Cricket Countdown....

Friday, October 22, 2010

விசித்திர மரணங்கள்...2

மரணம் - மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு. சில சமயங்களில் அது வரும் வழியே விசித்திரமாக இருக்கும். அதிக தண்ணீர் குடித்ததால் ஏற்பட்ட மரணத்தை பற்றி ஒரு பதிவில் பார்த்தோம். இதோ, அதன் தொடர்ச்சியில் அடுத்த விசித்திர மரணம்...

24 மார்ச், 1975. 50 வயதான இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் மிட்சல் தன்னுடைய விருப்பமான காமெடி நிகழ்ச்சியான “The Goddies” பார்த்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சி இவருக்கு பிடித்த ஒன்று. தவறவிடுவதில்லை. அதில் வரும் ஒவ்வொரு நிகழ்விற்கும் வாய்விட்டு சிரிப்பார்.


அன்றும் அப்படிதான் ஆரம்பித்தது. தொடர்ந்து 10 நிமிடம் நிகழ்ச்சி நகைச்சுவையாக சென்று கொண்டு இருக்க, இவர் தொடர்ந்து சிரித்து கொண்டு இருந்தார். இவர் தொல்லைதாளாத இவர் மனைவி எச்சரித்தும் சிரிப்பது நிற்கவில்லை. இப்படி தொடர்ந்து 25 நிமிடங்கள் சிரித்த இவர், அமர்ந்து இருந்த சோபாவில் இருந்து சுருண்டுவிழுந்து இறந்தார்.

மரணத்திற்கான மருத்துவ காரணம்:

  1. தொடர்ந்து சிரித்தால், சுவாசம் குறைந்து மூச்சுதிணறல் ஏற்பட வாய்ப்பு  இருக்கிறது
  2. மேலும்,  இதய துடிப்பும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.
  3. இதனால் இதயத்திற்கு ஆக்சிஜன் சப்ளை குறைகிறது.
  4. ஆக்சிஜன் குறைந்ததால் இதய தசைகள் செயல் இழக்கின்றன.
  5. இதன் காரணமாக “Heart Attack” அல்லது “Heart Failure” ஏற்பட்டும்.
  6. இதன் காரணமாக மரணம் ஏற்பட்டு இருக்கலாம்.

    இந்த சம்பவத்திற்கு தொடர்பான சில சுவாரசிய தகவல்கள்:

    1. இவர் தொடர்ந்து சிரித்த THE GODDIES நிகழ்ச்சியின் பாகத்தின் பெயர் “ Kung Fu Kapers ”
    2. அலெக்ஸ்ன் மனைவி, அவர் இறந்த பின்னர் THE GOODIES நிகழ்ச்சிக்கு அனுப்பிய கடிதத்தில் அலெக்ஸ்ன் இறுதி நிமிடங்களை மகிழ்ச்சியாக வைத்ததற்கு நன்றி கூறி இருக்கிறார்
    அதிகமாக சிரிப்பதும் ஆபத்துதான்....

    Monday, October 18, 2010

    மம்மி... நான் ஸ்கூலுக்கு போறேன்....

    பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்படும் கஷ்டம் அனைவருக்கும் தெரியும். அவர்களை குளிப்பாட்டி, ரெடி செய்து, சாப்பிட வைத்து, புத்தகங்களை சரிபார்த்து பள்ளி பேருந்துக்கோ அல்லது பள்ளி வாசலிலோ அவர்களை விடும்வரை ஓட வேண்டும்.

    ஒருகட்டத்தில் இது சுகமானதாய் மாறி, பலர் விருப்பத்துடன் ஓடுவதும் உண்டு. ஆனால், முதல் முதல் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களின் கவலை வேறு விதம்.....

    இத்தனை நாள் தன் பார்வையிலேயே வளர்ந்த பிள்ளை சில மணி நேரங்கள் தன்னை பிரிந்து இருக்குமா?

    அங்கு மற்ற குழந்தைகளுடனும் ஆசிரியர்களுடனும் நன்றாக பழகுமா?

    தன்னை காணாமல் தவிக்குமா?

    அடம் செய்து பிடிவாதம் செய்யுமா?

    மற்ற குழந்தைகளிடம் அடிவாங்கி அழாமல் பார்த்துகொள்வார்களா?

    அடம் செய்வதால் ஆசிரியர்கள் குழந்தை மேல் கோபப்படுவார்களா?

    இப்படி பல கேள்விகள் எழும்....

    குழந்தை அழுமா என நினைத்து அழும் பெற்றோர்கள் பலர்... 

    ஆனால், அந்த குழந்தை முதுகில் சிறிய பையை மாட்டி கொண்டும், சட்டையில் ஒரு கர்சிப் குத்திக்கொண்டும், ஒரு கையில் தண்ணீர் பாட்டிலை மாட்டி கொண்டும் பெற்றோருக்கு முத்தம் தந்து டாட்டா காட்டி பள்ளிக்கு செல்லும் அழகை பார்க்க, இரு கண்கள் போதாது.

    ஆம்,

    என் மகள் ஷம்ஹித்தா இன்று முதல் பள்ளிக்கு போகிறாள்! நாங்கள் இன்று முதல் எங்கள் ஓட்டத்தை ஆரம்பிக்கிறோம்.... என்ன தான் 3 மணி நேரமே என்றாலும், PlaySchool தான் என்றாலும் மனதில் ஒரு வித பயமா தயக்கமா சந்தோசமா  என என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு உருண்டு கொண்டு இருக்கிறது. பார்போம்.... எப்படி சமாளிக்கிறாள் என்று

    ஆனால், காலம் மிக வேகமாய்தான் ஓடுகிறது! நம்மைவிட....



    மம்மி டாட்டா... நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்....