Cricket Countdown....

Thursday, September 2, 2010

தனியொருவனுக்கு உணவில்லையெனில்....Widgets

ஒரு மவுஸ் கிளிக்கின் மூலம் பசித்தவர்களுக்கு உணவளிக்கும் வழியை சென்ற பதிவில் கூறியதும், அதை ஏற்று நீங்கள் தந்த ஆதரவு மலைக்க வைக்கிறது. 

அதற்கு அனைவருக்கும் என் முதல் நன்றிகள்....

அதை ஒவ்வொரு நாளும் மறவாமல் நாம் செய்யவும், அடுத்த வரை செய்ய ஊக்கப்படுத்தவும் நம்மால் முயன்ற சிறு முயற்சியை செய்யலாம். 

எப்படி?

அடுத்தவர் கொடுக்கும் அவார்டுகளையும், நம்மை பற்றிய பெருமைகளையும், எத்தனை பேர், எந்த எந்த நாட்டில் இருந்து வருகிறார்கள் என பல விட்ஜட்களையும் நம் தளத்தில் வைக்கும் நாம், ஏன் இலவச உணவு வழங்கும் தளங்களின் விட்ஜெட் லிங்குகளை வைக்க கூடாது.

இதோ, அவற்றின் விட்ஜட்டுகள். உங்களுக்கு விருப்பமானதை உங்கள் தளத்தில் இணைத்து மேலும் பலர் பார்க்க செய்யுங்கள்.

இந்தியதளமான Bhookh.com Widget:
(இதை நான் உருவாக்கினேன், அவர்களுடைய Official Widget கிடையாது)


<a href="http://www.bhookh.com/index.php" title="Donate Food"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvgS3gIH_Ehq8U1nmtq5GNufqvQIMEZ61owmgDaVXitH7vjoU7ITABgXOWmaOCqwzSp7OH1ikT0-Uv-vb-jzwTVO3XBrdvBPWney6GT4dLpapzLOuNkIxbZTsTEc21IW7prIzl-3LKObfC/s240/giving-hands.jpg"  alt="Donate Food" /></a>







 ஐ நா வின் Freerice.com Widgets:

125 X 125 Pixels:

<a href="http://www.freerice.com?utm_source=bannersfreerice125x125&utm_name=bannersfreerice125x125&utm_medium=bannersfreerice125x125" title="Fight World Hunger"><img src="http://www.freerice.com/banners/125_125_banner_a.jpg"  alt="Fight World Hunger" /></a>



125 X 125 Pixel:
<a href="http://www.freerice.com?utm_source=bannersfreerice125x125&utm_name=bannersfreerice125x125&utm_medium=bannersfreerice125x125" title="Fight World Hunger"><img src="http://www.freerice.com/banners/125_125_banner_a.jpg"  alt="Fight World Hunger" /></a>






 120 X 600 Pixels:

<a href="http://www.freerice.com?utm_source=bannersfreerice120X600&utm_name=bannersfreerice120X600&utm_medium=bannersfreerice120X600"><img width="120" height="600" src="http://www.freerice.com/banners/120x600.jpg" alt="Fight World Hunger" /></a>












நான் என் தளத்தில் இணைத்துவிட்டேன், நீங்க?




85 comments:

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தல ,

இதை எப்படி சேர்கறது ? அதையும் சொல்லிடீங்கான நல்ல இருக்கும்

vinu said...

me the firstuuuuuuuuuuu

vinu said...

ooops naamathaan firsttaa illa veara yaravathu muntheentaangallaannu onnumea theariyalaiyeaaa


konjam avasarappattutamoooooooooo

சௌந்தர் said...

கண்டிப்பா செய்யலாம் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

dheva said...

அருண்.....

பயனுள்ள பதிவு தம்பி......! விட்ஜெட்டை சீக்கிரமே என்னுடைய தளத்தில் இணைத்து விடுகிறேன்....மிக்க நன்றி...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கண்டிப்பா பண்ணுறேன். இதுக்கும் என் விருதுகள் பதிவுக்கும் ஏதாச்சும் உள் குத்து இருக்கா?

என்னது நானு யாரா? said...

எனக்கு இந்த பிச்சை இடுவதில் நம்பிக்கை இல்லை.

அவர்களும் இந்த நாட்டு பிரஜை தான் என ஆள்போருக்கும், ஏன்? அவர்களுக்குமே உணர செய்ய வேண்டுமே தவிர, பிச்சை இட்டு அவர்களின் தன்மானத்தை குலைக்கும் செயலுக்கு உடன்பட ஏனோ மனசு ஒப்பவில்லை.

இப்படி பிச்சை இட்டு இட்டு தான் அவர்களை பிச்சை வாங்கும் நிலையிலேயே வைத்திருக்கிறோம்.

பிச்சை இடும் நமக்கும் ஒரு ஆத்ம திருப்தி கிடைத்துவிடுகிறது. ஏதோ நாம் பெரிய தியாகம் செய்து விட்டவர்களை போல அதை வேறு விளம்பரபடுத்தி கொள்கிறோம்.

நம் Ego Boosting-குக்கு இப்படி தெருவில் வெயிலில் நின்று பிச்சை எடுப்பவர்களும் தேவையாக இருக்கிறது. ஆழ்ந்து சிந்தியுங்கள் தோழர்களே! அப்போது தான் நான் சொல்லும் உண்மை புரியும்.

கருடன் said...

மச்சி என் ப்ளாக்ல சேர்த்து விட்டேன்... நன்றி!!


(நீ நல்ல பதிவு எழுத ஆரம்பிச்சிட்ட... இனி உனக்கும் எனக்கும் பேச்சி வார்த்தை கிடையாது...)

அருண் பிரசாத் said...

@ நரி
Gtalk ல வாங்க

@ vinu
பல்பு

நன்றி செளந்தர்

@ ரமெஷ்
உள்குத்து ஆரம்பிக்கனும், ஆனா இப்போ இல்லை

அருண் பிரசாத் said...

@ என்னது நானு யாரா?
//எனக்கு இந்த பிச்சை இடுவதில் நம்பிக்கை இல்லை.//
ஏன் பிச்சை என்று எடுத்து கொள்கிறீர்கள், தானம் எனும் ஒரு விஷயம் இருக்கிறது. கர்ணனும், அதியமானும் கொடுத்தது பிச்சையா? இல்லாதவர்களுக்கு கொடுப்பது “ஈதல்”
”கொடை” “தானம்” “நன்கொடை” “உதவி”

இது ஒரு தேசிய துயரம், இந்த துயருக்கு நேசம், பாசம், விதி, கடவுள், அரசாங்கம் என எதுவும் இல்லை. தாங்கள் என் முந்தைய பதிவை மறுபடியும் படிப்பது நலம்

பாக்கிஸ்தான் வெள்ளத்திற்கு உதவுவது பிச்சையாகாது.

பிறருக்கு வழங்குவதால் ஒரு ஆத்ம திருப்தி வருவது உண்மை. எத்தனையோ பேர் கொடுக்க மனம் இருந்தும் வசதி நிதி இல்லாததால் தடுமாறுகிறார்கள். தங்களை விளம்பரம் படுத்தி கொள்ள ஆயிரம் வழி இருக்கிறது, சரி, இதன் மூலம் விளம்பரம் படுத்தி கொள்வதால் ஒரு ஜீவன் பசியாருகிற்து அல்லவா... விளம்பர படுத்தி கொண்டு போகட்டுமே! டீவியில் வரும் ஒரு பைசாவிற்கு பிரியோஜனமில்லாத விளம்பரத்திற்கு இது 100 மடங்கு மேல்

அருண் பிரசாத் said...

@ டெரர்
யோவ்... இருய்யா அவசர படாத அடுத்த பதிவுல பாரு யாரு டேமேஜ் ஆகறாங்கனு

என்னது நானு யாரா? said...

//தானம் எனும் ஒரு விஷயம் இருக்கிறது. கர்ணனும், அதியமானும் கொடுத்தது பிச்சையா? இல்லாதவர்களுக்கு கொடுப்பது “ஈதல்”
”கொடை” “தானம்” “நன்கொடை” “உதவி”//

கீழ் நிலையில் உள்ளோரை எப்போது நாம் நம் நிலைக்கு கொண்டு வரபோகிறோம் என்பது தான் இங்கே நாம் சிந்திக்க வேண்டும். தானம் கொடுப்பவன் ஒருவன் இருக்கிறான் என்றால் தானம் வாங்கவும் ஒருவன் வேண்டும் அல்லவா? முற்றிலும் அந்த நிலையை மாற்ற முன்வருகிறார்களா என்பதே என் கேள்வி!

இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது. அவர்களின் தன்மானத்தை மழுங்கடிக்கும் செயல் அல்லவா இது?

ஒருவன் எல்லா செல்வங்களையும் சுருட்ட வேண்டியது, பின் தான் நல்லவன் என காட்டி கொள்ள தானம் இட வேண்டியது. இது தானா மனித நேயம்? இது தானா நாகரீகம்? நன்றாக இருக்கிறது

அந்த வளைதளத்தில் சென்று பார்த்தால், ஒரு கேள்விக்கு வெறும் 10 அரிசி மணிகள் தான் கொடுப்பார்களாம். என்ன ஒரு கீழ் தரமான ஒரு சிந்தனை. வியபார தந்திரம்! நான் உயர்ந்தவன், நீ என்னிடம் வந்து வாங்கிகொள் என்கின்ற பகட்டை வரவேற்கவா முடியும்?

கூடிய சீக்கிரம் வறியவர்கள் ஒன்று சேர்ந்து புரட்சி வரவேண்டும் என ஆசை கொள்கின்றேன்.

அவர்களை ஒன்று சேரவிடாமல் பல விதங்களில் அரசுகளுடன் கைகோர்த்து சதி செய்கிறார்கள் இந்த திமிர் பிடித்த பணக்காரர்கள் என்பதை அறிவீர்களா நண்பரே?

ஜில்தண்ணி said...

அருமையான முயற்சி நண்பா :)

நான் கூட நினைத்தேன் கிரெடிட் கார்டு மூலமாக பணமாகத்தான் உதவி செய்ய முடியும் என்று

அப்பரம்

bhook.com தளத்தை பார்த்தேன்

நம் ஒவ்வொரு கிளிக்கும் உணவாக மாறுகிறது என்று சொல்கிறார்கள்,கிளிக்குக்குதானே செய்துவிடலாம் :)

Thank You !

You have donated a cup of staple food to a hungry Indian through the UN.
Please remember to come back tomorrow.

அப்பரம் freerice.com

இங்கு பல வகைகளில் உதவி செய்யலாம்

என்னவென்றால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு நாம் சரியான பதில் சொன்னால் 10 அரிசிகள் world food programme க்கு அவர்கள் தருகிறார்கள்

நிறைய பிரிவுகளில் கேள்விகள் இருக்கு.art,chemistry,english vocabulary,geography என்று

என்னால் இன்று முடிந்தது 340 அரிசிகள்

எத்தனை பேர் இந்த தளத்தை பார்த்தீர்கள் என்று தெரியவில்லை, விட்ஜெட்டையும் சேர்த்துவிட்டு இந்த தளத்திற்கு சென்றும் பாருங்கள்

ஏதோ நம்மால் முடிந்தது சில கிளிக்குகள்

ஜில்தண்ணி said...

@@ என்னது நானு யாரா

நாம் நம் தமிழ்நாட்டில் எவ்வளவோ வழி இருந்தும் உடல் வலிமை இருந்தும் உழைக்காமல் உணவுக்காக கை ஏந்தும் மக்களுக்கு நாம் ஒன்றும் கொடுக்கப் போவதில்லை

நம் தமிழ்நாட்டில் எல்லாம் இருக்கிறது,இருந்தும் அவர்கள் உழைக்க முன் வரவில்லை,ஆனால் சோமாலியா போன்ற தேசங்களில் நடந்த பஞ்சப்பட்டினிகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்

சாகப் போகும் ஒருவருக்கு தண்ணீர் கொடுத்து காப்பாத்துவது பிச்சையோ/கீழ்தரமோ இல்லையென்றால் இதுவும் இல்லை

vinu said...

nnanum rutharukku innaikku UNavalithean magizchi

ஜில்தண்ணி said...

@என்னது நானு யாரா

/// அந்த வளைதளத்தில் சென்று பார்த்தால், ஒரு கேள்விக்கு வெறும் 10 அரிசி மணிகள் தான் கொடுப்பார்களாம். /////

நண்பா ஒரு கேள்விக்கு பத்து தான், நிறைய கேள்விகள் நிறைய வகைகளில் இருக்கே

முதலில் இது போன்ற எல்லா தளங்களும் WFP என்ற WORLD FOOD PROGRAMME என்ற மிகப்பெரும் அமைப்பிற்க்காகவே செயல்படுகிறது

ஒரு நாடு முழுக்க வெள்ளம் வந்தால் அரசு இயந்திரத்தால் மட்டுமே எல்லாவற்றையும் செய்து விட முடியாதே,இது போன்ற அமைப்புகளின் உதவி தேவையல்லவா

இந்த WTF அமைப்பின் தளத்தை பாருங்கள்

ஜில்தண்ணி said...

தவறுக்கு மன்னிக்கவும் WTF என்று தவறாக டைப்பிவிட்டேன் அது WFP

கருடன் said...

@என்னது நானு யாரா

சபாஷ் பங்காளி!! விடாதிங்க. அடிச்சி ஆடுங்க.. இவரு பெரிய துரை Widgets கொடுக்கறாரு...அதை நாலுபேர் அவங்க ப்ளாக்ல போட்டு. அந்த ப்ளாக் படிக்கவர நாலூ பன்னாடைங்க அத கிளிக் பண்ணி எவனுக்காவது ஒரு வேளை சோறு கிடச்சிட்டா? நல்லா மண்னு அள்ளி போடுங்க பங்காளி... விடாதிங்க.

செல்வா said...

///நான் என் தளத்தில் இணைத்துவிட்டேன், நீங்க?///
நானும் இணைத்து விடுகிறேன் ..
நானும் அந்த FREE RICE தளத்திற்கு சென்றேன். இனியும் செல்வேன். நமது அறிவுக்கும் வேளை கொடுத்தது போல இருக்கும்.

என்னது நானு யாரா? said...

@@TERROR-PANDIYAN(VAS):

//அத கிளிக் பண்ணி எவனுக்காவது ஒரு வேளை சோறு கிடச்சிட்டா? நல்லா மண்னு அள்ளி போடுங்க பங்காளி... விடாதிங்க//

யாருடைய சோத்தில நான் ஏன் மண் அள்ளி போடணும் பங்காளி!சமூக அமைப்பு எந்த அளவுக்கு கேடுகெட்ட நிலையில இருக்குன்னு சொல்லவந்தேன்.

காக்கா கூட்டத்துக்கு இருக்கிற அறிவு மனுஷனுக்கு இருந்திருக்குமானால், இந்த உயர்ந்தவன் தாழ்ந்தவன்னு ஒரு பிரிவு இருக்குமான்னு தான் நான் சொல்லவந்தது.

இன்னமும் எத்தனை காலத்துக்கு தான் சோத்துக்கு கூட கையேந்துகிற நிலையில மனுஷங்களை வெக்க போறோம்ன்னு தான் என் ஆதங்கம்.

இது மாறாம இருக்கேன்னு தான் என் கவலையெல்லாம்.

ஒருத்தன் 1 லட்சம், 2 லட்சம்ன்னு சம்பாதிப்பானாம். இன்னொருத்தன் மாசம் 1000 ரூபாய்க்கே திண்டாடுவானாம். இந்த நிலையை தான் இந்த முதலாளி வர்கம் தக்க வைக்குதுன்னு தான் சொல்லவந்தேன்.

ஒட்டு மொத்த சமூக அமைப்பும் மாறாம, ஒன்னும் சாதிச்சிட முடியாது. வேணா நானும் தானம் செய்தேன்னு மார் தட்டி சொல்லிகிடலாம்.

கருடன் said...

@என்னது நானு யாரா

பங்காளி நீங்க கேக்கறது நிறந்தர தீர்வு. அதுக்கு ஒரு ஒரு மனுஷனும் மாறனும். அருண் சொல்லி இருக்கது சுலபம செய்யகூடிய உதவி. நீங்க 100 பக்கம் சமுகசீர்திருத்தம் எழுதரதவிட 100 கிளிக்பண்ணி 1000 அரிசி கொடுக்கரது மேல். இதுக்கு முன்னாடி இருக்க பதிவு படிச்சி இருப்பிங்க நினைக்கிறேன். அதில் உள்ள படங்களை பாருங்கள். அவங்களுக்கு தெரியும் அந்த 1000 அரிசியின் மதிப்பு.

Mrs. Arunprasath said...

@ என்னது நானு யாரா?
Regarding freerice.com….
They have a toolbar(http://freerice.com/toolbar.php). If u use that toolbar to search 10 time in a day they will donate 5000 grains. So everyday u can donate 5000 grains. Over a period of 30 days u can donate 1.5 lakh grains. A child needs 75000 grains for eight days. Thus by using the search toolbar, one can feed a child for 15 days. I think it’s not less. Using that site, you are doing a lot.

செல்வா said...

@ என்னது நானு யாரா .?
நீங்க சொல்லுவதும் ஒரு வகையில் நியாயம் தான்.
ஆனால் ஜில்தண்ணி சொன்னது போல வேளை செய்யாமல் சோம்பேறியாக இருப்பவர்களுக்கு உதவுவது பிச்சை. இயற்கை சீரழிவால் நிலம் , வீடு , தானியங்களை இழந்து நிற்பவர்களுக்கு உதவுவதுதான் WFP என்ற அமைப்பின் நோக்கம். இங்கே இவர் கூறியிருப்பதும் அதுவே. ஆகயினால் நீங்களும் தாராளமாக இதனை செய்யலாம் . மாற்றுக்கருத்து இருந்தால் மட்டுமே உண்மைகள் தெரியவரும் . எனவே இப்படி தங்களது கருத்தினை சொல்வதும் பாராட்டத்தக்கதே . அதே சமயம் தற்பொழுது தாங்கள் உண்மையை விளங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறோம் .. உங்களது தளத்திலும் இந்த WIDGET இனை எதிர்பார்க்கிறோம் ..

ஜில்தண்ணி said...

@@ ப.செல்வக்குமார்

அதேதான் நான் சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக சொல்லிட்ட செல்வா

Jey said...

அருண் என்ப்பா இங்க பிரச்சினை...இரு எல்லா பின்னூட்டமும் படிச்சிட்டு வரேன்... ஆணி முஞ்சிருச்சி

செல்வா said...

//காக்கா கூட்டத்துக்கு இருக்கிற அறிவு மனுஷனுக்கு இருந்திருக்குமானால், இந்த உயர்ந்தவன் தாழ்ந்தவன்னு ஒரு பிரிவு இருக்குமான்னு தான் நான் சொல்லவந்தது.///
காகா கூட்டத்துக்கு அறிவு இருக்கு அப்படின்னு எப்படி சொல்ல வரீங்க அப்படின்னு தெரியல ..? அதுகளுக்கு சாப்பாடு மட்டும் இருந்தா போதும் . மனுஷனுக்கு அப்படி இல்ல . மனுசனுக்கும் மிருகத்துக்கும் சம்பந்தப்படுத்தாதீங்க. அந்த பறவைகள் கூப்பிட்டு சாப்பிடும்கறதெல்லாம் சும்மா டுபாகூர். அதுக்கு பயம் .. இதைய எடுத்தா நாம ஏதாவது ஆயிடுவோம அப்படின்னு தான் மத்த காகா கூப்பிடுது .. அதவிட அதுக்கு இங்க சாப்பாடு கிடைக்கலைனா வேற பக்கம் போய் எடுத்துக்க முடியும். ஆனா மனுஷன் அப்படி போய் எடுத்துக்க முடியாது. அதவிட நீங்க சொல்லுற மாதிரியே காக்கா பண்ணுற மாதிரி நாம உழைச்சு மத்தவங்களுக்கு கொடுக்குறோம்னு வையுங்க அவன் என்ன பண்ணுவான் சாப்பிட்டு சாப்பிட்டு சோம்பேறி ஆகிடுவான். நீங்க மட்டுமே வேலை செய்யவேண்டி இருக்கும். அதனால வேலை செஞ்சு சம்பாரிக்கறவன் உயர்ந்தவன் தான் , வேலை செஞ்சு சம்பாதிக்காதவன் தாழ்ந்தவன் தான் .

ஜெயந்த் கிருஷ்ணா said...

கண்டிப்பா செய்யலாம் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

Mrs. Arunprasath said...

@என்னது நானு யாரா

I appreciate and respect your feelings. I know things should change. It’s true that everyone should have enough money. Educating everyone plays a major role in achieving this. Most of the organizations and govt is working on that. But that is not an immediate solution. It will not change in overnight. So let us feed them first and meanwhile work towards establishing the communist society as you tell.

Jey said...

// என்னது நானு யாரா? கூறியது...//

தல சொல்ரதெல்லாம் சரிதான்,எல்லாரும் சமமா வாழனும் அதுக்கு என்ன பண்ரதுன்னு ஒரு பக்கம் முயற்சி செய்வோம், அதுக்கு ரெடிமேட் தீர்வு இல்லை, சமூக விளிப்புணர்வு இன்னும் அதிக அளவுல தேவைபடுது..., அரசியல் ஆட்சி,இயக்கம்னு போராட வேண்டிய விசயம்...

இங்க சொல்றது தனிமனித உதவி அதுவும், இங்க வெட்டியா நெட்ல செலவளிக்கிர நேரத்துல சில மணித்துளிகள்... இதுல செலவளிச்சா, உலகெங்கும் இயற்கை சீற்றத்தால பாதிச்ச மக்களுக்கு ஒரு சின்ன உதவியா இருக்கும், எனக்கென்னமோ எதுக்கெடுத்தாலும், பகுத்தறிவு, முற்போக்குனு பேசுற உங்க பேச்சுதா தன்னை அறிவாளியா, சமுதாயத்தை பத்தி சிந்தனை செய்றவங்களா காட்டிக்க முயர்சி செய்றா மாதிரி இருக்கு.

இங்க பேசுர விசயம் பிச்சை போடுரது கிடையாது...,

உங்களுக்கு பக்கத்து வீடு வெள்ளத்துல போய்ட்டா, அங்க இருக்குரவங்களுக்கு உடனே ஏதாவது உதவி செய்ய தோனுமா... இல்லை உதவி=பிச்சை , அதனால அது கூடாதுன்னு இப்படி பேசிட்டு போவீங்களா?

கருடன் said...

Mrs. Arunprasath சொன்னது…
//Over a period of 30 days u can donate 1.5 lakh grains. A child needs 75000 grains for eight days. Thus by using the search toolbar, one can feed a child for 15 days.//

படிச்சவங்க படிச்சவங்கதான்!! பட்டுனு சொல்லிட்டிங்க. எதோ இங்கிலிபிஸ்ல சொல்லி இருக்கிக. நாங்கதான் கைநாட்டா போய்ட்டோம். நீங்க என் தாயி ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி இப்படி பொது மக்கள் அறிவ வளர்க்ககூடது?

(சகோ... ஹும் சொல்லுங்க திருமதி.சூரியனின் வலை வாசல் ஆரம்பிக்களாம்.. :) )

ஜெயந்தி said...

சக மனிதனும் சாப்பிட வேண்டும் நினைத்து செய்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///தனியொருவனுக்கு உணவில்லையெனில்///

வாழ்த்துக்கள்! நீங்கள் செய்யும் முயற்சிக்கும் மற்றும் "ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற சொற்களை சேர்க்காமல் இருந்ததிர்க்காக. மீண்டும் நன்றி!

தனியொருவனுக்கு உணவில்லையெனில் நீங்கள் செய்வது மாதிரி ஏதாவது செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு எவரோ ஒருவர் ஜகத்தினை அழிப்பாராம்.

தருமி புலம்பின மாதிரி பயித்தியக் காரத்தனமா எழுதி பேர் வாங்கின புலவர்கள் நம் நாட்டில் ஏராளம்.

இப்படி வேண்டுமானாலும் தலைப்பை வைத்துக்கொள்ளுங்கள்...

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் அவனது உணவிற்கு வழி செய்வோம்"

இப்படி உங்கள் பதிவின் தலைப்பாக வைப்பதை நான் வரவேற்கிறேன்.

வெங்கட் said...

நல்ல விஷயம்..
நானும் என் Blog-ல சேர்த்துக்கறேன்..

Mrs. Arunprasath said...

@TERROR-PANDIYAN(VAS)..
Neenga vera anna.. Before i could read the first 7 comments letter by letter there are another 15 comments posted. Then decided, it cant work by reading.. so without reading further comments i posted my comment. And after all this skills in me, you are asking me to write a blog... Funny!

கருடன் said...

@Mrs. Arunprasath கூறியது...
//Neenga vera anna.. Before i could read the first 7 comments letter by letter there are another 15 comments posted. Then decided, it cant work by reading.. so without reading further comments i posted my comment. And after all this skills in me, you are asking me to write a blog... Funny!//

அதைபத்தி நீ கவலைபடாதமா... இங்க அருண்க்கு எதிரா சதி பண்ண ஒரு குருப்பே இருக்கோம்.. டெரர் அண்ணா, ஜய் அண்ணா, ரமேஷ் டாடி (ஹி..ஹி..ஹி ரமேசு.... ஓடியா ஒடியா...). நீங்க இங்லிஷ்ல எழுதி அனுப்புங்க நாங்க.. அதை தமிழ்ல பப்லிஷ் பண்றோம்...

அருண் பிரசாத் said...

பாசமலர்கள் படம் ஓடுது டோய்....

கருடன் said...

@அருண்
//பாசமலர்கள் படம் ஓடுது டோய்... //

ஒரு வருங்கால பிரபலபதிவர் வளரவிடாமல் discourage செய்யும் ஆண் ஆதிக்கம் ஒழிக! ஆண் ஆதிக்கவாதி அருண் பதிவுலகை விட்டு வெளியே போ!!!

பெண்களின் விடிவெள்ளி டெரர் வாழ்க!!
(எவனும் சொல்ல மாட்டரான். அதான் நானே...)

ஜில்தண்ணி said...

ஆணாதிக்கவாதி அருண் ஒழிக :(

பெண்களின் விடிவெள்ளி டெரர் வாழ்க!! வாழ்க!! :)
(அக்கவுண்டுல பணத்த சாயந்தரம் போட்டுடுயா டெர்ரரு)

Jey said...

அருண் இது தேவையா...இப்ப பாரு உன் வீட்டு தங்ஸ ஏத்தி விட்டாங்க...இனி உம்பாடு......போ..உன்னை அந்த வேப்ப மரத்து ஆத்தாதான்..காப்பாத்தனும்...ஒன்னும் சொல்ரதுகில்ல...

Gayathri said...

serthuten.migavum ubhayogamaana muyarchi...nandri bro

Mrs. Arunprasath said...

@TERROR-PANDIYAN(VAS)..
Seems like a good idea :-P.

கருடன் said...

@Mrs. Arunprasath கூறியது...
//Seems like a good idea :-P.//

ஆமாம்ம... இரண்டு நாளைக்கு சமைக்க வேண்டாம் உங்க வீட்டு ஷேல்ப் மேல உக்காந்து நல்லா ரோசனை பண்ணுங்க. நாம ப்ளாக் ஆரம்பிக்கறோம்....

(ஜெய் தல உங்க வாக்கு பலிக்க போகுது... இனி அருணுக்கும் பூரிகட்ட அடி ரெடி....)

புதியஜீவன் said...

@Terror
//ஆமாம்ம... இரண்டு நாளைக்கு சமைக்க வேண்டாம் உங்க வீட்டு ஷேல்ப் மேல உக்காந்து நல்லா ரோசனை பண்ணுங்க. நாம ப்ளாக் ஆரம்பிக்கறோம்....

யாருப்பா குடும்பத்துல கும்மி அடிக்கிறது... பிச்சிடுவேன் பிச்சி.....

கருடன் said...

@முரளி
//யாருப்பா குடும்பத்துல கும்மி அடிக்கிறது... பிச்சிடுவேன் பிச்சி....//

முரளி சார் என் இப்படி மிரட்டறிங்க!! பயமா இருக்கு... அவ்வ்வ்வ்வ். ஆமா உங்க பக்கத்துல எதோ அறிவிப்பு பலகை தெரியுது... அதுக்கு நீங்க காவலா?? என்னா எழுதி இருக்கு.. இருங்க பாக்கறேன்.... குடும்பநல காப்பாளர் குப்புசாமியா.... ஹி..ஹி..ஹி..

(சண்டையா? சமாதனமா?)

புதியஜீவன் said...

@Terror
//(சண்டையா? சமாதனமா?)//

நல்ல பாருங்க சார்!! குண்டக்க மண்டக்க பேசுபவரை போட்டுதல்லுவோம்.. அப்படின்னு இருக்கு..

(சமாதானமா சண்டை போடலாம்..)

அருண் பிரசாத் said...

வாங்க முரளி.... பாத்து இவங்க டெஞ்சரான ஆளுங்க, சமாதானமாவே சண்டை போடுங்க, இல்லைனா உங்க வீட்டுக்கு (பிளாக்) வந்து சண்டைக்கு இழுப்பாங்க

கருடன் said...

@Murali
//நல்ல பாருங்க சார்!! குண்டக்க மண்டக்க பேசுபவரை போட்டுதல்லுவோம்.. அப்படின்னு இருக்கு..//

போட்டு தள்ளுவோம் சொல்லிட்டு என் அங்க போய் நிக்கறிங்க... விழ போறிங்க.. அட முன்னால வாங்க...அடிக்க மாட்டோம் வாங்க..

(நாங்க எல்லம் ஒரே குடும்பம் சார்.. நீங்கலும் வாங்க...)

அருண் பிரசாத் said...

50 போட்டாச்சு

புதியஜீவன் said...

அருண் பிரசாத் கூறியது...
//வாங்க முரளி.... பாத்து இவங்க டெஞ்சரான ஆளுங்க, சமாதானமாவே சண்டை போடுங்க, இல்லைனா உங்க வீட்டுக்கு (பிளாக்) வந்து சண்டைக்கு இழுப்பாங்//

ஹ ஹ ஹ... நான் ரொம்ப நாளா உங்க பதிவு படிக்கிறேன் அருண். நல்ல எழுதறிங்க... Terror கூட சேர்ந்து கெட்டு போகதிங்க

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...//

பாண்டி அண்ணாச்சி எனக்கு ஃபாலோவர்...பின்னூட்டம் போட்டவர்..( ஓட்டு போட்டாரானு...கவனிக்கல..),
அதனால சமாதானமா...போயிடு...சண்டை போடாதே...புரியுதா....

நாலு பதிவு எழுதட்டும் அப்புரம் ரோசனை பண்ணலாம்...:)

புதியஜீவன் said...

Jey
ஜெய் அண்ணாச்சி நாங்களும் கொலைகாரங்க.....

அருண் பிரசாத் said...

உஸ்.... சத்தம் போடாம சண்டை போடுங்க.

கருடன் said...

@Murali
அப்பா சாமி ராசா உன் வீரத்த பாத்து புல்லரிக்குது.... என் ப்ளாக் கொஞ்சம் வர்ரது....

Jey said...

//Murali.R கூறியது...
Jey
ஜெய் அண்ணாச்சி நாங்களும் கொலைகாரங்க.....//

அப்ப இதுதான் சரியான குருப்பு வந்து ஐக்கிய மாயிடுங்க...என்ன வெளி ஆடு சிக்கலைனா..அப்பப்ப...உள்ளுக்குள்ள்யே ஆடு வெட்டிக்குவோம்...

அருண் பிரசாத் said...

முரளி, பாத்துங்க டெரர் காலகாலமா ஆடு அறுக்கறவர். நான் முடிஞ்ச வரை உங்களை காப்பாத்துறேன் அப்புறம் உங்க விதி

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@Murali
அப்பா சாமி ராசா உன் வீரத்த பாத்து புல்லரிக்குது.... என் ப்ளாக் கொஞ்சம் வர்ரது....///

பாண்டி கத்தாத பன்னடை...புது ஆடு..மிரளப் போகுது...நான் பேச்சு குடுத்துகிட்டே இருக்கேன்... நீ மஞ்சத்தண்ணி ரெடிபண்ணு...

புதியஜீவன் said...

Terror
////அப்பா சாமி ராசா உன் வீரத்த பாத்து புல்லரிக்குது.... என் ப்ளாக் கொஞ்சம் வர்ரது....//

வரமாட்டேன் நீங்க இங்க & ரமேஷ் ப்ளாக்ல யாரையும் அடிக்கமாட்டிங்க.... உங்க ப்ளாக் வந்த வெட்டிடுவிங்க....//

Jey said...

@Murali//

அண்ணாச்சி நீங்க வாங்க நாம தனியாப் பேசுவோம்...இந்த டெர்ரர் பயலைப் கண்டுக்காதீங்க...வெத்து வேட்டு..

( டேய் பண்டி மஞ்சத் தண்ணி என்னாச்சு..அப்படியே அந்த வீச்சருவா...கைல எடுத்துக்க..டேய் டேய்..இரு நான் சிக்னல் காட்டுனதுகப்புரம்...)

Jey said...

@Murali//

அப்புரம் சொல்லுங்க அண்ணாச்சி... உங்க கொலைகலைப் பத்திகொஞ்சம் சொல்லுங்க..., ஆளப் பாத்தாவே தெரியுது....னீங்க பெரிய அளுதா இருபீகன்னு.... டீ சாப்பிடிரீகளா?..

( பாண்டி கெட் ரெடி..)

கருடன் said...

@Jey
தல விஷயம் தெரிஞ்சா ஆடு மாதிரி தெரியுது....

Jey said...

Murali.R கூறியது...
Terror
////அப்பா சாமி ராசா உன் வீரத்த பாத்து புல்லரிக்குது.... என் ப்ளாக் கொஞ்சம் வர்ரது....//

வரமாட்டேன் நீங்க இங்க & ரமேஷ் ப்ளாக்ல யாரையும் அடிக்கமாட்டிங்க.... உங்க ப்ளாக் வந்த வெட்டிடுவிங்க....//|||

அண்ணாச்சி டெர்ரர் கிடக்குரான் சொங்கிப் பய..., சவுண்ட் விட்டா ஓடிருவான்... நான் இருக்கேன் தைரியமா வாங்க...

( டேய் பாண்டி பரதேசி என்னடா பண்ணிட்டிருக்கே..மஞ்சத் தண்ணிய ஊத்துடா)

புதியஜீவன் said...

jey & Terror
//ஐயா சாமி ஆளவிடுங்க சும்மா terror வம்புக்கு இழுக்கலாம் பாத்தேன்... terror அருண் வீட்டுல வெட்டி பாத்தது இல்ல அதன் தைரியமா சவுண்ட் கொடுத்தேன்... :)

புதியஜீவன் said...

jey & terror & arun

சமாதனம் சமாதனம் சமாதனம் !!! :))))

கருடன் said...

@murali
அட சும்மா பாஸ்... ஜாலியா வந்து போங்க...

Jey said...

Murali.R கூறியது...
jey & Terror
//ஐயா சாமி ஆளவிடுங்க சும்மா terror வம்புக்கு இழுக்கலாம் பாத்தேன்... terror அருண் வீட்டுல வெட்டி பாத்தது இல்ல அதன் தைரியமா சவுண்ட் கொடுத்தேன்... :)//

பாண்டி என் வீட்டுக் கீரிபுள்ள மாதிர் உங்கூட வெளையாட வந்துறுக்குற அண்ணாச்சிய வெட்ட பிளன் பண்ணச் சொல்லிட்டியே..பாண்டி...னீயெல்லாம்...அண்ணாச்சி நீங்க இனி டெர்ரர ஒரு ழை... இல்ல ஒன்போது வழிகூடப் பண்ணுங்க நான் வரலை..., போட்டுத்தள்ளுங்க...

அருண் பிரசாத் said...

யோவ்... என்னய்யா கைப்புள்ள சவுண்ட் கேக்குது.... வெட்டும் போது சொல்லுங்க வந்துடரேன்

கருடன் said...

@murali
//சமாதனம் சமாதனம் சமாதனம் !!! :))))//

இதுக்கு என் தமிழ் எவ்வளோ தேவலாம்....

Jey said...

Murali.R கூறியது...//

அண்ணாச்சி சீக்கிரமா ஒரு பதிவு எழுதுரீங்க இல்லைனா எழுதி குடுக்குறீங்க...ஆமா சொல்லிட்டேன்...

நீங்க நல்லா எழுதுவீங்கன்னு தோல்ல கோட்டைத் தூக்குப்போட்டு நிக்கிற ஸ்டைலுலேயேத் தெரியுது அதனால எழுத வராதுன்னு சொல்லி தப்பிக்க முடியாது..

கருடன் said...

முரளி சார் நீங்க இப்போ அருண் follow பண்ணுவிங்களாம்..... இல்லனா நான் உங்கள வெட்டி வெட்டி விள்ளாடுவேன்...

அருண் பிரசாத் said...

தோள்ல கோட்டுதான் இருக்கு, ஜோல்னா பை இல்லையே

புதியஜீவன் said...

Followed followed....வெட்ட ஆரம்பிசிட்டாங்கட.... நான் கிளம்பறேன்...

கருடன் said...

முரளி சார்... கோட் எப்போ கடைசியா துவச்சிங்க....

Jey said...

Murali.R கூறியது...
Followed followed....வெட்ட ஆரம்பிசிட்டாங்கட.... நான் கிளம்பறேன்...//

அண்ணே எதுக்கு ஓடுறீங்க இப்ப நீங்க கைல மஞ்சத் தண்ணிய எடுங்க...பாண்டியப் போட்ரலாம்...

அருண் பிரசாத் said...

//Followed followed..//

நம்ம மார்கெட்டிங் ஆபீசர் டெரருக்கு இந்த மாசம் இன்கிரீமண்ட்யா...

புதியஜீவன் said...

கோட் இல்லப்பா சுவீட்டர்......

கருடன் said...

@ஜெய்
அவ்வ்வ்வ்வ்வ்வ்.... தல என்ன போடபோறிங்களா......

அருண் பிரசாத் said...

சுவட்டர்ரா....

டெரரு, பொறுப்பா பதில் சொல்லுறாருய்யா... விட்டுடு...

Jey said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ஜெய்
அவ்வ்வ்வ்வ்வ்வ்.... தல என்ன போடபோறிங்களா......//

அப்புறம் என்னோட ஃபாலோவர என் பெர்மிசன் இல்லாம மிரட்டுனா..., அண்ணாச்சிய கலாய்க்கனும்னா..என் கிட்ட பெர்மிசன் வாங்கனும்...புரியுதா...

புதியஜீவன் said...

கூடிய சீக்கிரம் பதிவு போடலாம் இருந்தேன் இனி அடுத்த வருசம்தான் போடுவேன்... அப்பா terror வீடுபூந்து அடிக்காத,.

Jey said...

சரி லேட்டாகுது அருணு கடைய ஏரக்கட்டி பூட்டு போட்ருய்யா..ராத்திரிநேரம் .. கடையோட யாரும் தூக்கிட்டு போயிராம..

கருடன் said...

@முரளி
அட!! நான் ரொம்ப நல்லவன் சார்... அடிக்க எல்லாம் மட்டேன்... இவங்க பொய் சொல்ராங்க.... நீங்க தைரியமா எழுதுங்க....

அருண் பிரசாத் said...

//கூடிய சீக்கிரம் பதிவு போடலாம் இருந்தேன் இனி அடுத்த வருசம்தான் போடுவேன்... அப்பா terror வீடுபூந்து அடிக்காத//

அச்சச்சோ... திடீருனு இப்படிலாம் முடிவு எடுக்க கூடாது. டெரரை நாங்க பாத்துகறோம். அது வாயில்லா பூச்சி. நீங்க பதிவு போடுங்க மக்கா

புதியஜீவன் said...

நானும் கிளம்பறேன்..

அருண் பிரசாத் said...

//சரி லேட்டாகுது அருணு கடைய ஏரக்கட்டி பூட்டு போட்ருய்யா..ராத்திரிநேரம் //

இங்க இப்பதான் 8.30 ஆகுது. ஒரு 12 வரக்கும் கடை திறந்துதான் இருக்கும். உங்க வூட்டுகாரம்மா பூரிகட்டைய அனுப்பறதுக்கு முன்னாடி வீட்டுக்கு போய்யா

கருடன் said...

முரளி சார் இருங்க போலாம்... இன்னும் நிறையா விள்ளாட்டு இருக்கு...