Cricket Countdown....

Sunday, August 15, 2010

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

இந்தியர் அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

Happy Independence Day




PROUD  TO  BE  AN  INDIAN.
 









JAI HINDUSTAN

             JAI HIN JA
              JAI HIND JAI HI
                JAI HIND JAI H
              JAI HIND JAI HI
               JAI HIND JAI
               JAI HIND JAI
                 JAI HIND JAI
                 JAI HIND
                 JAI HIND J
                JAI HIND JAI H
              JAI HIND JAI HIN
             JAI HIND JAI HIN                                  JAI H
           JAI HIND JAI HIND J                               JAI HIND J
          JAI HIND JAI HIND JAI H                 J         JAI HIND J
     JAI HIND JAI HIND JAI HIND JAI              JA     JAI HIND JAI
    JAI HIND JAI HIND JAI HIND JAI HIND J        JA      JAI HIND
     JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIN
      JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND J JAI HIND JAI

       
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND  JAI HIND JAI
JAI HI JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIN        JAI HI
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND      JAI H
   JAI HIND JAI HIND
JAI HIND JAI HIND JAI HIND JAI        JAI
 
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIN        J
   
JAI HI JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI
    JAI H JAI HIND
JAI HIND JAI HIND JAI HIND J
           JAI HIND
JAI HIND JAI HIND JAI HIND
          JAI HIND JAI HIND JAI HIND JAI HIND
           JAI HIND JAI HIND JAI HIND JAI
           JAI HIND JAI HIND JAI HIND JAI
           JAI HIND JAI HIND JAI HIND J
           
JAI HIND JAI HIND JAI HIND
           JAI HIND JAI HIND JAI HIN
            JAI HIND JAI HIND JAI HI
             JAI HIND JAI HIND JA
             JAI HIND JAI HIND J
              JAI HIND JAI HIN
               JAI HIND JAI HIN
               JAI HIND JAI HI
                JAI HIND JAI H
                 JAI HIND JAI
                 JAI HIND JAI
                 JAI HIND JAI
                   JAI HIND
                   JAI HIN
                    JAI HI
                     JAI H
                      JAI


 

டிஸ்கி: இது எனக்கு மெயிலில் வந்தது. வாழ்த்தும் கூறியாச்சு, இந்த நல்ல Mail-ஐ உங்களுடன் பகிர்ந்தும் ஆச்சு.


110 comments:

Jey said...

நல்லாருக்கு.
எனது சுதந்திரதின வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Jey said...

ராமேஷ்வரத்தை கானோம்!!!:)

அருண் பிரசாத் said...

@ ஜெய்

முதல் மிட்டாய் உங்களுக்கு தான்

@ கே ஆர் பி

அண்ணே! இந்தியாவை வெறுக்கிறீங்களா? இந்தியாவை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தவர்களை வெறுக்கிறீங்களா?

Jey said...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
//PROUD TO BE AN INDIAN.//

i hate india ...///

Mr. senthil what exactly you mean to say?

Unknown said...

பொதுவாகவே நான் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன்...

Jey said...

//கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
பொதுவாகவே நான் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன்...//

வேரெந்த நாட்டு பிரஜையாக இருந்தால் பெருமைப்படுவீர்கள் செந்தில் சார்

அருண் பிரசாத் said...

@ கே ஆர் பி
பொதுவா சொன்னா எப்படி? எதுக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Madhavan Srinivasagopalan said...

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..
(உங்களை இன்று முதல் தொடர்கிறேன்..)

Unknown said...

நிறைய இருக்கு தம்பி... தேசியம் என்று நாம்தான் பேசுகிறோம்.. ஆனால் இன்றைக்கு ஐநூறு மாவட்டங்களில் நூற்றி ஐம்பது நக்சல்களின் கட்டுபாட்டில் இருக்கிறது.. தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை சாதரணமாக கையாள்வது... காஷ்மீர் மற்றும் தண்டகாரண்யா, தெலுங்கான யென விவாதிக்க ஏராளமான விசயங்கள் உண்டு..

நான் தமிழன் அவ்வளவுதான்... இந்தியன் அல்ல ...

அருண் பிரசாத் said...

ஆமாம் அண்ணா, நிறைய இருக்கிறது, இவை எல்லாம் இந்த அரசியல்வாதிகளால் வந்தது. அதற்காக இந்திய மண்ணை பழிக்க முடியாது.

தமிழ்நாடு மட்டும் யோக்கியமா? இங்கு பிரச்சினைகளே இல்லையா?

vinthaimanithan said...

இறையாண்மையின் பெயரால் இந்தியா இதுவரை செய்து முடித்த சாதனைகள்:
1) ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களின் பிணங்களின் மேல் நின்று தனது தெற்காசிய வல்லரசு அந்தஸ்தை நிலைநாட்டியது

2) காஷ்மீரிகளின் உரிமைப்போராட்டத்தை பாகிஸ்தான் பயங்கரவாதம் என்று கொச்சைப்படுத்தி அதன் குருதியாற்றில் 'ஒருமைப்பாட்டு'ப் பயிர் வளர்த்தது

3) சிங்களன் கற்றுக்கொடுத்த புதிய காமசூத்ராவைப் பரிசோதித்துப் பார்க்க மணிப்பூரையும் நாகலாந்தையும் களமாக்கியது
4) தம் நிலமே தம் கடவுள் என்றிருந்த தண்டகாரண்யப் பழங்குடி மக்களை விரட்டிப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பங்குவைத்தது

இந்தப் பட்டியலில் இருக்கும் எதனையும் ஒரு தனிப்பட்ட அரசோ, கட்சியோ செய்து முடித்ததல்ல! கூட்டாய்ச் செய்த அயோக்கியத்தனம்! வல்லரசுத் திமிர்!!

மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு இருவேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லை! கோவணத்தை உருவி தேசியச்சாயம் பூச மானமுள்ள தமிழன் தயாரில்லை.

இன்னும் புரியவில்லையா?

எனில் நீங்கள் துவங்கலாம்... அடித்தொண்டையில் இருந்து..

"வந்தே ஏமாத்துறம்"

Jey said...

//கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
நிறைய இருக்கு தம்பி... தேசியம் என்று நாம்தான் பேசுகிறோம்.. ஆனால் இன்றைக்கு ஐநூறு மாவட்டங்களில் நூற்றி ஐம்பது நக்சல்களின் கட்டுபாட்டில் இருக்கிறது.. தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை சாதரணமாக கையாள்வது... காஷ்மீர் மற்றும் தண்டகாரண்யா, தெலுங்கான யென விவாதிக்க ஏராளமான விசயங்கள் உண்டு..

நான் தமிழன் அவ்வளவுதான்... இந்தியன் அல்ல ...///

தமிழ்நாட்லமாடும்தான் அரசியலிலிருந்து, சட்டம் ஒழுங்கு, காவல், சமதர்ம சமாதானம்னு எல்லாம் சரியா இருக்கு அதனால தமிழன்னு சொல்லிக்கலாம்... நாளைக்கு இதுல மாற்று எண்ணம் வந்தா தமிழன்னு சொல்லிக்கிரதுலயும் வெக்கப்பட்டுகிட்டு..." ihate tamil naadu" அப்படின்னு ஒத்த வரில சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம்.

அருண் பிரசாத் said...

@ Madhavan

வ்ருக வருக. நன்றி சார்.

Unknown said...

தம்பி தமிழ்நாடு யோக்கியமா/ இல்லையா ? என்ற கருத்துக்கு நான் வரவில்லை...
நான் தமிழன்...

தமிழன் மட்டும் யோக்கியமா என்று நீங்கள் கேட்பீர்கள்..

நான் யோக்யமானவன்.. மற்றவர்களைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை ...

Unknown said...

விந்தை மனிதன் சரியாக சொல்லியிருக்கிறார்..

vinthaimanithan said...

காவிரி கர்நாடகாவுக்கு! முல்லைப் பெரியாறு மலையாளிக்கு! பாலாறு தெலுங்கருக்கு! பாழாய்ப்போன தமிழனுக்கு???

தேசியம் பேசும் நண்பர்கள யோசிக்கவும்... கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை...

அருண் பிரசாத் said...

அண்ணே, உங்களை குறை கூறவில்லை. இந்தியாவில் நடக்கும் பெரும்பான்மையான தவறுகள் தமிழ்நாட்டிலும் நடக்குது. நீங்க தமிழன்னு ஏத்துக்கறப்போ! இந்தியன்னு ஏன் ஏத்துக்க மறுக்கிறீர்கள்

Unknown said...

தம்பி நீங்க நிறைய படிக்கணும்.. பாரதிதாசன் சொன்னது படி" விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை "

அருண் பிரசாத் said...

@ விந்தைமனிதன்

நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. ஆனால் இவையாவும் மோசமான அரசியல்வாதிகளால் ஏற்பட்டது. நாம் அரசியல்வாதிகளை வெறுக்க வேண்டும். நாட்டை அல்ல

vinthaimanithan said...

அடிப்படையிலேயே இந்திய தேசியத்திலிருக்கும் ஓட்டை உடைசல்களை முழுதும் விவரிக்கப் பின்னூட்டம் போதாது. முதலில் தேசிய இனம் என்றால் என்ன? தேசியம் என்பதன் பொருள் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் விவாதம்( அல்ல!கருத்துப் பரிமாற்றம்) தொடரலாம்... வேறொரு தளத்தில்!

ஏன் தேவை தமிழ்த் தேசியம்? ஏன் நாங்கள் காஷ்மீரிகளின் தேசிய உரிமைப்போரையும், வடகிழக்கு மாகாணங்களின் உரிமைப்போரையும் ஆதரிக்கிறோம்? ஏன் நாங்கள் உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிக்கிறோம்?

"உலகின் எந்த மூலையில் அநீதி இழைக்கப்பட்டாலும் உமது ரத்தம் கொதித்தெழுந்தால்... நீயும் நானும் தோழர்களே!"
- சே குவேரா

Unknown said...

//ஊருக்கு நல்லது சொல்வேன்! எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்!! சீருகெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்!!!//



இது உண்மையெனில் நீங்கள் இன்னும் தெளிவாக வேண்டும்...

vinthaimanithan said...

//நீங்க தமிழன்னு ஏத்துக்கறப்போ! இந்தியன்னு ஏன் ஏத்துக்க மறுக்கிறீர்கள் //

இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் ஒவ்வொரு இதயத்தையும் பொதுவாய்ப் பிணைக்கும் நூலிழை எது என்று கூருங்களேன்! வெறுமனே நாட்டுப்பற்று என்று சொல்லாதீர்கள்!

கருடன் said...

செந்தில்
//தம்பி நீங்க நிறைய படிக்கணும்.. பாரதிதாசன் சொன்னது படி" விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை //

வாழ்த்துகள் செந்தில் சார்... அனானி பெயரில் வரும் மக்களுக்கு இடையில் மனதில் பட்டதை சொல்லும் ஒருவர்.. நானும் உங்கள் விவாதத்தில் கலந்து கொள்ளலாமா?

Jey said...

//விந்தைமனிதன் சொன்னது…
காவிரி கர்நாடகாவுக்கு! முல்லைப் பெரியாறு மலையாளிக்கு! பாலாறு தெலுங்கருக்கு! பாழாய்ப்போன தமிழனுக்கு???

தேசியம் பேசும் நண்பர்கள யோசிக்கவும்... கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை...///

எல்லம் சரி சார், தமிழ் நாட்டை தனியா பிரிச்சிரலாமா... அப்ப நீங்க சொல்ற பிரச்சினையெல்லாம் தீர்ந்துருமா சார்....

கருடன் said...

விந்தை மனிதன்
//அடிப்படையிலேயே இந்திய தேசியத்திலிருக்கும் ஓட்டை உடைசல்களை முழுதும் விவரிக்கப் பின்னூட்டம் போதாது.//

நண்பரே.. இந்திய தேசம் என்பது நாம்தானே?? அதில் உள்ள ஓட்டை உடைசல்களை களைய வேண்டியது நாம்தானே... ஆடை விட்டுவிட்டு குறை கூறினால் எப்படி?

vinthaimanithan said...

வாங்க டெர்ரர்! பேசலாம்!

இந்திய- பாகிஸ்தானுக்கு இடையில் சிந்து நதிநீர்ப் பங்கீட்டில் ஏதேனும் பிரச்சினை வந்திருக்கிறதா?

இந்திய- பங்களாதேஷ் இடையில் கங்கை- பிரம்மபுத்திராப் பங்கீட்டு பிரச்சினை வந்திருக்கிறதா? ஏன்?

vinthaimanithan said...

//இந்திய தேசம் என்பது நாம்தானே??

முதல் கேள்வியைப் படித்துவிட்டு வரவும்

Unknown said...

//எல்லம் சரி சார், தமிழ் நாட்டை தனியா பிரிச்சிரலாமா... அப்ப நீங்க சொல்ற பிரச்சினையெல்லாம் தீர்ந்துருமா சார்....//

தம்பி.. நீங்கள் விரும்பினாலும்.. விரும்பாவிட்டாலும்.. இந்தியா இப்படியே பயணம் செய்தால் ஒருநாள் துண்டாக கண்டிப்பாக சிதறும்.. அனேகமாக இன்னும் பத்து வருடங்களில்

கருடன் said...

@செந்தில் & விந்தை

இன்று நீங்கள் இருவரும் இப்படி அறிவுபூர்வமாக விவாதிக்க கல்வி கொடுத்தது நம் தேசம் அல்லவா?

Jey said...

//
"உலகின் எந்த மூலையில் அநீதி இழைக்கப்பட்டாலும் உமது ரத்தம் கொதித்தெழுந்தால்... நீயும் நானும் தோழர்களே!"
- சே குவேரா//

100% சரிதான் சார், இங்க கொத்தித்துழுரதுன்னா என்ன சார், கைல ஆயுதம் ஏந்துரதா?...

அடிப்படை விழிப்புணர்வு ஏற்படித்தி ஒழுங்கா ஓட்டை எப்படி பிரயோகப்படுத்தனும்னு தெரிஞ்சா இங்க எல்லாம் சரியாகும் சார்...

Unknown said...

//இன்று நீங்கள் இருவரும் இப்படி அறிவுபூர்வமாக விவாதிக்க கல்வி கொடுத்தது நம் தேசம் அல்லவா?//

நான் கல்வி கற்றவன் அல்லது அறிவுப்பூர்வமானவனாக இருந்தால் இந்நேரம் டாலர்களாக பாத்திருப்பேன்...

vinthaimanithan said...

நான் கேட்ட கேள்விக்கு இன்னும் யாரும் பதிலளிக்க வில்லை... தேசியம் பற்றிய விவாதத்தை அறிவை விசாலமாக்கும் விஷயமாக்க விரும்புவோர் தோழர் தமிழ்சசியின் இந்தப் பதிவைப் படித்தல் நலம்.
http://blog.tamilsasi.com/2009/04/identity-crisis-tamilnadu-tamils-india.html

அருண் பிரசாத் said...

சரி இவ்வளவு கேள்வி கேட்கும் நீங்கள் எத்தனை அடி முன்வைத்து இருக்கிறீர்கள், இந்தியாவை மாற்ற?

Jey said...

//கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
//எல்லம் சரி சார், தமிழ் நாட்டை தனியா பிரிச்சிரலாமா... அப்ப நீங்க சொல்ற பிரச்சினையெல்லாம் தீர்ந்துருமா சார்....//

தம்பி.. நீங்கள் விரும்பினாலும்.. விரும்பாவிட்டாலும்.. இந்தியா இப்படியே பயணம் செய்தால் ஒருநாள் துண்டாக கண்டிப்பாக சிதறும்.. அனேகமாக இன்னும் பத்து வருடங்களில்///

பிரிட்டிஷ்காரங்க இந்தியாவுக்கு சுதந்திரம் குடுக்கும் போது இப்படித்தான் சொல்லிட்டு போனாங்க....

இப்ப, சைனாவுக்காக பரிந்து பேசுல கம்மூனிஸ்ட் பேசுராங்க... அவ்வளவுதான் வித்தியாசம்...

Unknown said...

தம்பிகளா தூக்கம் வருது.. மீண்டும் சந்திப்போம்

vinthaimanithan said...

அண்ணே செந்திலண்ணே... முடியல.. தன்னோட கருத்துக்களை விவாதத்துக்குள்ளாக்க விரும்புறவங்க கிட்டத் தான் விவாதிக்க முடியும்... நாம காத்துல வாள் வீசிகிட்டு இருக்கோம்னு நெனக்கிறேன்

Jey said...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நான் கல்வி கற்றவன் அல்லது அறிவுப்பூர்வமானவனாக இருந்தால் இந்நேரம் டாலர்களாக பாத்திருப்பேன்...///

பணம் சம்பாதிக்கும் வித்தைக்கும், அறிவுக்கும் , கற்ற கல்விக்கும் தொடர்பு இல்லை என்பது என் கருத்து...., பணம் சம்பாதிக்க கோனல் புத்திகளும், மொள்ளமாரித்தனமும் இருந்தால் போதுமானது என்பதே என் கருத்து.

vinthaimanithan said...

அய்யா.. மொதல்ல யாராவது தேசியம் அப்டீங்குற கருத்தாக்கத்தை முழுசா சொல்லுங்களேன்... அப்றமா பேசலாம்

vinthaimanithan said...

செந்திலண்ணே போயிடாதீங்க... நண்பர்கள் நம்மைக் கேலி பேசுறது முக்கியமில்ல.. நம்மளோட கருத்துக்களில் இருக்கும் பலவீனம் அப்டீன்னு சட்டுன்னு சொல்லிடுவாங்க...

மக்கா தேசியம் என்பதன் வரையறை என்னன்னு யாருக்காவது தெரியுமா? சும்மா அப்பன்,பாட்டன் சொல்லிட்டாங்கன்னு அப்படியே பேசப்படாது

Jey said...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
தம்பிகளா தூக்கம் வருது.. மீண்டும் சந்திப்போம்//

குட் நைட் அண்ணே.

கருடன் said...

செந்தில்
//தம்பிகளா தூக்கம் வருது.. மீண்டும் சந்திப்போம்//

கண்டிப்பாக ஐய!! இடையில் வந்ததால் உங்கள் விவாதம் சரியாய் புரியவில்லை... சமயம் கிடைக்கும்போது மீண்டும் சந்தித்து கருத்துகளை பரிமாறி கொள்ளலாம்....

Jey said...

விந்தைமனிதன் சொன்னது…
அய்யா.. மொதல்ல யாராவது தேசியம் அப்டீங்குற கருத்தாக்கத்தை முழுசா சொல்லுங்களேன்... அப்றமா பேசலாம்//

ஏன் சார் உங்களுக்கு தெரியாதா?.

அருண் பிரசாத் said...

//தம்பிகளா தூக்கம் வருது.. மீண்டும் சந்திப்போம்//

கண்டிப்பா மீண்டும் சந்திக்கனும், நிறைய விவாதிக்க வேண்டியது, தெரிஞ்சிக்கவேண்டியது இருக்குன்னே

குட் நைட்!

அருண் பிரசாத் said...

@ விந்தைமனிதன்

தேசியம்னா என்ன சொல்லனும்னு எதிர் பார்குறீங்க நண்பா?

கருடன் said...

@விந்தை
//செந்திலண்ணே போயிடாதீங்க... நண்பர்கள் நம்மைக் கேலி பேசுறது முக்கியமில்ல.. நம்மளோட கருத்துக்களில் இருக்கும் பலவீனம் அப்டீன்னு சட்டுன்னு சொல்லிடுவாங்க...//

ஆரோக்கியமாக விவாதிக்கும்போது இப்படி அநாகரிகமாக பேச மாட்டோம் நண்பரே.... ஒரு வேலை அனானி பெயரில் வந்து இருந்தால் சொல்லி இருப்போம்..

vinthaimanithan said...

//ஏன் சார் உங்களுக்கு தெரியாதா?. //
சும்மா சும்மா எதிர்கேள்வி கேக்காம முதல்ல பதில சொல்லிட்டு அப்புறமா எதிர்க்கேள்வி கேக்குறதுதான் நல்ல விவாதத்தின் அம்சம். அதை ஃபாலோ பண்ணலாமே நண்பா! அதை விட்டுட்டு டாபிக்குக்கு சம்பந்தமே இல்லாம கம்யூனிஸ்ட்டுக்களைப் பத்தி பேசுறது, உங்களுகு தெரியாதான்னு கேக்குறது இதெல்லாம் அரட்டைக்கச்சேரி செய்யத்தான் பயன்படும்

மன்னிக்கவும் நண்பா.. புண்படுத்துவது நோக்கமல்ல. விவாதம் ஆரோக்கியமாகத் தொடரணும்னு ஆசைப்படுறேன்

அருண் பிரசாத் said...

நாட்டு பற்று வேறு அரசியல் வேறு. ஆட்சி கவிழ்ந்தால் கண்டுக்கமாட்டோம், ஆனா கார்கில்னு வந்தா ஒன்னாகிடுவோம் அதுதான் இந்தியர்கள்

vinthaimanithan said...

1) யாராவது நான் கொடுத்த தோழர் தமிழ்சசியோட சுட்டியைப் படிச்சீங்களா?

2) நம்ம ஸ்கூல் அட்மிஷன்ல இருந்து சுடுகாட்டுல டெத் சர்ட்டிஃபிகேட் வாங்குறவரைக்கும் எல்லாத்துலயும் தேசிய இனம்(Nationality)அப்டீன்னு ஒரு காலம் இருக்குமே! அது என்ன தேசிய இனம்னு தெரியுமா?

3) தேசிய இனம் அப்டீங்குற வார்த்தைக்கு அரசியல் அமைப்புச்சட்டம் கொடுக்கும் விளக்கம் தெரியுமா?

4) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் வரி எப்படித் துவங்குதுன்னு தெரியுமா?

எல்லாத்துக்கும் " உங்களுக்குத் தெரியாதா?"ன்னு கேக்காம விடைகளைத் தேடிப்பாருங்களேன்! தேடல் மட்டுமே அறிவை விசாலமாக்கும்

கருடன் said...

@விந்தை
நண்பரே நீங்கள் 1000 காரணம் கூறினாலும் நீங்கள் பிறந்து வளர்ந்த நாட்டை வெறுப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை....

Jey said...

விந்தைமனிதன் சொன்னது…
//ஏன் சார் உங்களுக்கு தெரியாதா?. //
சும்மா சும்மா எதிர்கேள்வி கேக்காம முதல்ல பதில சொல்லிட்டு அப்புறமா எதிர்க்கேள்வி கேக்குறதுதான் நல்ல விவாதத்தின் அம்சம். அதை ஃபாலோ பண்ணலாமே நண்பா! அதை விட்டுட்டு டாபிக்குக்கு சம்பந்தமே இல்லாம கம்யூனிஸ்ட்டுக்களைப் பத்தி பேசுறது, உங்களுகு தெரியாதான்னு கேக்குறது இதெல்லாம் அரட்டைக்கச்சேரி செய்யத்தான் பயன்படும்

மன்னிக்கவும் நண்பா.. புண்படுத்துவது நோக்கமல்ல. விவாதம் ஆரோக்கியமாகத் தொடரணும்னு ஆசைப்படுறேன்//

உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன்..., இதில் புண்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் நீங்கள் கொண்டு செல்லும் விவாதத்தின் பாதையில் என்ன தீர்வு வைத்துள்ளீர்கள்..., தேசியம் என்பது என்ன என்று தெரிந்து கொள்வதற்கு உனிவெர்சிடியில் பட்டம் வாங்க வேண்டுமா... அவ்வளவு சிக்கலான, கணித ஃபார்முலவோடையா இருக்கு....

vinthaimanithan said...

உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென்பது வேறு! உண்மைகள் கசக்கத்தான் செய்யும்! நான் உங்களிடம் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை.... நீங்களே தேடுங்கள்... உண்மைகள் எப்போதும் நமக்குப் பிடித்தமானவையாக மட்டும்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை நண்பரே!

அருண் பிரசாத் said...

நான் படித்து, கண்ட இந்தியா இன்றுவரை எனக்கு பிடித்தமானதாக தான் இருக்கிறது. மாற்று கருத்து கூறும் புத்தகனகள் இருந்தால் சொல்லுங்கள் அதையும் படித்து பார்கிறேன்

கருடன் said...

@விந்தை
நீங்கள் கூறும் பல காரணங்கள் (அரசியல் சட்டம், தேசிய இனம்...) எல்லாம் மக்கள் உண்டாக்கியது... நீங்களும் அந்த மக்களில் ஒருவர்... நமது மூதாதயர்கள் செய்த தவறை சுட்டு எரிக்கும் தீயாக... அல்லது அந்த தீயை உண்டாக்கும் ஒரு தீ குச்சியாக நீங்கள் இருந்தால் பெருமையுடன் உங்களை வணங்கி உங்களை பின் தொடரலாம்... அதை விட்டுவிட்டு இந்த நாட்டை வெறுத்து என்ன பயன்?

vinthaimanithan said...

அருண் கார்கில் பற்றிக் குறிப்பிட்டதால் கேட்கிறேன்! காஷ்மீரிகளின் போராட்ட வரலாறும், இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு வல்லூறுகளும் அந்த தேசத்தைப் பங்கு போட்டுக் கொண்டதும், நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் நடந்த ஒப்பந்தமும், முதலாவது இந்தோ-பாக் போரின் காரணத்தையும் கொஞ்சம் தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்களேன்! பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்து பங்களாதேஷைப் பிரித்த காரணம் என்ன? பங்களாதேசியர்களின் உணர்வுப்பூர்வமான போராட்டத்தை நாங்கள் எப்படி ஆதரித்தோமோ அதே நியாயங்களை ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் பொருத்திப் பார்க்கிறோம்

அருண் பிரசாத் said...

ஒரு கார்கில் யுத்ததிலும், ஒரு குஜராத் பூகம்பத்திலும், ஒரு இந்தியா பாகிஸ்தான் விளையாட்டிலும் வருமே ஒரு உன்ர்வு அதைதான் நான் இந்தியன் என்கிறேன்.

vinthaimanithan said...

//நான் படித்து, கண்ட இந்தியா இன்றுவரை எனக்கு பிடித்தமானதாக தான் இருக்கிறது. மாற்று கருத்து கூறும் புத்தகனகள் இருந்தால் சொல்லுங்கள் அதையும் படித்து பார்கிறேன் //

அருண்! உங்களை வரவேற்கிறேன்! பயணத்தின் முதல்படிக்கு... மிகப்பெரிய பட்டியலே இருக்கின்றது... முதலில் நீங்கள் இந்தியாவில் நடக்கும் பிரிவினைப்ப் போராட்டங்களின் நியாயம் என்ன என்று ஆராய்ந்து பாருங்களேன்... மெல்ல மெல்ல புரிபட ஆரம்பிக்கும்

கருடன் said...

//உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென்பது வேறு! உண்மைகள் கசக்கத்தான் செய்யும்! நான் உங்களிடம் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை.... நீங்களே தேடுங்கள்... உண்மைகள் எப்போதும் நமக்குப் பிடித்தமானவையாக மட்டும்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை நண்பரே!//

கசப்பாக இருப்பதால் மருந்தை வெறுப்பவர்கள் இல்லை நாங்கள். உலகில் எந்த நாட்டின் வரலாற்று பக்கங்களை புரட்டி பார்த்தாலும் இப்படி பட்ட சில உண்மைகள் இருக்கத்தான் செய்யும்... அதற்காக உலகில் உள்ளவர் எல்லாம் அவர் அவர் நாட்டை வெறுக்கிறார்கள?

Jey said...

விந்தைமனிதன் சொன்னது…
அருண் கார்கில் பற்றிக் குறிப்பிட்டதால் கேட்கிறேன்! காஷ்மீரிகளின் போராட்ட வரலாறும், இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு வல்லூறுகளும் அந்த தேசத்தைப் பங்கு போட்டுக் கொண்டதும், நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் நடந்த ஒப்பந்தமும், முதலாவது இந்தோ-பாக் போரின் காரணத்தையும் கொஞ்சம் தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்களேன்! பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்து பங்களாதேஷைப் பிரித்த காரணம் என்ன? பங்களாதேசியர்களின் உணர்வுப்பூர்வமான போராட்டத்தை நாங்கள் எப்படி ஆதரித்தோமோ அதே நியாயங்களை ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் பொருத்திப் பார்க்கிறோம்//

உஙக்ளின் பார்வையும் கோனமும், விபரீதமானது, அதனால், பிரச்சினைகளை மட்டும்தான் உருவாக்க முடியும், தீர்வு கிடக்காது. பாகிஸ்தானை பிரிக்க சம்மதித்தது, அடிப்படை தவறு... அத்தான் அதற்கடுத்த பங்களதேஷ் பிரச்சினைக்கும் காரணம்...

அருண் பிரசாத் said...

சரி, நீங்க என்னதான் சொல்ல வரீங்க? நீங்க என்ன செஞ்சீங்க?

vinthaimanithan said...

//ஒரு கார்கில் யுத்ததிலும், ஒரு குஜராத் பூகம்பத்திலும், ஒரு இந்தியா பாகிஸ்தான் விளையாட்டிலும் வருமே ஒரு உன்ர்வு அதைதான் நான் இந்தியன் என்கிறேன். // இதைத்தான் நண்பரே நான் விமர்சிக்கிறேன்....

கார்கிலைப் பற்றிப் பேசவேண்டுமானால் நீங்கல் பின்னோக்கி முதல் இந்தொ-பாக் போரின் அடிப்படை பற்றி ஆராயவேண்டி வரும்... அதற்கும் சற்று முன்னால் சென்று ஆகஸ்டு 14,15-ல் சுதந்திரம் பெற்றது இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல... 500க்கும் மேற்பட்ட குறுந்தேசங்களும்தான் என்பதை அறியவேண்டி வரும்... இன்னும் முன்னால் போனால் இந்தியா என்ற ஒற்றைக்கட்டமைப்பு எப்போது யாரால் கட்டமைக்கப் பட்டது ஏன் அவ்வாறு கட்டமைக்கப் பட்டது, அதற்கு முன் என்னவாக இருந்தது என்று பார்க்க வேண்டிவரும்... இதற்கெல்லாம் நீங்கள் தயாரா?

vinthaimanithan said...

//பாகிஸ்தானை பிரிக்க சம்மதித்தது, // யார் சம்மதித்தது, ஏன் சம்மதித்தார்கள் என்று தெரியுமா நண்பர்களே? பிரிவினையை அவர்களாகக் கேட்கவில்லை என்பது தெரியுமா? முன்னாள் பா.ஜ.க தலைவர் ஜஸ்வந்த் சிங் சமீபத்தில் எழுதிய புத்தகத்தை( இதனோடு சிற்சில முரண்பாடுகள் எங்களுக்கு இருந்தாலும்கூட) படித்துப் பாருங்களேன்

அருண் பிரசாத் said...

எல்லாம் சரி, இவ்வளோ குறை சொல்லும் நீங்கள், அதை போக்க என்ன செய்தீர்கள்

Jey said...

விந்தைமனிதன் சொன்னது…
//பாகிஸ்தானை பிரிக்க சம்மதித்தது, // யார் சம்மதித்தது, ஏன் சம்மதித்தார்கள் என்று தெரியுமா நண்பர்களே? பிரிவினையை அவர்களாகக் கேட்கவில்லை என்பது தெரியுமா? முன்னாள் பா.ஜ.க தலைவர் ஜஸ்வந்த் சிங் சமீபத்தில் எழுதிய புத்தகத்தை( இதனோடு சிற்சில முரண்பாடுகள் எங்களுக்கு இருந்தாலும்கூட) படித்துப் பாருங்களேன்//

ஹலோ சார், உங்க மனசுல நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கிரீங்க, உங்கலுக்கு மட்டும்தா வரலாரு தெரியும், மததவங்களுக்கு தெரியாது... அப்படியா..., அவங்க கேட்டாங்க, ஆமா, கேட்டது மதரீதியா, குடுத்திருக்கக்கூடாது... அதுக்கு எதிர்ப்பும் இருந்தது..., இப்ப இங்க இண்டியால இருக்குரவங்க மத ரீதியா தனிநாடு கேட்டா நீங்க அதுக்கும் ஆதரவு குடுப்பீங்க சார்.

vinthaimanithan said...

எதைப் போக்க?

Jey said...

நீங்க சொல்றதுக்கும், இந்தியாவ வெறுக்குறதுக்கும் என்ன சம்பந்தம்..., பாகிஸ்தானை பிரிக்கும்போது , நீங்க அங்க போயிருந்த, இப்ப சந்தோஷமா பாகிஸ்தானை லவ் பன்னிட்டிருப்பீங்களா சார்.

Jey said...

நீங்க சொல்ற குறகள் இல்லாத ஒரு நாடு உன்னை சொல்லுங்க சார்.

கருடன் said...

@விந்தை
ஐய!! தவறாக நினைக்க வேண்டாம். வரலாறு, அதற்க்கு முந்தைய வரலாறு இப்படியே முடிந்த விஷயங்களை பேசி என்ன பயன்? நிகழ் காலத்தில் வாழும் நீங்கள் என்ன செய்திர்கள்? நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பர்க்கிரிர்கள்? யாரோ சில அரசியல் தலைவர் செய்த பிழைக்கு என் நாட்டை வெறுக்கிரிர்?

அருண் பிரசாத் said...

நாம் இந்த அளவுக்கு சுதந்திரமா பேசுறதுக்கு காரணமே நம்ம நாட்டுதான் பாஸ். இப்படி நீங்க ஆப்கானிஸ்தான்ல பேச முடியுமா.

vinthaimanithan said...

//அவங்க கேட்டாங்க, ஆமா, கேட்டது மதரீதியா// இல்ல சார்,பிரிச்சி கொடுக்கணும்னு விரும்புனது யார்னு ஜஸ்வந்த் சிங் தெளிவாவே சொல்லியிருக்காரு... படிச்சிப்பாருங்க..

//உங்கலுக்கு மட்டும்தா வரலாரு தெரியும், மததவங்களுக்கு தெரியாது... அப்படியா...,// வரலாறுங்கிறது பாடப்புத்தகத்தைத் தாண்டி இருக்கு சார்..

//தனிநாடு கேட்டா நீங்க அதுக்கும் ஆதரவு குடுப்பீங்க சார். //

கண்டிப்பா. அந்த அடிப்படையில்தானே வடகிழக்கு மாகாணங்களின் போராட்டத்தையும், கஷ்மீர்ப் போராட்டத்தையும் அஸ்ஸாமிகளின் போராட்டத்தையும் நாங்க ஆதரிக்கிறோம்...

ஆனா ஒரு சின்ன வித்தியாசம்... மத அடிப்படையில் இல்ல... அவங்களோட இன,மொழி,கலாச்சார மற்றும் போராட்ட நியாயங்களின் அடிப்படையில. "அந்த நியாயங்கள் என்னென்ன, அதுல என்ன தப்பு இருக்கு"ன்னு நீங்க விரிவா பதில் சொன்னா நானும் பேச வழி பிறக்கும். என்னோட கருத்துக்களை எடுத்து வைக்கலாம். அதை விட்டுட்டு கிரிக்கெட்டும், கார்கில் போரும்தான் தேசபக்தின்னா ஸாரி சார்... இந்த ஆட்டத்துக்கு நான் வரல

அருண் பிரசாத் said...

குழந்தைகிட்டயும் அம்மாகிட்டயோ குறை இருக்குது என்பதற்க்காக அவர்களை வெறுக்க முடியுமா? நம்ம நாட்ட்லையும் அப்படி பாருங்க

கருடன் said...

நீங்கள் சிறு பிள்ளையாக இருந்த சமயத்தில் உங்கள் தாய் அடித்தல் என்று இன்றும் உங்கள் தாயை வெருப்பிர்கள? இன்று நீங்கள் குறை கூறும் அதே இந்திய அரசியல் சட்டம்தான் உங்களக்கும் இந்த நாட்டை பற்றி விமர்சிக்கும் சுகந்திரத்தை கொடுத்து இருக்கிறது... உங்களுக்கு எழுத்து உரிமை , பேச்சியுருமை கொடுத்து இருக்கிறது...

அருண் பிரசாத் said...

அப்போ இந்தியாவை கூறு போட்டு விக்கனும்னு சொல்லுறீங்க

Jey said...

//கண்டிப்பா. அந்த அடிப்படையில்தானே வடகிழக்கு மாகாணங்களின் போராட்டத்தையும், கஷ்மீர்ப் போராட்டத்தையும் அஸ்ஸாமிகளின் போராட்டத்தையும் நாங்க ஆதரிக்கிறோம்...

ஆனா ஒரு சின்ன வித்தியாசம்... மத அடிப்படையில் இல்ல... அவங்களோட இன,மொழி,கலாச்சார மற்றும் போராட்ட நியாயங்களின் அடிப்படையில. "அந்த நியாயங்கள் என்னென்ன, அதுல என்ன தப்பு இருக்கு"ன்னு நீங்க விரிவா பதில் சொன்னா நானும் பேச வழி பிறக்கும். என்னோட கருத்துக்களை எடுத்து வைக்கலாம். அதை விட்டுட்டு கிரிக்கெட்டும், கார்கில் போரும்தான் தேசபக்தின்னா ஸாரி சார்... இந்த ஆட்டத்துக்கு நான் வரல//

அப்படியே , இனம் , மொழி , கலாசாரம் தாண்டி, சோவ்வொரு சாதிக்கும், அதுல இருக்கிற உட்பிரிவு சாதிகளுக்கும், தனித் தனியா நாட்டை பிரிச்சி குடுத்திருங்க சார், எல்லா பிரச்சினையும் தீர்ந்திடும்.

உதாரணத்துக்கு, இனம் வாரிய பிரிச்சி குடுக்குரீங்கன்னு வச்சிங்கங்க அப்புரம், அவங்களுக்குள்ள , உட்பிரில பிரச்சினை வந்தா திருப்பி ஒருவாட்டி போராடி அவங்களுக்கு தனியா பிரிச்சி கொடுக்கனும்.. உங்களுக்கு லாலமெல்லா வேலை ஓயாது பாருங்க.

கருடன் said...

//கண்டிப்பா. அந்த அடிப்படையில்தானே வடகிழக்கு மாகாணங்களின் போராட்டத்தையும், கஷ்மீர்ப் போராட்டத்தையும் அஸ்ஸாமிகளின் போராட்டத்தையும் நாங்க ஆதரிக்கிறோம்..//

இப்படி ஒரு ஒரு இடமா தனி நாடு பிரிச்சி கொடுத்த... நாளைக்கு ஒரு ஒரு தெருவும் தனி நாடு ஆகிடாதா? நாலு பேரு இருக்க விட்டுலே சண்டை வரும், பிரச்சனை வரும்... அதுக்காக குடும்பத்த பிரிக்கரம? அப்போ கோடிகணக்கான மக்கள் வாழற நாட்டுல பிரச்சனை வருது சொல்லி பிரிக்கறது, பிரிச்சி கொடுக்க சொல்றது என்ன நியாயம்?

அருண் பிரசாத் said...

கடைசியா வீட்டுக்கு வீடு ஒரு நாடாக மாத்தி, அடுத்தவன் வீட்டுக்கு போக விசா எடுக்க வேண்டியதுதான்

Jey said...

நீங்க இத கம்முனிஸம் இருக்கிற சைனால பேசிருக்கனும் சார், தின்னாமின் சதுகத்துல படுக்கப்போட்டு , புல்டோசர் ஏத்திக் கொன்னிருப்பாங்க, செத்ததுகூட 5 வருசம் கழிச்சிதான் ஊர் உலகத்துக்கு தெரியும்...

vinthaimanithan said...

அய்யா சாமி! இந்த விவாதத்துல புண்ணியம் இல்லன்னு நான் நினைக்கிறேன்.

ஆரம்பத்தில இருந்து நான் கேட்ட எந்தக் கேள்விக்குமே முறையான பதிலச் சொல்லாம சும்மா விதண்டாவாதம் பண்ணினா என்ன பேசுறது?

முதல்ல நான் இதுவரை எடுத்து வெச்ச பாயிண்ட்டுகளை சுருக்கமா தரேன். மொத்தமா யாராவது பதில் சொன்னா அப்புறம் கலந்துக்கிறேன் விவாதத்துல:
1) முதல்ல இந்தப் பதிவைப்படிங்க

http://blog.tamilsasi.com/2009/04/identity-crisis-tamilnadu-tamils-india.html

2) நம்ம ஸ்கூல் அட்மிஷன்ல இருந்து சுடுகாட்டுல டெத் சர்ட்டிஃபிகேட் வாங்குறவரைக்கும் எல்லாத்துலயும் தேசிய இனம்(Nationality)அப்டீன்னு ஒரு காலம் இருக்குமே! அது என்ன தேசிய இனம்னு தெரியுமா?

3) தேசிய இனம் அப்டீங்குற வார்த்தைக்கு அரசியல் அமைப்புச்சட்டம் கொடுக்கும் விளக்கம் தெரியுமா?

4) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் வரி எப்படித் துவங்குதுன்னு தெரியுமா?

5)காஷ்மீரிகளின் போராட்ட வரலாறும், இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு வல்லூறுகளும் அந்த தேசத்தைப் பங்கு போட்டுக் கொண்டதும், நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் நடந்த ஒப்பந்தமும் யாருக்குத் தெரியும்.. "உங்களுக்கு மட்டும்தான் வரலாறு தெரியுமா"ன்னு கேக்குறவங்களுக்கு இந்த வரலாறு தெரியுமா?

6)ஆகஸ்டு 14,15-ல் சுதந்திரம் பெற்றது இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல... 500க்கும் மேற்பட்ட குறுந்தேசங்களும்தான் என்பது தெரியுமா?

7)இந்தியா என்பது பல்தேசிய இனங்களின், பலவகை வாழ்வியல் பண்பாடுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு தானேயன்றி, ஒற்றைப்பரிமாணம் கொண்ட தேசமல்ல. நமது அரசியலமைப்புச்சட்டத்தின் முதல்வரி இப்படித்துவங்குகிறது: India, that is Bharath, shall be a Union of States.... இது தெரியுமா?

அருண் பிரசாத் said...

எங்க கேள்விக்கு நீங்க பதில் சொல்லலையே.

1. இந்த குறைகளுக்காக இந்தியாவை வெறுக்கலாமா?
2. நீங்க சொன்ன குறைகளை களைய நீங்க இதுவரை என்ன பண்ணீங்க?
3. நாட்டை பிரிப்பது நியாயமா?

Jey said...

why you hate india?. why you hate to be indian?. then what you want to be?.

இதுதான் அடிப்படை ஆரம்ப கேள்வி. இதுக்கு பதிலே சொல்லலை, அதப் படி இதப் படினு சொல்ரீங்க.
நீங்க கேட்ருக்கிற கேல்வியெல்லஅம். ஸ்கூல வரலரு புக் லயும், அதத்தாண்டி மத்தவங்க எழுதுன புக்லயும் இருக்கு சார், எங்க கிட்ட கேள்வி கேட்டா, அதுக்கு பதில் சொல்லத்தெதரியாதா?. சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சிக்கிரோமே.

vinthaimanithan said...

நன்றி நண்பர்களே! இங்கு இதற்கு மேலும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்கிறேன்! மீண்டும் சந்திப்போம்... என்றும் நட்புடன்!

கருடன் said...

சார் கேள்வி எல்லாம் நல்ல இருக்கு... இததான் நான் முதலே சொன்னேன்... உங்களுக்கு இந்த அறிவ கொடுத்த நாட்டை வெறுக்கற நீங்க இதை எல்லாம் சரி செய்ய என்ன செஞ்சிங்க? என் தாயை நான் நேசிக்க எனக்கு என் கொள்ளு பாட்டி, எள்ளு பாட்டி பெயர் தெரிஞ்சி இருக்கனுமா? நேத்து நடந்த விஷயம் இன்னைக்கு எதுக்கு?? நாளைக்கு வர போற இந்திய நீங்க மாத்துங்க..

Jey said...

///கண்டிப்பா. அந்த அடிப்படையில்தானே வடகிழக்கு மாகாணங்களின் போராட்டத்தையும், கஷ்மீர்ப் போராட்டத்தையும் அஸ்ஸாமிகளின் போராட்டத்தையும் நாங்க ஆதரிக்கிறோம்...///

இத ஆதரிக்கிரவங்களுக்கு எதிரா ராணுவத்த பயன்படுத்தி அழிக்கனும்னு சொல்ரவ்ங்கள நான் ஆதரிக்கிறேன் சார்.

அருண் பிரசாத் said...

நன்றி நண்பரே! மீண்டும் கண்டிப்பாய் சந்திப்போம் என உணர்கிறேன்.

Jey said...

குட் நைட் நண்பர்களே.

கருடன் said...

இந்திய பற்றி இவ்வளோ எதிர்மறையான கருத்து சொல்ற நீங்க இந்திய பத்தின நல்ல விஷயங்கள தேடி படிச்சி இருக்கீங்களா? நீங்க சொல்ற இவ்வளோ பிரச்சனை இருந்து இன்னைக்கு உலகமே மதிக்கற அளவு வளந்து நிக்கறத நினச்சி பெருமைபடுங்க சார்...

கருடன் said...

நன்றி நண்பரே!! மீண்டும் சந்திக்கலாம்.... ஜெய் ஹிந்த்...

அருண் பிரசாத் said...

ஒரு சுதந்திரதின வாழ்த்து சொன்னது தப்பாங்க. இதுக்கு இவ்வளோ போராட்டம்.

உண்மைதான் சும்மா கிடைக்காது சுதந்திரம்

ப்ரியமுடன் வசந்த் said...

/கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
//PROUD TO BE AN INDIAN.//

i hate india ...
//

if you feel unhappy please go out from india..

ப்ரியமுடன் வசந்த் said...

happy independence day...!

Unknown said...

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

செந்தில் அண்ணே,
பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர்
இந்நினை வகற்றாதீர்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நான் தமிழன் அவ்வளவுதான்... இந்தியன் அல்ல ...

///

வரவேற்க்கப்படவேண்டியது... ஆனால் வெட்க்கப் பட வேண்டியதும் கூட...

I'm an Indian said...

I think people should take responsibility for what India has become now, rather than hating it. Yes,India is corrupted now. Well, hope you were been a part of this India atleast 20 years. So you are also responsible for things happening in it. So rather than telling its false, admit your fault too.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

எனது சுதந்திரதின வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சௌந்தர் said...

அருண் பிரசாத் சொன்னது…
நாம் இந்த அளவுக்கு சுதந்திரமா பேசுறதுக்கு காரணமே நம்ம நாட்டுதான் பாஸ். இப்படி நீங்க ஆப்கானிஸ்தான்ல பேச முடியுமா.////


சரியான கேள்வி....அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

இந்தியா ஒற்றுமைய இருந்தால் தான் நாட்டிற்கு நல்லது கேட்பவர்களுக்கு எல்லாம் நாட்டை பிரித்து தர முடியாது....

Jey said...

97

Jey said...

99

அருண் பிரசாத் said...

@ ப்ரியமுடன் வசந்த்

நன்றி தல. நச் கமெண்ட்

@ கலாநேசன்

உண்மைதான்

@ வெறும்பய

அப்படி நினைக்குறதே தப்பு பாஸ்

அருண் பிரசாத் said...

நன்றி நரி

கரெக்ட் செளந்தர். கேட்பவருக்கெல்லாம் பிரித்து கொடுக்க இது என்ன சர்க்கரை பொங்கலா?

முதல் மிட்டாய் + 100வது மிட்டாயும் உங்களுக்குதான் ஜெய்

எல் கே said...

/நான் தமிழன் அவ்வளவுதான்... இந்தியன் அல்ல ...//

அப்பொழுது உங்கள் பாஸ்போர்டை சரண்டர் செய்துவிட்டு இந்தியாவி விட்டு வெளியேறுங்கள்

எல் கே said...

//அனேகமாக இன்னும் பத்து வருடங்களில் //

nadakkathu. ungal kanavu pagal kanavu senthil

அனு said...

ரத்தபூமியில் கால் வைக்கிற மாதிரி ஒரு feel வருது எனக்கு... ரொம்ப படிச்சா இப்படி தான் பேச தோணும் போல இருக்கு..

Ignorance is Bliss-னு சொல்லுவாங்க.. நான் ஒரு சாதாரண இந்திய பெண்.. வரலாறுகளையோ / அரசியல்களையோ ஆராயாமல், மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்த வரையில், நான் பார்த்த இந்தியா அழகானது.. I am really proud to be an Indian!!!

அருண், உங்களுக்கும் என் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

கருடன் said...

மாப்ஸ் சண்டைல சொல்ல மறந்துட்டேன்... சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

வெங்கட் said...

Excuse Me..,
நான் கொஞ்ச்ம இங்கே லேட்டா
வந்துட்டேன்.. அதுக்குள்ள நிறைய
விஷயங்கள் நடந்து போச்சு..

இந்த விஷயத்தில என் Point
என்னான்னா...

இந்தியான்னு இல்ல..
உலகத்தில இருக்கிற எல்லா
நாட்லயும் ஏதோ ஒரு குறை
கண்டிப்பா இருக்கும்..

Simple-ஆ சொல்லணும்னா..

மீனுன்னா முள் இருக்கும்..,
அதையே பார்த்திட்டு இருந்தா
மீனை எப்ப சாப்பிடறது..??

நாடுன்னா பிரச்சினை இருக்கும்..,
அதை பத்தியே பேசிட்டு இருந்தா
யார் தான் சரி பண்றது...??

I Love My INDIA..

Gayathri said...

மனிதர்கள் செய்யும் தவறுக்கு நாடு பொறுப்பாகாது..உண்மையனாய சுயனலமிலாத தேசப்பற்று செத்து போய்விட்டது...இப்பொழுது இருப்பது அனைத்துமே ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால் என்று இருப்பதுதான்...நாடு நல்ல நாடுதான்...
சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

கருடன் said...

@வெங்கட்
//மீனுன்னா முள் இருக்கும்..,
அதையே பார்த்திட்டு இருந்தா
மீனை எப்ப சாப்பிடறது..??//

அருண் இப்பொ தெரியுத வெங்கட் என் VAS தலைவர இருக்கர்னு.....நாம 3 பேரும் சேர்ந்து 300 லைன்ல சொன்னத தலை 3 வரில சொல்லிடரு...

இப்படிக்கு
நாட்டுக்காக ஒன்ன சேர்ந்து சண்டை போட்டு
சண்டை முடிந்ததும் உள்ளுக்குல் அடித்து
கொல்லும் சங்கம்...

Jey said...

எச்சூச்மி, யாருப்பா என் பேர்ல வந்து கமெண்ஸ் போட்டு ரவுசு பண்ணுனது...., இது VAS காரங்களா, இல்லை VKS யாப்பா ஏதா இருந்தாலும் பேசித்தீத்துக்கலாம்...

Kousalya Raj said...

பிறந்த நாட்டை பழிப்பதும், நம் தாயை நாமே பழிப்பதும் ஒன்றுதான்..... குறைகளை விடுத்து நிறைகளை எண்ணி பெருமை படுவோம்....

I LOVE INDIA

நண்பர் அருண் பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துகள்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பொதுவாகவே நான் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன்...////

muthalvan, jentleman,kathalan, anniyan,, enthiran ok vaa senthil annaa?

உசிலை மணி said...

//அனு சொன்னது…
ரத்தபூமியில் கால் வைக்கிற மாதிரி ஒரு feel வருது எனக்கு.//

நிஜம்...

அனைவருக்கும் என் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!...