Cricket Countdown....

Tuesday, August 2, 2011

பன்னிக்குட்டி ராம்சாமியை காப்பாத்துங்க....

டிஸ்கி: இந்த பதிவில் வரும் அனைத்து கற்பனைகளும் எழுதியவரையே சாரும்.... சத்தியமா எனக்கு இவ்வளோ காமெடி வராதுங்க. அட பதிவு எழுதவே வராதுங்க. எங்கேயோ எப்பவோ கேட்டதை வச்சிகொஞ்சம் உல்ட்டா பண்ணி எழுதின பதிவு இது.


நம்ம பன்னிகுட்டி ராம்சாமி அவரோட பன்னீஸ் டிவிக்காக ஒரு வீ ஜே வை தேடிட்டு இருக்காரு. அவருக்காக நம்ம செல்வா, அவரை மாதிரியே ஒல்லியா இருக்கற ஒரு ஆளை இன்ட்ரவியூக்கு கூட்டி வராரு. இருங்க என்ன நடக்குதுனு பார்ப்போம்....



செல்வா:                             அண்ணே, அண்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி:   வாடா கோபுரதலையா, என்ன இந்த பக்கம்

செல்வா:                             அண்ணே நீங்க ஒரு பெரிய டிவி கம்பனி ஓனர் இல்லையா?

ப.ரா:                                    ஆமா, அதுகென்ன இப்போ

செல்வா:                             உங்க டீவி ஒரு வீ ஜே வேணும்னு சொன்னீங்க இல்லையா

ப.ரா:                                    ஆமா, ஏன் நீயே வரேன்னு சொல்லுறீய்யா.

செல்வா:                            அட இல்லைண்ணே, (உங்க கம்பனில எவன் வேலை செய்வான்) ஒரு
                                            தம்பிய கூட்டி வந்து இருக்கேன்.ஆனா தம்பிக்கு ஒரு சின்ன பிரச்சனை

ப.ரா:                                    என்ன? பேச வராதா?

செல்வா:                            அது நல்லாவே வரும் ஆனா ஒரு எழுத்துதான் வராது “வ”னாக்கு பதில்
                                           “த”னா தான் வரும்

ப.ரா:                                   தமிழ்ல இருக்கற 247 எழுத்துல ஒரு எழுத்துவறலைனா என்ன? வர
                                           சொல்லு நான் சமாளிச்சிக்கறேன்

செல்வா:                           தம்பி வாப்பா....

தம்பி:                                சார் தணக்கம் சார்

ப.ரா:                                  யார்றா இந்த பன்னிய உள்ள விட்டது

செல்வா:                          அண்ணே, இவர் தான்னே நான் சொன்ன அந்த தம்பி

தம்பி:                                சார் தணக்கம் சார்

செல்வா:                          வணக்கம்னு சொல்றான்னே

ப.ரா:                                 ஓ, வணக்கம்பா, உன் பேரு என்ன?

தம்பி:                               தடிதேலு சார்

ப.ரா:                                 என்னது தடிதேலா, உனக்கு ஊரல வேற பேரே கிடைக்கலையா? இப்படி
                                          ஒரு பேரை நான் இதுவரைக்கும் கேட்டதே இல்லையே ராசா

செல்வா:                         வடிவேலுன்னே

ப.ரா:                                 ஓ, வடிவேலா. சரி, தம்பி குரலை டெஸ்ட் பண்ணுவோம்.
                                          தம்பி ஏதாவது பேசு பார்ப்போம்

தம்பி:                               சார், நான் சிதாஜி மாதிரி நல்லா தசனம் பேசுதேன் சார்

ப.ரா:                                 என்னது சிதாஜி மாதிரி தசனமா?

செல்வா:                         சிவாஜி மாதிரி வசனம் பேசுவேன்னு சொல்றான்னே... டேய், பேசி
                                         காட்டுறா

தம்பி:        தரி, தட்டி, திரை , கிஸ்தி.
                   யாரை கேட்கிறாய் தட்டி.
                   தானம் பொழிகிறது ,பூமி திளைகிறது,
                   உனக்கேன் கொடுக்க தேண்டும் கிஸ்தி.

ப.ரா:          அய்யோ, அய்யோ, அய்யோ... தரி, தட்டியா....நிறுத்துடா நிறுத்துடா
செல்வா:   டேய் வேற பேசுடா
தம்பி:        அண்ணே ஒரு பாட்டு பாடதா
ப.ரா:          பாது...சே...பாடு
தம்பி:        தாடியம்மா, தாடி. தண்டாட்டம் தாடி....

ப.ரா:          டேஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....செல்வா...நிறுத்த சொல்லுடா.... முடியல....

செல்வா:   அவன் வாடியம்மா வாடி, வண்டாட்டம் வாடின்ற பாட்டை பாடுறான்னே....
                    டேய் வேற பாடு

தம்பி:         சரிண்ணே.... தாங்கய்யா, தாதியாரைய்யா, தரதேற்க்க தந்தோம் அய்யா...

ப.ரா:           அய்யோ சாமி யாராவது காப்பதுங்களேன்...
                    டேய் செல்வா முதல்ல இவனை கூட்டிட்டு வெளில போடா

செல்வா:    சரிண்ணே, டேய் தம்பி அண்ணனுக்கு மூட் சரியில்லை அப்புறம் வரலாம்.
                   அண்ணன்கிட்ட சொல்லிட்டு கிளம்பு

தம்பி:        சரிண்ணே அப்போ போயிட்டு தரேன்னே.....

ப.ரா:          போயிட்டு தர்றிய்யா..... அய்யோ.... யாராவது என்னை காப்பாத்துங்களேன்.......

செல்வா:   அண்ணே நாளைக்கு வேற ஒருத்தனை கூட்டிட்டு வரேன்னே....அவன் இவனை மாதிரி
                   இல்லைனே நல்லா பேசுவான்...என்ன “ச”னா வராது அதுக்கு பதில் “ரா”னா தான் வரும்.

ப.ரா:             இன்னொருத்தனா.................

Breaking News: பன்னீஸ் டீவியின் அவசர செய்தி. எங்கள் தொலைக்காட்சியின் ஓனர், முதலாளி பன்னிகுட்டி ராம்சாமியை காணவில்லை. சென்னை கீழ்பாக்கம் பக்கமோ, ஏர்வாடி பக்கமோ தென்பட்டால் தகவல் தெரிவிக்கவும்.....

டிவி பன்னி.... எங்க போனே நீ....








37 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி: இந்த பதிவில் வரும் அனைத்து கற்பனைகளும் எழுதியவரையே சாரும்.... ///////

எழுதுனவரா டைப் பண்ணவரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சத்தியமா எனக்கு இவ்வளோ காமெடி வராதுங்க. அட பதிவு எழுதவே வராதுங்க. ///////

ஏன் இந்த வெளம்பரம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எங்கேயோ எப்பவோ கேட்டதை வச்சிகொஞ்சம் உல்ட்டா பண்ணி எழுதின பதிவு இது.///////

அப்படின்னா தலைகீழா தொங்கிக்கிட்டே எழுதுனீங்களா?

இந்திரா said...

//அண்ணே நாளைக்கு வேற ஒருத்தனை கூட்டிட்டு வரேன்னே....//



அப்டினா இன்னொரு பதிவா????
ஐயயோ காப்பாத்துங்க...

இம்சைஅரசன் பாபு.. said...

நாம வாங்குற ஐஞ்சுக்கும் பத்துக்கும் ..இந்த விளம்பரம் தேவையா பன்னி ..அதிலேயும் டி வி கம்பெனி ஒனேர் ...

செல்வா said...

உண்மைலயே ரொம்ப ரொம்ப சிரிச்சேன்னா.. வாய்ப்பே இல்ல, ரொம்ப ரொம்ப கலக்கலா இருக்கு :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வங்கள் ததிவு பிக மறுமை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நம்ம பன்னிகுட்டி ராம்சாமி அவரோட பன்னீஸ் டிவிக்காக ஒரு வீ ஜே வை தேடிட்டு இருக்காரு. அவருக்காக நம்ம செல்வா, அவரை மாதிரியே ஒல்லியா இருக்கற ஒரு ஆளை இன்ட்ரவியூக்கு கூட்டி வராரு. ///////

நாங்க இப்ப ஜெண்ட்ஸ் வீஜே எடுக்கறது இல்லீங்கோ.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// இம்சைஅரசன் பாபு.. said...
நாம வாங்குற ஐஞ்சுக்கும் பத்துக்கும் ..இந்த விளம்பரம் தேவையா பன்னி ..அதிலேயும் டி வி கம்பெனி ஒனேர் ...//////

யோவ் இப்பத்தான் ஊருக்கூரு வெந்தது வேகாதது, துண்டுபீடி குடிச்சதுக எல்லாம் டீவி கம்பேனி வெச்சிருக்கானுகளே....? கலைஞர் டீவி வெலைக்கு வருதாம், வாங்கிப் போடுங்க மக்கா..... பின்னால உதவும்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வங்கள் ததிவு பிக மறுமை////

சேம் ப்ராப்ளம்..... இரு அந்த கம்பிய அடுப்புல வெச்சிட்டு வர்ரேன்.... அப்பல்லாம் சங்கம் வெச்சி தமிழ் வளர்த்தாங்க, நான் சூடு வெச்சி வளர்க்கிறேன்....

Chitra said...

:-)))

சௌந்தர் said...

செம காமெடியா இருந்துச்சு சூப்பர் னா.. !!! இதே மாதரி இன்னொன்னு எழுதுங்க..!!

இம்சைஅரசன் பாபு.. said...
This comment has been removed by the author.
பெசொவி said...

@ அருண்
// உனக்கேன் கொடுக்க தேண்டும் கிஸ்தி//
வ வராது என்றால், உ வும் வராமல்தான் போகும். எனவே, துனக்கேன் கொடுக்க தேண்டும் கிஸ்தி என்று சொல்வதுதான் சரி.

எதிலும் குற்றம் பார்ப்போர் சங்கம்

பெசொவி said...

அருண்,
துங்கள் சூரியனின் தலை தாசல் தலைப்பூ சுதையாக துள்ளது.
தாழ்த்துகள்!

இப்படிக்கு
தடிதேலு

Mohamed Faaique said...

கலக்கல்... அருமையான காமெடி

பெசொவி said...

//இம்சைஅரசன் பாபு.. said...
This post has been removed by the author.//

Best comment for best post!
:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

432q5q934tr kligfja kl/as jfidsfkjdsa;fkdaf
das
fdasfk ;adsf uq4r q0-43r[reopuwerq r]ewrq wre[wreqwer]\weqrqwerq435q345r$#%@$#%Q$#5,;l kretr qer

WOV MY KEYBOARD IS WORKING PROPERLY

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

////சத்தியமா எனக்கு இவ்வளோ காமெடி வராதுங்க. அட பதிவு எழுதவே வராதுங்க. ///////
அதான் தெரியுமே புதுசா எதாச்சம் சொல்லு.....

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////எங்கேயோ எப்பவோ கேட்டதை வச்சிகொஞ்சம் உல்ட்டா பண்ணி எழுதின பதிவு இது.///////

அப்படின்னா தலைகீழா தொங்கிக்கிட்டே எழுதுனீங்களா?
//

இது சூரியனின் வலை வாசலா? இல்ல, வவ்வாலா?

பெசொவி said...

@ Arun
//சத்தியமா எனக்கு இவ்வளோ காமெடி வராதுங்க. அட பதிவு எழுதவே வராதுங்க. //

இது என்னய்யா பெரிய விஷயம்? இன்னும் ரெண்டு போட்டோவ போட்டு நாலு வரியா குறிசுட்டா நீ வழக்கமா போடற போஸ்ட் மாதிரி ஆயிடாது?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமியை காப்பாத்துங்க....//

தக்காளி சாகட்டும் விடு மச்சி..

வைகை said...

//சத்தியமா எனக்கு இவ்வளோ காமெடி வராதுங்க. அட பதிவு எழுதவே வராதுங்க////

அப்பறம் எதுக்கு இந்த ப்ளாக்? எரிச்சிருவோமா?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


யோவ் இப்பத்தான் ஊருக்கூரு வெந்தது வேகாதது, துண்டுபீடி குடிச்சதுக எல்லாம் டீவி கம்பேனி வெச்சிருக்கானுகளே....? கலைஞர் டீவி வெலைக்கு வருதாம், வாங்கிப் போடுங்க மக்கா..... பின்னால உதவும்.....////


பின்னாடின்னா? ஆப்பு வாங்கிக்கவா?

வைகை said...

வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமியை காப்பாத்துங்க....//

தக்காளி சாகட்டும் விடு மச்சி.//

ஆமாப்பா..எனக்கும் போட்டிக்கு ஆள் குறையும் :))

எஸ்.கே said...

இந்த அளவுக்கு வாய்விட்டு சிரிச்சி ரொம்ப நாளாச்சு! நன்றி!

M.R said...

அருமையான நகைச்சுவை ,ரசித்தேன்

அருண் பிரசாத் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// /////டிஸ்கி: இந்த பதிவில் வரும் அனைத்து கற்பனைகளும் எழுதியவரையே சாரும்.... ///////

எழுதுனவரா டைப் பண்ணவரா?//
இல்லை டேப்ல சொன்னவரு

//ஏன் இந்த வெளம்பரம்?//
சட்ட பிரச்சனை வரக்கூடாதுனு தான்

//அப்படின்னா தலைகீழா தொங்கிக்கிட்டே எழுதுனீங்களா?//
இல்ல, மானிட்டர தலைகீழ வெச்சி எழுதினது

அருண் பிரசாத் said...

@ இந்திரா
//அப்டினா இன்னொரு பதிவா????
ஐயயோ காப்பாத்துங்க...//
அப்புறம் நான் அடுத்த பதிவுக்கு என்ன செய்யறது?

@ கோமாளி செல்வா
// உண்மைலயே ரொம்ப ரொம்ப சிரிச்சேன்னா.. வாய்ப்பே இல்ல, ரொம்ப ரொம்ப கலக்கலா இருக்கு :)//
அப்போ இவளோ நாள் பன்னிகுட்டி பிளாக்ல சிரிச்சது எல்லாம் நடிப்பா.... பன்னியாரே என்னனு கேளுங்க

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// வங்கள் ததிவு பிக மறுமை//
தன்றி

Anonymous said...

யோவ் ராமசாமிய கண்ணாடிய கழட்ட சொல்லுயா ..,

Anonymous said...

என்றா இது ..,ஒரே தப்பும் தவரும்மா பதிது போட்டு இருக்கே

அருண் பிரசாத் said...

@ பன்னிகுட்டி
//நாங்க இப்ப ஜெண்ட்ஸ் வீஜே எடுக்கறது இல்லீங்கோ.....//
அப்போ நம்ம ரமேசை எடுத்துக்கோங்கோ

@ Chitra.
// :-)))//
:))))))))))

@ சௌந்தர்
// செம காமெடியா இருந்துச்சு சூப்பர் னா.. !!! இதே மாதரி இன்னொன்னு எழுதுங்க..!!//
இன்னொன்னா? ஏது என்னை கொலை கேசுல மாட்டிவிடாம விடமாட்ட போல

@ பெசொவி
// அருண்,
துங்கள் சூரியனின் தலை தாசல் தலைப்பூ சுதையாக துள்ளது.
தாழ்த்துகள்!

இப்படிக்கு
தடிதேலு//
தன்றி தெ சொ தி

அருண் பிரசாத் said...

@ Mohamed Faaique
// கலக்கல்... அருமையான காமெடி//
நன்றி பா

@ மணி (ஆயிரத்தில் ஒருவன்)
// ////சத்தியமா எனக்கு இவ்வளோ காமெடி வராதுங்க. அட பதிவு எழுதவே வராதுங்க. ///////
அதான் தெரியுமே புதுசா எதாச்சம் சொல்லு....//
சத்தியமா நான் ரொம்ப நல்லவன்.... இது ஓகேவா மணி சார்

அருண் பிரசாத் said...

@ வெறும்பய
// பன்னிக்குட்டி ராம்சாமியை காப்பாத்துங்க....//

தக்காளி சாகட்டும் விடு மச்சி..//
நான் தனியா செய்தா கொலை மச்சி.... நாம எல்லாரும் சேர்ந்து செஞ்சா அதுக்கு பேரு கலவரம்....

@ வைகை

// வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமியை காப்பாத்துங்க....//

தக்காளி சாகட்டும் விடு மச்சி.//

ஆமாப்பா..எனக்கும் போட்டிக்கு ஆள் குறையும் :))//
ஒரு ஆள் குறைஞ்சா.... உனக்கு போட்டியா ஒரு பெரிய லைனே இருக்கு மச்சி

அருண் பிரசாத் said...

@ எஸ் கே, எம் ஆர்
நன்றி

@ பனங்காட்டு நரி

// என்றா இது ..,ஒரே தப்பும் தவரும்மா பதிது போட்டு இருக்கே//
ஆமாம் தனங்தாட்டு தரி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிரிச்சேன்...

சாதாரணமானவள் said...

காமெடி வராதுன்னு சொல்லி இப்படி ஒரு பதிவு போட்டு இருக்கீங்களே... பதிவு சூப்பர்