விட்டு ஓடிவிட்டால். மறுபடியும்  என்கிட்ட வந்தா “ஆ” காட்டுவானுதான் நானும்  மாதிரி எதிர்பார்த்தேன். ஆனா கிட்ட வந்தவ, “காய்”னு கேட்டு கைய நீட்டி வங்கிட்டு போய்ட்டா.... அவ்வ்வ்வ்வ்....சமாளிக்க முடியல....

பல்பு 3:
எந்த பொருளை யாருக்கிட்ட இருந்து வாங்கினாலும் “தாங்க்ஸ்” சொல்லனும்னு சொல்லி கொடுத்தோம். அவளும் எங்க கிட்ட குடிக்க பால் வாங்கினாலும், பொம்மை வாங்கினாலும் “தாங்க்ஸ்” சொல்ல ஆரம்பிச்சா. ஒருநாள் டீவி பார்த்துட்டு இருந்தேன். ரிமோடை வேற இடத்துல வெச்சிட்டேன். சரினு அங்க விளையாடிட்டு இருந்த என் பொண்ணை கூப்பிட்டு அந்த ரிமோட்டை எடுத்து வர சொன்னேன்.

ரிமோட்டை எடுத்துட்டு வந்து என் கைல கொடுத்துட்டு என்னையே பார்த்துட்டு நின்னா, நான் கண்டுக்கலை. கொஞ்சம் நேரம் என்னையே பார்த்து நின்னவ, என்கிட்ட “தாங்க்ஸ்”னு சொல்லிட்டு ஏதோ திட்டிட்டே போய்ட்டா..... அவ்வ்வ்வ்வ்.... இது பல்பா.... இல்ல பாடமா?....

Monday, December 27, 2010

தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 4

ஆணி அதிகமானதால் சினிமா புதிர் பதிவு ரெடி பண்ண இந்த மாதம் கொஞ்சம் லேட் ஆகிடுச்சி. இருந்தாலும் மக்களை சும்மா விட முடியுமா. இதோ வந்தாச்சு, இந்த மாதத்திற்கான தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 4. இந்த மாசம் புதிர்  கொஞ்சம் சுலபமாதான் எனக்கு தெரியுது. நாளைக்கு க்ளு குடுக்க அவசியம்வராம இன்னைக்கே முடிச்சுடுவீங்கனு நினைக்கிறேன். பார்க்கலாம்....

விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், படத்தை வைத்து அனைத்து ஆங்கிளிலும் யோசித்து பாருங்கள். விடையை கண்டு பிடித்துவிடலாம். 


உதாரணம்:

விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்

விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.


1)

2)

3)

4)

5)


6)


7)


8)
mona lisa



9)

10)



Courtesy Questions:


11)
Courtesy: இம்சை அரசன் பாபு

12)

Courtesy: எஸ் கே

Courtesy Questions வரவேற்கப்படுகின்றன. என் மெயில் ஐடி க்கு (arunprasath.gs@gmail.com) அனுப்புங்க.


விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்

டிஸ்கி: படங்களை டிசைன் செய்து தந்து உதவிய என் மனைவி காயத்திரிக்கு நன்றி.

 

Wednesday, December 22, 2010

கேப்பிரியல் தீவு....2

சென்ற பதிவின் தொடர்ச்சி.....

நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் தண்ணீரில் விளையாடி கொண்டு இருந்தோம்.... திடீரென படகின் வேகத்தை குறைத்து திசைதிருப்பி நிறுத்தி... அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறி கடலின் ஒரு பகுதியை பார்க்க சொன்னார்கள்.....

அழகான நீல கடலின் அமைதியான நீரை கிழித்துக்கொண்டு “ஜிவ்” என வெளியே துள்ளி குதித்தது ஒரு டால்பின்....

உடனே, சுமார் 20 டால்பின்கள்  ஒன்றன்பின் ஒன்றாய் எங்கள் படகை சுற்றி திரிந்தன. எல்லா டால்பின்களும் “பாட்டில் மூக்கு” டால்பின் வகையை சார்ந்தவை. நாங்கள் சென்றது டால்பின்களின் இனப்பெருக்க சீசனாம், அப்பொழுது மட்டுமே இவை இந்த பகுதிக்கு வருமாம்.அவை துள்ளி விளையாடிய அழகே அழகு.


அவை சிறிது நேரம் விளையாடிவிட்டு சென்றதும், மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. கடல் நடுவில் மிகப்பெரிய மலை ஒன்று இருந்தது. எரிமலை வெடிப்பால் உருவானது என சொன்னார்கள். அதை கடந்தவுடன் கப்பலின் ஆட்டத்தாலும் என்னுடைய ஓவர் ஆட்டத்தலும் எனக்கு தலை சுற்ற... நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)

எரிமலைப்பாறை?!

கேப்பிரியல் தீவை அடைந்தவுடன் எங்களை சிறு ரப்பர் படகு மூலம் தீவில் எங்களை விட்டனர்... மதியம் சாப்பிட வந்து பிக் அப் செய்வதாக சொன்னார்கள். கடலில் குளித்து தீவை சுற்றி பார்த்தோம். திருமணம் செய்வதற்காக பிரத்தியேக திறந்த வெளி சர்ச் ஒன்று இருக்கிறது. எப்படிலாம் யோசிச்சி கல்யாணம் பண்ணுறாங்க?

கேப்பிரியல் தீவு


அங்கு, சில கடல்சார் இடங்களில் மட்டுமே பார்க்க கூடிய கயிறு போல நீண்ட வால் கொண்ட Phaethon lepturus (paille en queue) பறவைகளை காண முடிந்தது. இவை Air Mauritius ன் லோகோ என்பது கூடுதல் செய்தி. மீண்டும் மதியம் படகிற்கு சென்று லஞ்ச் முடித்து கடலில் ஆட்டம் போட்டோம்.

Phaethon lepturus

3 மணிக்கு கிளம்பி, வந்தது போலவே முழு வலையையும் நாங்கள் ஆக்கிரமித்து வந்து சேர்ந்தோம். இப்பொழுதும் கடல் நீரில நன்றாக நனைந்து... சுடும் வெயிலில் காய்ந்தும் வந்து சேர்ந்தோம்.

மறுநாள் தான் அதன் பின்விளைவுகள் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம் போட்ட எங்கள் அனைவரின் தோலும் உறிய ஆரம்பித்தது (skin burn).

நீச்சல் குளம் இல்லைங்க...கடல்தான். குளிப்பது நம்ம நண்பர்

திரும்பி வந்த பிறகு சொல்லுறாங்க... ஏதோ லோஷன்லாம் போட்டுட்டு தான் கடல் தண்ணில ஆடனுமாம்... அதனால தான் வெள்ளைகாரங்க நிழல்ல உட்கார்ந்து இருந்தாங்கலாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

டால்பின் வீடியோ:
கிட்டதட்ட 50 MB கொண்டது. அதை Compress செய்து 3gp யாக Convert செய்ததில் clarity குறைந்துவிட்டது. 50 MB original video தரவேற்றவும் முடியவில்லை. அதனால் அட்ஜெஸ்ட் செய்து பார்த்துக்கோங்க.





Monday, December 20, 2010

கேப்பிரியல் தீவு....

என்னுடைய பயண அனுபவங்கள் வரிசையில் இன்று ஒரு வித்தியாசமான பயணம் போகலாம். பாராசூட்டுக்கு அடுத்து இப்பொழுது கடல் வழி பயணம். டால்பின்களின் வரவேற்புடன்...

கேப்பிரியல் தீவு டாப்ல இருக்கு...
 
மொரீசியஸ் தீவின் வடக்கு முனையில் உள்ள Grandbay கடற்கரையிலிருந்து கடல் வழியாக சுமார் 1.30 மணி நேர பயண தொலைவில அமைந்துள்ளது Gabriel Island.  ரொம்ப நாளா பிளான் செஞ்சி ஒரு ஆளுக்கு மொரீசியன் ரூபாய் 1200 கொடுத்து அட்வான்ஸ் புக் செய்து கிளம்பினோம். படகில் மொத்தம் கிட்டதட்ட 25 பேர். எங்க கோஷ்டிதான் பெரிய கோஷ்டி... மற்றவர்கள் எல்லாம் வெள்ளைகாரர்கள்...
நாங்க போன படகு....

படகு ஒரு ஸ்பீட் போட் மாதிரி இருக்கும். படகின் முன்னால் இரு வலை போல கட்டி அதிலும் அமர்ந்து கொள்ளலாம். வலைக்கு கீழே கடல் தண்ணீர் தெளிக்கும். வலை கட்டி இருக்கு கம்பிகளில் காலை தொங்க விட்டு கடல் தண்ணீரை தொட்டபடியும் பயணம் செய்யலாம். எங்க கோஷ்டி  மொத்த வலையையும் ஆக்கிரமிச்சாச்சு.... வெளிநாட்டினர் டீசண்டாக படகில் நிழலில் அமர்ந்து கொண்டனர். 

ஹீரோ எப்பிடி...

ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே....கொடுத்த காசுக்கு மதியம் சாப்பாடும்... Unlimited Beer and  Fruit juice FREE....
படகில் ஒரு ஓட்டுனரும் 3 உதவியாளர்களும் வழக்கமான ரூல்ஸ் மற்றும் சில safety tips களை விளக்கினர். பெரும்பாலானோருக்கு படகு போடும் ஆட்டத்தில் வாந்தி வருமாம். எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க சொன்னார்கள்.

கிளம்பிய கொஞ்ச நேரத்தில் படகு போட்ட ஆட்டத்தை விட தண்ணீரை காலால் தொட்டு நாங்கள் போட்ட ஆட்டம் தான் அதிகம். தெளிவான வானமும், நீல கடலும், துள்ளும் தண்ணீரும், ஈரக்காற்றும் கண்டிப்பாய் வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள்.

நீலக்கடல்....தொலைவில் தெரியும் மலையை அடுத்து தான் கேப்பிரியல் தீவு

நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் தண்ணீர் விளையாடி கொண்டு இருந்தோம்.... திடீரென படகின் வேகத்தை குறைத்து திசைதிருப்பி நிறுத்தி... அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறி கடலின் ஒரு பகுதியை பார்க்க சொன்னார்கள்.....

அழகான நீல கடலின் அமைதியான நீரை கிழித்துக்கொண்டு “ஜிவ்” என வெளியே துள்ளி குதித்தது ஒரு டால்பின்....

தொடரும்....

டால்பின்களின் வரவேற்பு...




Tuesday, December 14, 2010

2010 ன் எனக்கு பிடித்த 10 திரைப்படங்கள்...


நம்ம சிரிப்புபோலிசு 2010 ல வெளிவந்து தனக்கு பிடித்த திரைப்படங்களை வரிசைப்படுத்தி டாப் 10 போட்டு இருந்தாரு... என்னையும் தொடர்பதிவு எழுத கூப்டுட்டாரு. இதோ நான் பார்த்த, எனக்கு பிடித்த 2010 ல் வெளிவந்த படங்கள்....

1.கோவா
2. தமிழ்படம்
3. விண்ணைதாண்டி வருவாயா
4.ரேணுகுண்டா
5.  சிங்கம்
6. இராவணன்
7. களவாணி
8. மதராசபட்டினம்
9. பாஸ் என்கிற பாஸ்கரன்
10. எந்திரன்


எல்லா படங்களும் அவை ரிலீஸ் ஆன வரிசையில் கொடுத்துள்ளேன்....

லிஸ்ட்டை மயிரிழையில் தவறவிட்ட படங்கள்....

11. பையா
12 வம்சம்
13. தில்லாலங்கடி



யாரது,

மைனா, நந்தலாலா, அங்காடிதெரு, சுறா....

இதெல்லாம் மிஸ்சிங்னு சண்டைக்கு வர்றது.... நல்லா பாருங்க “நான் பார்த்த” படங்களின் லிஸ்ட் இது.....எனக்கு மட்டும் மத்த படங்களை பார்க்கனும்னு ஆசை இல்லையா என்ன?.... மொரீசியஸ்ல எந்த தமிழ்படமும் ரிலிஸ் ஆகுறது இல்லைங்க...

ரிலிஸ் ஆனா ஒரே படம் எந்திரன்தான்... அதோட நிலைமைய ஏற்கனவே  ஒரு பதிவுல சொல்லிட்டேன்... தலைவர் படத்துக்குகே இந்த நிலைமைன்னா மத்த படங்கள் எப்படி ரிலீஸ் ஆகும்?  இதுல மொரீசியஸ் நாட்டின் தேசிய மொழிகள்ல தமிழும் ஒன்று... இந்த நாட்டு ரூபாய் நோட்டுல தமிழ்லயும் எழுதி இருக்காங்க..... என்ன கொடுமைங்க இது....


2010ல ரீலிஸ் ஆன படங்கள்ல மொத்தம் 13 படம்தான் பார்த்து இருக்கேன்... அந்த லிஸ்ட்தான் இது... படத்தை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு படத்தையும் டவுண்லோட் பண்ணி பார்க்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

அடுத்து, இந்த தொடர்பதிவுக்கு சிரிப்பு போலிஸ் பிளாகில் கடும் எதிர்ப்பு தெரிவித்த 


3 பேரையும் இந்த தொடர்பதிவு எழுத வருமாறு மிரட்டுகிறேன்....

Friday, December 10, 2010

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...

பெண் மனசை வெளிப்படுத்தும் அல்லது பெண் குரலில் ஒலித்த எனக்கு பிடித்த 10 பாடல்களை பகிரும்படி ஒரு மாசத்துக்கு முன்னாடி நம்ம மேட்டுபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ சகோதரிகள் கூப்பிட்டு இருந்தாங்க. 

கொஞ்சம் (?!) லேட்டாகிடுச்சு. பெண் குரல்கள், பெண் மனசை வெளிப்படுத்தும் பாடல் அதிக அளவில் இருகிறது அதில் 10 தேர்ந்து எடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால்,  என் நினைவில் உடனே வந்த 10 பாடல்களை இங்கே பகிர்கிறேன்.

சின்ன குயில் சித்ராவின் குரலில், இளையராஜா இசை ராஜாங்கம் நடத்திய புன்னகை மன்னனின்  “ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்” என் ஆல் டைம் பேவரைட். வைரமுத்துவின் வைர வரிகள் இவை...

“நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்....

2. சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே....
ஜென்சி குரலில் இளையராஜாவின் மயக்கும் இசையில் கண்ணதாசன் வார்த்தை ஜாலம் காட்டி இருப்பார். ஜானி படத்தில் வரும் “என் வானிலே.. ஒரே வெண்ணிலா” - மனதை மயக்கும் பாடல்

“நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்தைகள் தேவையா...”

3. பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே...
அனுராதா ஸ்ரீராம் குரல் + ஹாரீஸ் ஜெயராஜ் இசை = பர்பெக்ட் காம்பினேஷன். லேசா லேசா படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் என்றாலும் கவிஞர் வாலியின் எழுத்தில் இந்த பாடல், கண்டிப்பாய் THE BEST...

“நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே...”

4. ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்...
ஒரு பெண்ணின் காதல் உணர்வையும் எதிர்பார்ப்பையும் அழகாய் சொல்லி இருப்பார் கவிஞர் தாமரை. பாம்பே ஜெயஸ்ரீ குரலும் ஹாரீஸ் இசையும் மின்னலே படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட்

“அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம...”

5. பிறந்த உடலும் நீ! பிரிந்த உயிரும் நீ!
“ஒரு தெய்வம் தந்த பூவே” இதைவிட அருமையாய் ஒரு குழந்தையை எந்த கவிஞராலும் வர்ணிக்க முடியாது. வைரமுத்து அதில் சளைதவர் இல்லை என்பதை நிருபித்து இருப்பார். சின்மயியின் செல்லக்குரலில் ஏஆர் ரஹ்மான் இசையில் “கன்னத்தில் முத்தமிட்டால்” கண்டிப்பாய் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்?

“எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!...”

6. ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே...
லதா ரஜினிகாந்த், இளையராஜா இசையில் பாடியது. காட்சி அமைப்பும் பாடல் வரிகளும் மனதை உருக்கும். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் பெயரை சொன்னது நினைவுக்கு வருவது இந்த பாடல்தான்..

“கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில்

7. தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர...
இளையராஜாவின் மெல்லிய இசையில் ஜானகி அம்மாவின் குரலில்  - கண்மூடி கேட்டால் நம்மை நம் தாயின் மடிக்கே கொண்டு செல்லும் பாடல். வாலியின் வரிகளில் தளபதி படத்தின் “சின்னத்தாயவள் தந்த” பாடல் எனக்கு பல முறை மனஆறுதல் தந்து இருக்கிறது.

“தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ...”

8. சிங்கார வேலனே தேவா...
இந்த பாடலை எப்படித்தான் ஜானகி அம்மாவால் பாட முடிந்ததோ! வரிகளுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அதில் வரும் ஸ்வரங்கள், அதற்கு இணையான நாதஸ்வர இசை பிரம்மிக்க வைக்கும். சுப்பையா நாயுடுவின் இசையில் கொஞ்சும் சலங்கை படத்தின் “சிங்கார வேலனே தேவா...” மலைக்க வைக்கும் பாடல்...

“செந்தூரில் நின்றாடும் தேவா….
திருச்செந்தூரில் நின்றாடு தேவா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
அழகிய சிங்கார வேலனே தேவா”

9. விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே...
கண்மூடி கேட்டால் கடவுளை கொஞ்சுவது போல இருக்கும் இந்த பாடல். அனுராதா ஸ்ரீராம் குரலில் வைரமுத்து எழுத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் அருமையாக அமைந்த மின்சாரகனவு படப்பாடல்...

“இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே 
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே 
புவிராஜன் தோன்றினானே”

10. அன்பே உந்தன் அழகு முகத்தை... யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது..
சிம்ரனுக்காகவே இந்த பாட்டை பல முறை பார்த்தேன். இந்த பாடலில் வைரமுத்து எடுத்தாண்டு இருக்கும் வார்த்தைகள் நன்றாய் இருக்கும். ஹரினி குரலும் தேவா இசையும் சேர்ந்து வந்த நேருக்கு நேர் படத்தின் பாடல் என் பதின்மத்தை நினைவுபடுத்தும்.
 “புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்”

இந்த பதிவை தொடர நான் அழைப்பது....

மேலும், பெண்பதிவர்கள் பார்வையிலும் என்ன பாடல்கள் வருகிறது என தொடர வருகிறார்கள்...


Tuesday, December 7, 2010

வலைச்சர அனுபவம்....

ஒரு வழியா ஒரு வாரம் வலைசரத்துல ஓட்டியாச்சு... சரி, அந்த அனுபவம் எப்படி? அதன் சாதக, பாதகங்கள் என்ன?

உண்மையிலேயே, வலைச்சர ஆசிரியர் என்பது மிகவும் பொறுப்பு மிகுந்த வேலைதான். பல ஜாம்பவான்கள் எழுதி இருக்கும் இடத்தில் நீங்களும் எழுதி உங்கள் முத்திரையை பதிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.  நிறைய படிக்க வேண்டும், புதிய பதிவர்களை தேட வேண்டும் (அடேய்! அதுதாண்டா வலைச்சர கான்செப்ட்டே!)

எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் விளையாட்டாய் தெரிந்தாலும், நேரம் நெருங்க நெருங்க ஒரு சீரியஸ்னேஸ் ஆட்டோமெட்டிக்காக வந்துவிடுகிறது. உங்களின் பதிவுகளை பற்றி எழுத, உங்கள் பழைய பதிவுகளை படிக்கும் போதுதான் நம்முடைய ( + ) மற்றும் ( - ) தெரியவருது. என் சில பதிவுகளை படித்து விட்டு இவ்வளவு நல்லா நானா எழுதினேன்னு ஆச்சரியப்பட்டதும், சில பதிவுகளை பார்த்து தவறுகளை கண்டு கொண்டது இந்த வலைசரத்தால்தான். இப்போ தெரியுது மத்தவங்க எவ்வளோ கஷ்ட்டப்பட்டு இருப்பாங்கனு, என் பதிவை படிச்சி.

சாதகங்கள்:
1. மற்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறீர்களோ இல்லையோ கண்டிப்பாய்  நீங்கள் வெளிச்சத்திற்கு வருகிறீர்கள்
2. உங்கள் எழுத்து நடை, பொது அறிவு, கற்பனைத்திறன் எல்லாம் ஊன்றி கவனிக்கபடுவதால், உங்களுக்கு ஒரு பொறுப்பு வந்து விடுகிறது.
3. உங்கள் followers எண்ணிக்கை கணிசமாக உயரும்.
4. நீங்கள் அறிமுகப்படுத்திய புதிய பதிவர்கள் உளமாற சொல்லும் நன்றியை நீங்கள் உணர முடியும்.
5. உங்களை பாராட்டி அவர்கள் ஒரு நாலு வார்த்தை எழுதுவார்கள் அவர்கள் பதிவில்.
6. முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்க....

பாதங்கள்:
1. நிறைய மெனகெடவேண்டி இருக்கும். நிறைய பதிவுகள் (மொக்கைகள் உட்பட) படிக்கவேண்டி இருக்கும்
2. தினமும் பதிவு எழுதனும், அதுக்கு நிறைய ஹோம் ஒர்க் செய்யனும்.
3. நண்பர்களின் பிளாக்குகளுக்கு போக கொஞ்சம் சிரமமா இருக்கும்.
4. ஒரு வாரம் முடிஞ்சிவந்தா... புது உலகத்துல இருக்கற மாதிரி இருக்கும்.

டிப்ஸ்: (இப்படித்தான் நான் செஞ்சேன்)
1. எழுதப்போறதுக்கு 2 வாரத்துக்கு முன்னாடி இருந்தே பதிவர்கள் / பதிவுகள் லிஸ்ட் ரெடி பண்ண ஆரம்பிச்சுடுங்க
2. உங்களுக்கு கமெண்ட் போடுறவுங்க, நீங்க கமெண்ட் போடுற பதிவர்களுக்கு கமெண்ட் போடுறவுங்களை எல்லாம் பார்த்துட்டே இருங்க.
3. புதுசா யாராவது தெரிஞ்சா அவங்க பிளாக் போய் பாருங்க.
4. அவங்க யாரை எல்லாம் follow பண்ணுறாங்கனும் போய் பார்த்துட்டு வாங்க.
5. வித்தியாசமா ஒரு கான்செப்ட்ல பதிவர்களை அறிமுப்படுத்துங்க. (பூக்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள், வண்ணங்களின் பெயர்கள் - இப்படி)
6. ஓவரா தூய தமிழ்ல எழுதாதீங்க... பேச்சு தமிழ்தான் ஒரு கோர்வையா நல்லா இருக்கும்
7. எதுக்கும் திட்டமிட்டதைவிட அதிக பதிவர்களின் பட்டியலை வெச்சிக்கோங்க. உங்களுக்கு முன் வாரம் எழுதும் ஆசிரியர்கள் உங்கள் பட்டியலில் இருப்பவரை அறிமுகப்படுத்தும் சாத்தியம் அதிகம் (நம்ம ராம்ஸ் இப்போ என்னால அவஸ்தைபடுற மாதிரி... நல்ல வேளை நான் எழுதினதுக்கு முன் வாரம் வலைச்சரத்துக்கு லீவ் விட்டுடாங்க)
8. தயவு செய்து பாரதி, பாரதிதாசன், ள, ல, ற, ர - இதை எல்லாம் கரெக்ட்டா போடுங்க... இல்லைனா எனக்கு கிடைச்ச பல்பு உங்களுக்கும் கண்டிப்பா கிடைச்சிடும். அவ்வ்வ்வ்வ்....

சரி, வலைசரத்துல நான் எழுதிய பதிவுகளின் பட்டியல் இதோ....
1. சீனா சாரின் வரவேற்ப்பு - வருக ! வருக ! அருண் பிரசாத் ! கலக்குக !
2. சுயபுராணம் - ஆட்டம் ஆரம்பம்!
3. முதல் நாள் அறிமுகங்கள் -  கதம்பம் ஒன்று
4. இரண்டாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் இரண்டு...
5. மூன்றாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் மூன்று...
6. நான்காம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் நான்கு....
7. ஐந்தாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஐந்து.....
8. ஆறாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஆறு......
9. வாழ்த்தும் வழியனுப்புதலும் - செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

தயவுசெய்து இதை போய் மறுபடியும் படிச்சி நொந்து போகாதீங்க....
ஆங்... சொல்ல மறந்துட்டனே.... வலைசரத்தில் 7 நாளும் கமெண்ட் சரவெடி கொண்டாட்டம் நடத்திய நம்ம கும்மி குரூப்பு மற்றும் நண்பர்களுக்கும் நன்றி!