Cricket Countdown....

Monday, August 23, 2010

களவாணி

சற்று முன் கிடைத்த முக்கிய செய்தி:

சிரிப்பு போலிசிடம் இருந்த அவார்டு காணாமல் போயுள்ளது. இதை  போலிசார் ரகசியமாக தேடி வருகிறார்கள். 

பதிவுலகில் பிரபல பதிவர்களுக்கும், நல்ல பதிவுகளுக்கும் Outstanding Blog, Excellent Blog என அதிக பில்டப் கொடுத்து விருது வழங்கப்படுவது வழக்கம். அதை அவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் வழக்கம். அதன் வரிசையில் நமது சிரிப்பு போலீசுக்கு நண்பர் ஜெய்லானி  “தங்க மகன்” என்ற விருதை கடந்த ஜீலை மாதம் வழங்கி இருந்தார்.


அந்த அவார்டு அவர் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து காணாமல் போயுள்ளது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் சிரிப்பு போலிசுக்கு அவமானம் என்று அறிந்த போலிஸ் அதே போன்ற ஒரு டூப்பிளிக்கேட் அவார்டை தன் ஸ்டேஷன் அலமாரியில் வைத்து இருப்பதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நமது நிருபர் படை துப்பு துலக்கியதில், அந்த அவார்டை திருடி தன் பிளாக்கில் வைத்திருப்பது TERROR-PANDIAN (VAS) என தெரிய வந்துள்ளது. இதை பற்றி டெரர் பாண்டியிடம் நமது நிருபர் கேட்ட போது “ ஆமாங்க, பதிவுலகத்துல எதுக்கு அவார்டு குடுக்குறதுனு விவஸ்த்தை இல்லாம கொடுக்கராங்க. பாருங்க, அவார்டு காணாம போனதையே கண்டுபிடிக்க முடியாத இந்த சிரிப்பு போலீசுக்குலாம் அவார்டு கொடுத்து இருக்காங்க” என கடுப்புடன் தெரிவித்து இருக்கிறார்.


“சரி, இவர் மட்டும்தான் அவார்டு வெச்சிருக்காரா? எல்லாரும்தான் வெச்சிருக்காங்களே!” என கேட்டதுக்கு “இதுதான் ஆரம்பம், இதுக்கு மேல யாராவது அவார்டு கொடுக்கறதோ, இல்லை சும்மாதானே குடுக்கறாங்கனு வாங்குறதோ வெச்சிகிட்டீங்க. அவங்க பிளாக்லயும் வந்து திருடிட்டு வந்துடுவேன். பதிவுலகத்துக்கு நான் ஒரு அன்னியன்” என தன் தலைமுடியை அவிழ்த்துவிட்டு மிரட்டினார்.


இது இப்படி இருக்க, இதை பற்றி தெரியாத சிரிப்பு போலிஸும் அவர் குழுவும்  சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்லிக் கொண்டு வழக்கம் போல திருடு போன தன் அவார்டை வலைவீசி தேடி வருகிறது.


நமது செய்தி மூலம் பதிவுலகத்துக்கு அறிவிப்பது இது தான்.

“தயவுசெய்து, அனைத்து பதிவர்களும் தத்தமது அவார்டுகளை தங்கள் வலைபக்க அலமாரியில் இருந்து எடுத்துவிட்டு லாக்கரில் பத்திரமாக வைத்து கொள்ளவும். காணாமல் போனால் சிரிப்பு போலிசோ, நாங்களோ கண்டுபிடித்து தர இயலாது. மேலும், விருது வழங்குவதற்கும் தடை விதிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம்”

இத்துடன் இந்த சிறப்பு செய்தி அறிக்கை நிறைவு பெறுகிறது.
வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......................


54 comments:

Mohamed Faaique said...

ஆஹா.. சிரிப்பு போலீசை அவசர போலீசாக்கிய(100 ) டெரர் வாழ்க...
(நம்ம சிரிப்பு போலீஸ் 100 பதிவு எழுதிய நேரம் சரியில்லை போல....)

சௌந்தர் said...

இத்துடன் இந்த சிறப்பு செய்தி அறிக்கை நிறைவு பெறுகிறது.
வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.////
ரொம்ப சந்தோசம்

இம்சைஅரசன் பாபு.. said...

//தயவுசெய்து, அனைத்து பதிவர்களும் தத்தமது அவார்டுகளை தங்கள் வலைபக்க அலமாரியில் இருந்து எடுத்துவிட்டு லாக்கரில் பத்திரமாக வைத்து கொள்ளவும். //
எல்லோர் blog கிலும் locker வசதி இல்லை . பதிவுலகில் locker வசதி உள்ள ஒரே ப்ளாக் என்னோட ப்ளாக் தான் அதனால் எல்லோரும் award ய் ஏன் ப்ளாக் போடும்படி கேட்டுக்கொள்கிறேன்

Madhavan Srinivasagopalan said...

ஆரம்பத்துலேர்ந்தே நா, எனக்கு கெடைச்ச அவார்டு நாலையும் லாக்கர்ல தான் வெச்சிருக்கேன்.... எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்..

சௌந்தர் said...

இந்த செய்தி முடிந்தவுடன் நம்ம TERROR கைது செய்து விடுவார்கள் அதுக்கு தான் சந்தோசம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

திருட்டு பயலேன்னு மறுபடியும் ஒரு புனைவு எழுதணும் போல....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எல்லோர் blog கிலும் locker வசதி இல்லை . பதிவுலகில் locker வசதி உள்ள ஒரே ப்ளாக் என்னோட ப்ளாக் தான் அதனால் எல்லோரும் award ய் ஏன் ப்ளாக் போடும்படி கேட்டுக்கொள்கிறேன்///

இப்படியே பேசிக்கிட்டு இருந்தா உன் Blog-கையே லாக் பண்ணிடுவோம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அப்பாடா இதோட முடிசீங்களே... ரொம்ப சந்தோசம்..

Anonymous said...

’விருது இதுவரை பெறாதவர்’ சங்கத்தின் சார்பிலும்,’ச்சீசீ இந்த பழம் புளிக்கும்’ சங்கத்தின் சார்பிலும் இந்த அடாத செயலை வன்மையாக கண்டிக்கிறோம்

Jey said...

ஆனி...அப்புறம் வந்து கும்மில சேந்துக்கிறேன்....

வெங்கட் said...

மக்கள் எல்லோரும் எப்பவும்
Alert-ஆ இருக்கோணும்னு..

இந்த விழிப்புணர்ச்சியை
கொண்டு வரதான் நம்ம் டெரர்
இப்படி ஒரு வேலை ரிஸ்க்
எடுத்து செஞ்சார்..

ஆனாலும்
எனக்கு டெரர் மேல கோபம்..

10 - 15 அவார்ட் வெச்சிகிட்டு
நிறைய பேர் இருக்காங்க..
அங்கே கைவரிசை காட்டாம

போயும்., போயும் நம்ம
லூஸ் போலீஸ் சாரி
சிரிப்பு போலீஸ் தான் கிடைச்சாரா..?

அவரு பாவம்ல..
அது அவரு பிச்சை எடுத்த
காசுல வாங்கினது..

So., திருப்பி கொடுத்துடுங்க டெரர்..

மங்குனி அமைச்சர் said...

ஹா,ஹா,ஹா ...................... யோவ் காலைல இருந்து ஏற்கனவே யூனிபாம காணோமின்னு சிரிப்பு போலிசு தேடிகிட்டு இருக்கு, இப்ப இது வேறையா ??? விளங்கும்

Anonymous said...

நன்றி அருண் நானும் என் அவார்ட் எல்லாம் லாக்கர் லே வச்சிட்டு வந்தேன் ..அப்பாடா இப்போ தான் நிம்மதியா இருக்கு

அருண் பிரசாத் said...

வாங்க மொஹமத்

@ harini
ஐ இது நல்லா இருக்கே!

@ Madhavan
நீங்க ரொம்ப வெவரம் சார்

@ செளந்தர்
இதுக்கு தான் சந்தோஷமா?

என்னது நானு யாரா? said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுப்பா! வெங்கட்டுக்கு போட்டியா?

பலே சரியான போட்டி? (வீரப்பா குரலில் படித்து கொள்ளவும்)

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்
தொலைஞ்சி போச்சுனு ஒரு புனவு எழுதுங்க அதுதான் கரெக்ட். அதாவது தொலைச்சுட்டு தேடுறதே வேலையாப்போச்சு உமக்கு

@வெறும்பய
ஏன் இந்த கொலைவெறி?

வாங்க சதீஷ்குமார்

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
நீங்கதான் டெரர்ரின் தலைவர்னு சொன்னாங்க!

@ மங்குனி
ஆஹா, இது வேறய்யா...

அருண் பிரசாத் said...

@ ஜெய்
யப்பா... நீ வேலை செய்ய ஆரம்பிச்சதில் இருந்து சென்னைல ஒரே மழைய்யா... போதும் நிறுத்திக்கோ!

@ Sandhya
மாமி.., நீங்க உஷாரு

@ என்னது நான் யாரா?
பேரை சின்னதா வைங்க பதில் போட கஷ்டமா இருக்கு :)

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... நாங்க மாமூல் கரீக்டா கொடுத்துருவோம்ல..... யாருக்கு என்று சொல்லமாட்டோம்ல....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஹா,ஹா,ஹா ...................... யோவ் காலைல இருந்து ஏற்கனவே யூனிபாம காணோமின்னு சிரிப்பு போலிசு தேடிகிட்டு இருக்கு, இப்ப இது வேறையா ??? விளங்கும்///

அன்புக்கு கட்டுப்பட்டு போலீஸ் சும்மா இருக்குது. சீரியஸ் ஆனா நாடு தாங்காது.

//அவரு பாவம்ல..
அது அவரு பிச்சை எடுத்த
காசுல வாங்கினது..

So., திருப்பி கொடுத்துடுங்க டெரர்..//

ஆமா டெரர் பிச்சை எடுக்குறது எவ்ளோ கஷ்டம்னு இன்னொரு பிச்சைக்காரனுக்குதான் தெரியும். வெங்கட் எவ்ளோ பீல் பண்றாரு(என்ன இருந்தாலும் என் பக்கத்துல உக்காந்து பிச்சை எடுத்தவராச்சே. என்னோட கொலீக்) ஒழுங்கா திருப்பி கொடுத்துடு. உனக்கும் வெங்கட்டுக்கும் ஸ்பீல்பெர்க் படத்துல சான்ஸ் வாங்கித்தரேன்..

கருடன் said...

@ரமேஷ்
//திருட்டு பயலேன்னு மறுபடியும் ஒரு புனைவு எழுதணும் போல....//

புனைவு எல்லாம் போட்ட அப்புறம் போலீஸ் ஸ்டேஷன் பாம்ப வச்சிடுவேன்.. உன் பெயர் போட்டு எவ்வளோ அழகா display வச்சி இருக்கேன்.. நன்றி தெரிவிச்சி வேனும்ன பதிவு போடு...

Balajisaravana said...

சந்தோசம்! மகிழ்ச்சி!
ஒன்னும் சொல்றதுக்கில்ல :)

கருடன் said...

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
’விருது இதுவரை பெறாதவர்’ சங்கத்தின் சார்பிலும்,’ச்சீசீ இந்த பழம் புளிக்கும்’ சங்கத்தின் சார்பிலும் இந்த அடாத செயலை வன்மையாக கண்டிக்கிறோம்



கவலைபடாதிங்க பாஸ்.. உங்களுக்கு பிடிச்ச விருது எந்த ப்ளாக்ல இருக்கு லிங்க் மட்டும் கொடுங்க. அப்படியே உங்க மெயில் ஐடி கொடுங்க... விருது உங்க வீடு தேடி வரும்..

(ஆணி...)

Mohamed Faaique said...

சிங்கப்பூர்'ல இருந்த அவார்டை சர்ஜாவிலுள்ள டெரர் எப்படி ஆட்டைய போட்டார்..
எனது ஆராய்ச்சின் படி..(இப்போ இது வேறயா?௦
சி. போலிஸ் இந்திய வந்திருக்கும் வேலை,
VAS தலைவர் மற்றும் உறுப்பினர்களது கூட்டுச் சதியாக இருக்க வேண்டும்..

Jey said...

//
சிரிப்பு போலிசிடம் இருந்த அவார்டு காணாமல் போயுள்ளது. இதை போலிசார் ரகசியமாக தேடி வருகிறார்கள்.///

மொத இந்த ஜெய்லானி பயபுள்ளய போட்டுத்தள்ளனும்..., இப்பப் பாரு இதுக்கும் ஒரு பதிவப் போட்டு தேத்திட்டானுக..

Jey said...

//அந்த அவார்டு அவர் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து காணாமல் போயுள்ளது.///

இந்த சிப்பு போலீஷயே 15 நாள் கடத்தி கொண்டுபோய் வச்சிருந்தானுக...இந்த விருது காணாம போனது ஒரு மேட்டரா..., சிப்ப கடத்தி கொண்டுபோன புண்ணியவான்..அப்படியே போட்டுத்தள்ளியிருந்த...பதிவுலகமே.பொங்க வச்சி கொண்டாடிருக்கும்..

Jey said...

//ஒரு டூப்பிளிக்கேட் அவார்டை தன் ஸ்டேஷன் அலமாரியில் வைத்து இருப்பதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. //

ரைட்டு நடத்துங்க...

Jey said...

///பதிவுலகத்துக்கு நான் ஒரு அன்னியன்” என தன் தலைமுடியை அவிழ்த்துவிட்டு மிரட்டினார்.///

அதுதான்..பல கெட்டப்புல, பல பிளாக்ல போய் அடிவாங்குதா இந்த டவுசரு..ச்சே..இந்த டெர்ரரு..

Jey said...

//மேலும், விருது வழங்குவதற்கும் தடை விதிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம்///

ஜெய்லானி இதுக்கு நீருதான்..பதில் சொல்லனும்..., அருவா எடுத்துட்டு கிளம்பு...வரிசய்யா தாங்க முடியாத மொக்கை போடுர இந்த கோஷ்டிய ஒவ்வொன்னா பலி கொடுத்துருவோம்..., அப்படி செஞ்சா மொத்த பதிவுலகமே சேந்து நமக்கு அவார்டு குடுக்கும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சிங்கப்பூர்'ல இருந்த அவார்டை சர்ஜாவிலுள்ள டெரர் எப்படி ஆட்டைய போட்டார்..
எனது ஆராய்ச்சின் படி..(இப்போ இது வேறயா?௦
சி. போலிஸ் இந்திய வந்திருக்கும் வேலை,
VAS தலைவர் மற்றும் உறுப்பினர்களது கூட்டுச் சதியாக இருக்க வேண்டும்.. //

exactly exactly

செல்வா said...

பதிவுலகில் இதுபோன்ற தவறுகள் நடவாமல் இருக்கு யாரும் விருதுகளை ஏற்றுக்கொள்ள வேண்டாவென அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் எங்கள் TERROR அவர்களுக்கு அதிக ஆணி இருப்பதால் விரைவிலேயே உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பதிவுலகைக் காப்பாற்ற அயராது பாடுபடும் நமது அருண் அண்ணன் அவர்களை நாங்கள் கௌரவிக்கும் விதமாக விருது வழங்கலாமென இருக்கிறோம்.

ப்ரியமுடன் வசந்த் said...

;)

ப்ரியமுடன் வசந்த் said...

போலீஸ்க்கே இந்த நிலையா அந்தோ பரிதாபம் ;)

கருடன் said...

Mohamed Faaique சொன்னது…
//ஆஹா.. சிரிப்பு போலீசை அவசர போலீசாக்கிய(100 ) டெரர் வாழ்க...//

அட அவரு இப்பவும் அவார்டு காணம போச்சி சொல்லி அழுவுர போலீஸ்..

கருடன் said...

@harini
//அதனால் எல்லோரும் award ய் ஏன் ப்ளாக் போடும்படி கேட்டுக்கொள்கிறேன்//

மக்கா பேசினபடி எல்லா அவார்டும் வந்தது சொல்லு... ஒட்டுகா அடிச்சிடலாம்...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

வாத்தியாரே ,

இந்த ஜெய்லானி தொல்லை தாங்கலை ...உடனே நீங்கள் யாருக்கும் AWARD குடுக்க குடாதுன்னு ஒரு சம்மன் விடு ...,:))))))

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் ,

இன்னாய நினைசிகீரிங்கோ ...ஒரு கமெண்ட் போட்டா moderation காமிக்குது ...,இது சரியில்ல மாமு ..அப்புறம் அகார புகார சீன் ஆயிடும் சொல்லிபுட்டேன்

கருடன் said...

@வெங்கட்
//So., திருப்பி கொடுத்துடுங்க டெரர்..//

நீங்க சொல்லி கேக்காமா இருப்பனா தல? கண்டிப்பா கொடுத்துடரேன்... ஆனா ” இனி டுட்டி டைம்ல தூங்க மாட்டேன். இனி அவார்டு வாங்க மாட்டேன் “ அப்படினு ரமேசு 100 வாட்டி எழுதி காட்டனும்.

கருடன் said...

என்னது நானு யாரா? கூறியது...

//சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுப்பா! வெங்கட்டுக்கு போட்டியா?//

ஹலோ... யாருப்பா அது??? ஒரு வானத்துல ஒரு சூரியந்தான்..

(அறிவியல் பேச தடை..)

கருடன் said...

Chitra
//நாங்க மாமூல் கரீக்டா கொடுத்துருவோம்ல..... யாருக்கு என்று சொல்லமாட்டோம்ல....//

மேடம்.. இந்த மாசம் இன்னும் அமொண்ட் வரல...

கருடன் said...

Mohamed Faaique கூறியது...
//சிங்கப்பூர்'ல இருந்த அவார்டை சர்ஜாவிலுள்ள டெரர் எப்படி ஆட்டைய போட்டார்..//

போலீஸு இன்னுமா உன்ன இந்த உலகம் இப்படி நம்புது??

கருடன் said...

@ஜய்
//அதுதான்..பல கெட்டப்புல, பல பிளாக்ல போய் அடிவாங்குதா இந்த டவுசரு..ச்சே..இந்த டெர்ரரு..//

தல உங்க ப்ளக்ல கூட இரண்டு அவார்டு பாத்த ஞபகம்....

கருடன் said...

மொக்கா போட்டு அவார்டு வாங்கினவங்களுக்கு ஒரு கேள்வி

அவார்ட நீங்க எடுக்காரிங்களா இல்லா நான் எடுக்கவா???

சண்டையா? சமாதானமா? Count down starts....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நீங்க சொல்லி கேக்காமா இருப்பனா தல? கண்டிப்பா கொடுத்துடரேன்... ஆனா ” இனி டுட்டி டைம்ல தூங்க மாட்டேன். இனி அவார்டு வாங்க மாட்டேன் “ அப்படினு ரமேசு 100 வாட்டி எழுதி காட்டனும்.//

ஸ்கூல்ல இம்போசிசன் எழுதி எழுதி உனக்கு அந்த புத்தி போகலியே...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்ல பயனுள்ள இடுகை!
கருத்துள்ள இடுகை!
உபயோகமான இடுகை!
(எப்படிலாம் கமெண்ட்
குடுக்க வேண்டியிருக்கு???!!!)

சுசி said...

:))

அருண் பிரசாத் said...

@ Terror

எல்லாருக்கும் பதில் சொல்லியாச்சா?

அருண் பிரசாத் said...

@ டெரர்
சரி, கவுண் டவுன் முடிஞ்ச பின்னாடி சொல்லு, ஒவ்வொரு பிளாக்கா போய் அவார்டை ஆட்டய போட்டு வந்து அதை பத்தி தினமும் ஒரு பதிவு போடுவோம்

அருண் பிரசாத் said...

முதல்ல ஜெய் பிளாக்தான்

பயபுள்ள இவ்வளோ சொல்லியும் அவார்ட்டை வெச்சி இருக்குது, இது கூட ஏகப்பட்ட விட்ஜெட்வேற, கூட இண்ட்லி 2 ஓட்டு பொட்டி.

தூக்குறோம், ரமணா மாதிரி டாப் 10 ல முதல் ஆளை தூக்கறோம்

கருடன் said...

50

கருடன் said...

@அருண்

//தூக்குறோம், ரமணா மாதிரி டாப் 10 ல முதல் ஆளை தூக்கறோம்//

இனி பயம் வரணும்.. மொக்க போட்டு அவார்ட் வாங்கற எல்லாருக்கும் பயம் வரணும்.. அந்நியன் அவதரித்து விட்டான்....

(சரி சரி ஆட்டம் முடிஞ்சி போச்சி நீ உன் ப்ளாக்ல எடுத்த அவார்ட் திரும்ப வச்சிக்கோ)

justin said...

sathiyama na illa

kalavani police said...

nan Illa

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹாய் அருண்,
தொலஞ்சு போன அவரது அவார்ட் சீக்கிரம் கிடச்சா...
உங்களுக்கு ஒரு மொட்டை போடுறதா வேண்டிக்குங்க..
எல்லாம் கிடைச்சிரும்.... (மீ எஸ்கேப்ப்ப்ப்ப்)

சரிங்க.. நீங்க சொன்ன சரிதான்.. இந்த குடுக்கல், வாங்கல் பிசினஸ்-ஏ வேணாம்..
விடுங்க.. :-))