Cricket Countdown....

Monday, February 14, 2011

பிரபல பதிவரின் தலைகனம்

போன வியாழகிழமை நம்ம
கோகுலத்தில் சூரியன் வெங்கட்
கோவை வந்து இருந்தாரு.....

எனக்கு போன் பண்ணி,
அவரோட Family யோட
கோவை வந்து இருக்கேன்
RS புரம் KFC ல Meet பண்ணலாம்
வாங்கனு கூப்பிட்டாரு....

பிரபலபதிவரா ஆச்சே, அதிலும்
எதிர்கட்சிகாரர் ஆச்சே,
அவர் கூப்பிட்டும் போகலைனா
அரசியல் நாகரீகம் கெட்டுபோச்சினு
அறிக்கை வந்துடுமேனே
நானும் என் Family யோட போய்
மரியாதை நிமித்தம் சந்திச்சிட்டு வந்தேன்

இதை பத்தி பெருமையா
ஒரு பதிவா வேற போட்டு இருந்தாரு

அதே மாதிரி நான் சனிக்கிழமை
என் Family யோட சேலம் போனேன்
அவருக்கு PHONE  பண்ணி
நான் சேலம் வந்து இருக்கேன்
வாங்க MEET பண்ணலாம்னு
சொன்னா முடியதுனுட்டாரு

அட ஒரு 10 நிமிஷம் வந்து
போங்கனு சொல்லியும்
வரவே முடியாதுனு
முடிவா சொல்லிட்டாரு

சரி ரயில்வே ஸ்டேஷனுக்காவது
வாங்கனு சொன்னா
கண்டபடி திட்ட ஆரம்பிச்சிட்டாருங்க

நான் என்னங்க பண்ணுறது
நான் சென்னைக்கு போற
சேரன் எக்ஸ்பிரஸ் ராத்திரி
1 மணிக்குதான் சேலம் வருது

நான் வேணா கண் முழிச்சி
உங்களுக்காக வெயிட் பண்ணுறேன்
நீங்க வாங்கனு 
சொன்னதுக்காங்க இப்படி திட்டுவாரு!

நீங்ளாவது அவர் பண்ணுற
அநியாத்தை கேளுங்கங்களேன்.......



Wednesday, February 9, 2011

என்னத்த தலைப்பு வெக்கறது இதுக்கு?

முஸ்கி: எப்போவோ, எங்கயோ படிச்சது.....

இரண்டு புலவர்கள் பேசிக்கறாங்க.....

புலவர் - 1: 
முக்காலை கையில் எடுத்து
மூவிரண்டு போகையிலே
இக்காலில் ஐந்துதலை நாகம்
அழுந்த கடித்தது....

புலவர் - 2:

பத்து ரதன் புத்திரனின்
மித்துருவின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கி
தேய்!...

டிஸ்கி: யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க... விடையை நான் அப்புறம் சொல்லுறேன்